February 2012

தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ?

இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது.  காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம்  காரணமாக  இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை  கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் போல செய்ய  போகிறதுமில்லை  அப்படியே நிறைவேற்றினாலும் இலங்கை
அரசை மிரட்டி தங்களது  சொந்த  நலனைப்  பெற்று  கொள்வதற்காகதான். அதனால்தான் தமிழர் கடந்த காலத்தைப் போல் நம்பி ஏமாறாமல் ஒற்றுமையுடனும் மிகுந்த  விழிப்புடனும்  போராட்டத்தை  முன்னெடுத்து வருகின்றனர் 

அதன்  அழுத்தமே  ஐக்கிய  நாட்டு  சபையை இப்படி பேச வைக்கிறது. இதில் இந்திய அரசின் பங்கை தமிழர் எதிர் பார்க்கவில்லை அவர்கள் வழமை  போலவே கழுத்தறுத்து விடுவர். சிலவேளை இலங்கை அரசை எதிர்த்து வாக்களிகலாம் அது சர்வதேசத்தில் தமிழர்களின் போராட்டத்தினால் அன்றி வேறு இல்லை. இந்திய மத்திய  அரசானது தாங்கள்தான்  தமிழரின் பாதுகாவலர் போல பிரச்சாரம் செய்யலாம். ஆனால் தமிழர்கள் எளிதில் பழைய அனுபவத்தை மறக்கமாட்டார்கள், ஏமாறவும்  மாட்டார்கள்,  தமிழ் ஈழம் கிடைக்க  என்னதான் வழி ?
நான் அண்மையில் வாசித்த குறிப்பு என்னை சிந்திக்க வைத்தது எனது சிந்தனையில் பட்டத்தை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன் இது  நிறைவேறுமா  எனக்  கேட்டால்  எனக்குத்  தெரியாது   ஆனாலும்  இந்த வழியிலும் முயற்சிப்பது நல்லது  என நினைக்கிறேன்
இந்த நூ
ற்றாண்டின் சித்ர் என  அழைக்கப்படும்யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அருளிய  தத்துவக்  குறிப்பு; 


''நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல் கட்டிலோ போதிய வலிவு இல்லாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ, சோர்வுறவோ வேண்டாம்.

        உங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோ வலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றலிலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள் உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும்.

        உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் "வாழ்க வையகம்" என்ற மந்திரத்தைப் பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைந்து ஒலித்துக் கொண்டிருங்கள்.

        அன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ, ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ, பலரையோ உலக நலத் தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கியுள்ளது.''
இந்த  தத்துவ குறிப்பின்படி உடல் கட்டிலோ  வலுவிலோ  அல்ல  சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலிபதில்  வெற்றி தங்கியுள்ளது ஒருவேளை நீங்கள் இந்த  கலையை கற்றிருந்தால் உங்களது  தியான  வேளையில் தமிழ் ஈழம் விரைவில் கிடைக்கவேண்டும் வாழ்கவளமுடன் என மூன்று தடவை சொல்லவும் . எனவே தாமதிக்காது இன்றே தொடங்குங்கள் .


தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ?

இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது.  காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம்  காரணமாக  இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை  கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் போல செய்ய  போகிறதுமில்லை  அப்படியே நிறைவேற்றினாலும் இலங்கை

ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி 
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! 
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள் 

 நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம்  உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம்  பெயர்த்திடுவோம் 
ஒற்றுமையை  வளர்த்து  இலக்கை வென்றிடுவோம்.

ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி 
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! 
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள் 

 நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம்  உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம்  பெயர்த்திடுவோம் 
ஒற்றுமையை  வளர்த்து  இலக்கை வென்றிடுவோம்.

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

 

இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?



இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக  தாக்கி கொண்டு செல்லும்  போது,  புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை  உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும்   அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும்  இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே  செய்ய    துணியாத ஒரு   கிழ்த்தரமான   இன அழிப்பை   தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாவர்களை  ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள்  உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர்  குற்ற  வழக்கை  இலங்கைக்கு  உள்ளே  நடத்தும்  படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது. 


புலிகளை  ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று  சேர்ந்து  சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும்,  இலங்கை அரசை  எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது .
நல்ல உதாரணம் : கொலைர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை ம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள்  களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும்  வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின்  கைகளில் தங்கியுள்ளது. 
                          ஹ ஹ யார் அந்த சிங்க சொங்?
                    படத்தை  பாருங்கள்  பதில்  புரியும்

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

 

இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?

அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா 
உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்  
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை 
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது 
என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது 
எங்கும் இருப்பவர் நீரே

என் குறைகளைத் தீர்ப்பவர் நீரே 
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே 
அன்பாய்  என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே 
அவனியில் உம் அன்புக்கு  நிகர் யாரு?

எண்ணத்தின் வலிமை

தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அவர்கள் அருளியது

எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்”. 
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். 
தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது. 
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 
இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். 

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. 
நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன. 

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும். 
எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது? 

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 
இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எண்ணத்தின் வலிமை

தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அவர்கள் அருளியது

எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்”. 
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். 
தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது. 
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 
இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். 

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. 
நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன. 

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும். 
எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது? 

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 
இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி