December 2018

தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றம்!

அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுவதோடு, ஒற்றையாட்சியும் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீ்ண்டும் உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார்.

சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களான கண்டி அஸ்கிரி மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேரில் சந்தித்து இந்த உத்தரவாதங்களை தெரியப்படுத்தியுள்ள சிறிலங்கா பிரதமர், இவற்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் டிசெம்பர் 16 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, டிசெம்பர் 28 ஆம் திகதியான இன்றைய தினம் சிங்கள பௌத்த மக்களின் புனிதத் தளமான கண்டி சிறி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான நியம் பீடத்தின் அஸ்கிரி பிரிவிற்கு சென்ற சிறிலங்கா பிரதமர், வரக்காகொட சிறி ஞானரத்ன மகாநாயக்கரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

பிரதமர் ரணிலுடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.இதனையடுத்து மல்வது பீட மகாநாயக்க தேரர் திப்படுவாவே சிறி சுமங்கல தேரரை சந்தித்த சிறிலங்கா பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் மூத்த அமைச்சர்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இந்த சந்திப்புக்களின் இறுதியில், இன்றைய தினம் மகாநாயக்கத் தேரர்களை அவசரமாக சந்தித்ததற்கான காரணத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார்.

தலதா மாளிகைக்கு சென்று தலதா பெருமானை வணங்கி ஆசீரிவாதம்பெற்றுக்கொண்ட நிலையில் அஸ்கிரி, மல்லவது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களையும் சந்தித்திருந்தேன். நாட்டின் அரசியல் சாசனத்தையும், மக்களின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக மகாநாயக்கத் தேரர்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டேன்.

நிலையான அரசாங்கமொன்றை கட்டியெழப்புவதற்கு அரச கட்டமைப்புக்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். அதேபோல் எமது செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வோம் என்பதையும் மகாநாயக்கத் தேரர்கள் இருவருக்கும் தெரியப்படுத்தினேன். கிராமங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அபிவிருத்தியின் பயனை பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக்க விழ்ப்பை அடுத்து முடங்கிப்போயுள்ள புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்திய சிறிலங்கா பிரதமர் ரணில், இதன்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையும், ஒற்றையாட்சி முறைமையும் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விடையங்களில் தனது இந்த உறுதியான நிலைப்பாட்டை மகாநாயக்கத் தேரர்கள் இருவருக்கும் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் ரணில் கூறியதுடன், இதற்கு தமிழ் தேசியக் கூடடமைப்பு உள்ளிட்ட அனைத:து எதிர்கட்சிகளும் ஏற்கனவே முழுமையான இணக்கப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் சானத்தை மறுசீரமைக்கும் போதும், அதேவேளை புதிய திருத்தங்களை மேற்கொள்ளும் போதும் தற்போது நடைமுறையிலுள்ள எமது அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பிரிவான பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள சரத்தில் ஒரு எழுத்தையேனும் மாற்றுவதில்லை என்று நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் நாம் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அதேபோல் நாம் ஒற்றையாட்சியை பாதுகாப்போம். ஒற்றையாட்சி முறைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். இந்த இரண்டு விடையங்களையும் மகாநாயக்கத் தேரர்களுக்கு அறிவித்தேன்”.

சில நாட்களுக்கு முன்னர் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிராக கடு் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கும் அறிவுறுத்தினோம். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய கடும்போக்காளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். இதனிடையே இந்து கோவிலொன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக முழமையான சடட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம். இதன்போது எந்தவொரு சலுகையும் வழங்கக் கூடாது என்றும் பொலிசாரை அறிவுறுத்தியுள்ளோம். அதேவேளை சேதமாக்கப்பட்ட கோவிலுக்கும், புத்தர் சிலைகளையும் புனரமைப்பதற்காக அரசாங்கம் நிதி உதவி வழங்கும்”.

இந்த சந்திப்புக்களின் இறுதியில் கண்டி மல்வது மகா விகாரையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளிலும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

100 கோடி கேட்ட ரஜனி ?

ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் “சிவாஜி” படத்தில் நடித்த ரஜினி, அந்த படத்தில் வசூலை கணக்கில் வைத்து தனக்கான சம்பளத்தை கேட்டு வாங்கி வந்தார். படத்தயாரிப்பில் நஷ்டமானதால் வேறு வழியே இல்லாமல், தாணு தயாரிப்பில் ஒரு படம் நடித்தார். ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை வாங்கினார் என்பது பலருக்கு தெரியாது. விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் “கபாலி” வசூலில் சக்கைப்போடு போட்டது. ஆனாலும், தாணு போட்ட காசுக்கு வட்டி கூட தேறல என கையை பிசைந்து நின்றார். காரணம் இவர் ரஜனிக்கு கொடுத்த சம்பளம் தான் !

