<title>எழுவர் விடுதலை | முனைங்
Showing posts with label எழுவர் விடுதலை. Show all posts

அது நாடார்களின் கட்சி.. நாம் தமிழரை விளாசும் மதிமுகவினர்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி புலம் பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பறிக்கும் பிழைப்புவாத கும்பல் நாம் தமிழர் கட்சி என மதிமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மீண்டும் உருவெடுத்துள்ளது நாம் தமிழர், மதிமுக மோதல்.

புலிகளின் பெயரைச் சொல்லி வைகோ எவரிடத்திலேனும் 1 ரூபாய் பணம் பெற்றிருப்பாரா? ஆனால் அத்தகைய இழிசெயலை செய்துவரும் நாம் தமிழர் கட்சியினர் ஈழத்திற்காகவும், எழுவர் விடுதலைக்காகவும் இங்கு செய்தது என்ன? ஆனால், தனது சொந்த பணம் 75 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரின் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தியவர் எங்கள் வைகோ என மதிமுகவினர் காட்டமான விமர்சனங்களை சீமானுக்கு எதிராக முன் வைத்துவருகின்றனர்.

அதே சமயம், வைகோ தெலுங்கர் என நாம் தமிழர் கட்சியினர் வசைபாட, அதற்கு பதிலளிக்கும் மதிமுகவினர் புலிகளின் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டவர் வைகோ. தமிழக வாழ்வுரிமை களங்களில் உறுதியாக நிற்பவர்.

ஆனால், பாடப்புத்தகத்தில் தனது சமூகமான நாடார்களைப்பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி குற்ற பின்புலம் உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்து போராடுபவர்கள் அல்ல நாங்கள் என நாம் தமிழர் கட்சியை காட்டமாக விமர்சித்துவருகின்றனர் மதிமுகவினர்.