<title>news | முனைங்
Showing posts with label news. Show all posts

ஊனம் என்பது உடம்பில் அல்ல §§§§§§§§§§§

எமக்கு கைகள் இருந்தும் எமது வேலைகளை செய்வதற்கு நாம் இன்னும் ஒருவரை நாடிச்செல்லவேண்டிய நிலையில் இன்றைய மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. எம் வேலைகள் அனைத்தும் அடுத்தவரிலயே
தங்கியிருக்கின்ற இந்நிலையில் எம்மை எல்லாம் வியப்புக்குள்ளாக்குகின்றது


இரு கைகளும் அற்ற இந்த சீனப்பெண்ணின் செயற்பாடுகள். இந்த வீடியோ ஊனம் என்பது உடம்பில் அல்ல அது ஒரு சாதாரண விடயமே என்ற நம்பிக்கைகைய ஊட்டி பார்ப்பவர்களை வியப்புக்குள்ளாக்கும் பெண்மணியை நீங்களும் பாருங்கள். சோம்பறித்தனமாக அடுத்தவர்களை நம்பி வாழும் எம்மவர்களுக்கு நிச்சயம் இது ஓர் எடுத்துக்காட்டு..!

ஊனம் என்பது உடம்பில் அல்ல §§§§§§§§§§§

எமக்கு கைகள் இருந்தும் எமது வேலைகளை செய்வதற்கு நாம் இன்னும் ஒருவரை நாடிச்செல்லவேண்டிய நிலையில் இன்றைய மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. எம் வேலைகள் அனைத்தும் அடுத்தவரிலயே

ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சி !!!!!!


பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சியில் இஸ்ரேலிய நிறுவனமொன்றுடன் கைகோர்த்துள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புகளை பதிவு செய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நோக்கமாகும்.
ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில்நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்ட கால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார்.
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வேண்டுமென்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆயினும் அதன் பின் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தாபய ராஜபக்ஷ பிரஸ்தாப விடயத்துக்காக இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளார். அவர்கள் பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் அதனை மேற்கொள்ள இணங்கியுள்ளனர்.
ஆனாலும் வொயிப் தொழில்நுட்பத்தின் அடிநுனி தெரியாத பாதுகாப்புச் செயலாளர் பெருமளவு பணத்தை அநியாயமாக வாரியிறைக்கப் போவதாகவே தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் இதுவரை ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கான வசதியை தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் கண்டுபிடிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்வின்

ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சி !!!!!!


பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சியில் இஸ்ரேலிய நிறுவனமொன்றுடன் கைகோர்த்துள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புகளை பதிவு செய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நோக்கமாகும்.
ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில்நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்ட கால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார்.
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வேண்டுமென்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆயினும் அதன் பின் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தாபய ராஜபக்ஷ பிரஸ்தாப விடயத்துக்காக இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளார். அவர்கள் பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் அதனை மேற்கொள்ள இணங்கியுள்ளனர்.
ஆனாலும் வொயிப் தொழில்நுட்பத்தின் அடிநுனி தெரியாத பாதுகாப்புச் செயலாளர் பெருமளவு பணத்தை அநியாயமாக வாரியிறைக்கப் போவதாகவே தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் இதுவரை ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கான வசதியை தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் கண்டுபிடிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்வின்