கபாலி வசூலை, மனதில் வைத்து வெறும் 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0 படத்திற்கு 65 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வர இருக்கும் “பேட்ட “படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார். பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது. சர்கார் கதையை திருடிய பஞ்சாயத்தால், முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பவில்லை என்று தகவல் கசிந்தது. அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைகா தயாரிக்க விரும்புவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர்.

அப்படியென்றால் ரஜினி – முருகதாஸ் கூட்டணியில் தயாராகவுள்ள படத்தை தயாரிக்க போவது யார் என்பதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 100 கோடி ரூபாய். சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு அவர் கேட்கும் 100 கோடி ரூபாய் சம்பளம் தான் காரணம் என்கின்றனர். ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு உள்ள வியாபாரம் மற்றும், வசூல் கணக்குகளுக்கு எதிரானது. தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும் குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் இருப்பதை ரஜினி நடிப்பில் வெளியான ,கபாலி, காலா, 2.0 பட வசூலை விவரம் அம்பலமாகியது.

இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 100 கோடி, பிற நடிகர்கள் சம்பளம் தயாரிப்பு செலவு என 200 கோடி என கொடுத்துவிட்டு எந்தப் பணத்தில் படத்தை எடுப்பது? சரி மொத்தமாக 300 கோடி போட்டு எடுத்தாலும் , படத்தை ரிலீஸ் பண்ணி அசலை எடுப்பதற்க்கே நாக்கு தள்ளும். அப்புறம் லாபம் எங்கிருந்து வரும்?! இப்போதைக்கு படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்பதால், தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாஸிடம் ஒப்படைத்துவிட்டு, அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கப் போகிறாராம் ரஜினி.

சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (சனிக்கிழமை) 9.30 மணியளவில் தாக்கிய இந்த சுனாமியினால், பெருமளவு மக்கள் காணாமற்போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்புகள், கட்டடங்கள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளதோடு, பெருமளவு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கு அமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நில அதிர்வு காரணமல்ல என்றும், அனக் கரக்காட்டோ எனும் எரிமலை வெடிப்பின் விளைவாக இருக்கலாம் என்றும் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் தவிக்கும் பாகிஸ்தானின் கிறிஸ்துவ அகதிகள்

தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பல கிறிஸ்துவ அகதிகள் குடிவரவுத் துறை சோதனைகளுக்கு அஞ்சி மறைந்து வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

2016ல் வெளியான World Watch Monitor என்ற அமைப்பின் கணக்கின் அடிப்படையில், 11,500 பாகிஸ்தானியர்கள் தாய்லாந்தில் தஞ்சம் கோரி இருக்கின்றனர். அதோடு, இன்றைய சூழலில் 2,000 பாகிஸ்தானியர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மோசமான சூழ்நிலையில் அடைந்து கிடக்கின்றனர்.

“அகதிகளை பாதுகாக்கும் ஐ.நா. அகதிகள் சாசனத்தில் தாய்லாந்து கையெழுத்திடவில்லை என்பதை அறியாமல் பாகிஸ்தான் அகதிகள் இங்கு வந்திருக்கின்றனர்” என்கிறார் பாங்காக்கில் செயல்படும் பாதிரியார் மைக்கேல் கெல்லி.

கடந்த அக்டோபர் மாதம் சட்டவிரோத குடியேறிகளை குறிவைத்து தாய்லாந்து அதிகாரிகள் நடத்திய தேடுதலில், 200 பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீண்டும் பாகிஸ்தானுக்கே நாடுகடத்தப்படக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதமாக உள்ள கிறிஸ்துவர்கள், இஸ்லாமிய மத வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்ந்து வருகின்றது. கடந்த காலங்களில், கிறிஸ்துவ மக்களை குறிவைத்து பல குண்டுவெடிப்பு சம்பவங்களும் பாகிஸ்தானின் நிகழ்ந்துள்ளன.

தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளம்: – சந்தைக்கு வந்த புதிய ஆப்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன.
அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் (Pixalive) இருக்கிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் முயற்சியில் பிக்சாலைவ் சமூக வலைத்தளம் உருவாகி இருக்கிறது.

பிக்சாலைவ் சமூக வலைத்தளம் இந்தியாவில் உருவாகி இருக்கும் அழகிய, வண்ணமயமான மற்றும் புதுவித அம்சங்கள் நிறைந்த சேவையாக இருக்கிறது. டெக்ஸ்ட், ஆடியோ, புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் டிரெண்டிங் நாடு, மக்கள், புகைப்படம், வீடியோ, வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

உலகில் வாய்ஸ் நோட் பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. வழக்கமான சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றுடன் டெக்ஸ்ட் பதிவிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பிக்சாலைவ் செயலியில் புகைப்படம், வீடியோவுடன் வாய்ஸ் நோட் சேர்க்கலாம்.

பிக்சாலைவ் செயலியில் பயனர் பதிவிடும் போஸ்ட்கள் அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும். செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் மூலம் போஸ்ட்கள் பயனர் விரும்பும் வரை செயலியில் இருக்கச் செய்யலாம். தற்சமயம் சில புது வசதிகளை வழங்கும் பிக்சாலைவ் செயலியில் விரைவில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகிறது.

பிக்சாலைவ் வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் டீசர் மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என பிக்சாலைவ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்தார். பிக்சாலைவ் செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில் விரைவில் ஐ.ஓ.எஸ். மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

பிரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு

நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி எலிசே மாளிகையில் இருந்து உரையாற்றியமை தொலைக்காட்சிகளில் ஒனிபரப்பானது.

இதன்போது பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மஞ்சள் ஆடைப் போராட்டங்களினதும் மக்களினதும் கோரிக்கைகளிற்கான பதில்களை தெளிவாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் ஆடைப் போராளிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக SMIC அதிகரிப்பு இருந்தது. இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், 2019 ஆண்டு ஜனவரியிலிருந்து, SMIC (அடிப்படைச் சம்பளம்) சம்பளமானது 100 யூரோவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளார். இந்த 100€ அதிகரிப்பிற்கு முதலாளிகள் அரசிற்கு எந்தவிதமான வரிகளையும் (charges patronales) கட்ட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட வேலை நேரத்திற்கு அதிகமாக செய்யப்படும் மேலதிக மணித்தியாலங்களிற்கு (heures supplémentaires) வருமான வரியும் அரசிற்கான கழிவுகளும் (charges) 2019 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகை ஆண்ட தமிழர்கள்

2000 ஆண்டுகளுக்கு முன் உலகை ஆண்ட தமிழர்கள் .இப்போது வீழ்ச்சி அடைந்தது ஏன்?

SHOCKING : ராமர் பிள்ளை வெளியிட்ட மரண வாக்குமூலம் | Herbal Petrol

மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் ஓலைச்சுவடிகள்

 ஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் மிகவும்  பழங்கால ஓலைச்சுவடிகள் அறிவியல் பொக்கிஷங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இப்படியாக மேலைநாட்டவர்கள் தமிழ் அறிவியல் மருத்துவம் விண்வெளி போன்றவற்றை திருடி என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் அதை பற்றி அறியாமல்  அவனுக்கு அடிமையாக வாழ்கிறோம்.இலங்கை இனப்படுகொலைக்கு தொடங்குவதற்கான ஆலோசனை ஜெர்மனியிலிருந்து மேலைநாடுகள் தொடங்கியதாக மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கூறியதை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்

திராவிடத்தால் அழிந்தோம் ?தேயும் தமிழும் தமிழர்களும் - தங்கர்பச்சான்

பிறமொழியாளர்கள் தமிழ் தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை அழித்ததனால் வந்த வினை

20 நிமிடங்களிலேயே புகைபிடித்தலை கைவிட்டால் மாற்றம் உண்டா?

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். நாடித்துடிப்பும் சீராகும்.



* புகைப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சீரற்ற நிலை உருவாகும். அந்த பழக்கத்தை முழுமையாக கைவிடும் பட்சத்தில் 8 மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ரத்தத்தில் இருக்கும் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு அளவும் குறைய தொடங்கிவிடும்.


* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபட்ட 48 மணி நேரத்திற்குள் உடலில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிவிடும். நுரையீரல் சீராக செயல்பட தொடங்கி சளித்தொல்லை குறையும். சாப்பிடும் உணவின் சுவையிலும், வாசனையிலும் மாற்றத்தை உணரலாம்.



* 72 மணி நேரத்திற்கு பிறகு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அதற்கான சிகிச்சைகளை தொடரும்போது படிப்படியாக சுவாச பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.



* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் ஒட்டுமொத்தமாக ரத்த ஓட்டம் சீராகும்.



* மூன்று முதல் ஒன்பது மாதங்களில் நுரையீரலின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்.



* ஓராண்டு கழித்து புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

அது நாடார்களின் கட்சி.. நாம் தமிழரை விளாசும் மதிமுகவினர்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி புலம் பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பறிக்கும் பிழைப்புவாத கும்பல் நாம் தமிழர் கட்சி என மதிமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மீண்டும் உருவெடுத்துள்ளது நாம் தமிழர், மதிமுக மோதல்.

புலிகளின் பெயரைச் சொல்லி வைகோ எவரிடத்திலேனும் 1 ரூபாய் பணம் பெற்றிருப்பாரா? ஆனால் அத்தகைய இழிசெயலை செய்துவரும் நாம் தமிழர் கட்சியினர் ஈழத்திற்காகவும், எழுவர் விடுதலைக்காகவும் இங்கு செய்தது என்ன? ஆனால், தனது சொந்த பணம் 75 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரின் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தியவர் எங்கள் வைகோ என மதிமுகவினர் காட்டமான விமர்சனங்களை சீமானுக்கு எதிராக முன் வைத்துவருகின்றனர்.

அதே சமயம், வைகோ தெலுங்கர் என நாம் தமிழர் கட்சியினர் வசைபாட, அதற்கு பதிலளிக்கும் மதிமுகவினர் புலிகளின் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டவர் வைகோ. தமிழக வாழ்வுரிமை களங்களில் உறுதியாக நிற்பவர்.

ஆனால், பாடப்புத்தகத்தில் தனது சமூகமான நாடார்களைப்பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி குற்ற பின்புலம் உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்து போராடுபவர்கள் அல்ல நாங்கள் என நாம் தமிழர் கட்சியை காட்டமாக விமர்சித்துவருகின்றனர் மதிமுகவினர்.

நடிகர் ராதா ரவி பற்றிய உண்மையை ஆதாரத்துடன் வெளியிட்ட பாடகி சின்மயி! பாலியல் சர்ச்சையில் அடுத்த அதிரடி

பின்னணி பாடகி சின்மயி சமீபகாலமாக Me Too ல் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பு, தொலைக்காட்சி விவாதத்திலும் கலந்து கொண்டார்.

இதன் பின் சில நாட்களில் அவர் டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டார். இது சின்மயிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சந்தா பணம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த டப்பிங் சங்கத்தில் தலைவராக இருக்கும் ராதா ரவி சின்மயி பற்றி விமர்சனங்களை எடுத்து வைத்தார். இந்நிலையில் அவருக்கு டத்தோ பட்டம் பற்றி உண்மையை வெளியிட்டுள்ளார்.

இதில் ராதா ரவிக்கு வழங்கப்பட்டம் பொய்யானது. மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை கொண்டு அவர் ராதா ரவிக்கு அந்த அரசு அப்பட்டத்தை வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.


Chinmayi Sripaada

@Chinmayi
 · Nov 29, 2018
Replying to @Chinmayi
Turns out his name is not the Govt records where other awardees that we would know of are Jackie Chan and Mr Shah Rukh Khan.http://www.istiadat.gov.my/index.php/component/semakanlantikanskp/ …
Enter their names in the field and you’ll find the year they have been awarded. There are corresponding news reports as well.


Chinmayi Sripaada

@Chinmayi
However, my dear jimblippippiees on Instagram did some more sleuthing and I eventually wrote to the Chief Secretary Public Affairs of the Chief Minister of Melaka, from where Mr. Radha Ravi claims to have been awarded the title and I got this response. pic.twitter.com/jZqzjOYLw2

ஓடும்பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த நபர் - அதிரவைத்த புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் #Metoo மூலமாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை கேளம்பாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூருக்கு செல்லும் பேருந்தில் நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை வெறித்துபடி இருந்தது மட்டுமல்லாமல் பொதுவெளியில் சுய இன்பம் அனுபவித்துள்ளார்.

கோபமான அங்கிருந்த பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதை சின்மயி இந்த பகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் நோர்வேயில் உயிருடன்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

ரிவிர என்ற சிங்கள வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச் செய்துள்ளதுடன் தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடானது, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கினாலும் ஆச்சரியமில்லை என குறிப்பிட்டுள்ள கருணா இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்