August 2015

இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம்

இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை, மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில் அமெரிக்கா சென்று குடியேறிய இவர், தற்போது சென்னை வந்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“நான் இங்கே அழுத்தமாகக் கூற விரும்புவது நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடைக்க வேண்டும். நம்மால் முடியாது என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். நம் மீது சில கற்பிதங்களையும், நம்பிக்கைகளையும் மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேயர் வேண்டுமென்றே உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை நாம் உடைக்க வேண்டும்.
நான் 1978ல் ​​இமெயிலைக் கண்டு பிடித்தது ஒரு இந்தியனாக ​​கண்டு பிடித்தேன். ​​ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ​ ஒரு தமிழனாக இமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் ​அப்போது இதை பிரபலம் ​பண்ணும் அளவிற்கு என்னிடம் வழக்கறிஞரோ அல்லது உடனிருந்து வழி நடத்துவதற்கான நபரோ இல்லை.
பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஆனால் இப்போது உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது. ஒரு 14 வயது இந்தியப் பையன், தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது, முதலில் கரண்டி பொருட்களைக் கொண்டு சென்றார்கள். அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம்.​ ​அவ்வளவுதான். ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்,​​ வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள். நம்மை அந்தப் பட்டியலில் ​​சேர்க்கவே மாட்டார்கள்​.​
சேர்க்க​விடவே மாட்டார்கள்​. எனக்கும் அது நடந்தது. அவர்களில் ஒருவன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விளையாட்டுகளைச் செய்தார்கள். ​​ ​​வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள்​ என்ற நம்பிக்கையை நம்மிடம் விதைத்தது அவர்களின் வெற்றி, அவர்களின் தந்திரம், நாம் இதை உடைத்து வெளிவராமல் நம்மால் எதையும் நாம் தான் ​கண்டு பிடி​த்தேன் என்று சொல்ல முடியாது.​ ​
எனக்கான ஆதாரங்கள் என் அம்மாவிடமிருந்து கிடைத்தபோது நான் கண்டுபிடித்ததை நிரூபித்தேன். நான் வெள்ளைக்காரனுக்கு நிரூபிக்கவில்லை. இந்தியனுக்கான அடையாளத்தை நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம், இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு பதினான்கு வயதுச் சிறுவன், அதுவும் கருப்புத்தோல் கொண்ட தமிழன், இந்தியன் என்று! இந்த​ ​வெள்ளை​த்​ தோல்​ ​கொண்டவந்தான் கண்டுபிடிப்பான் என்ற ​மூளைச் சலவையிலிருந்து ​இந்திய மக்கள் முதலில் வெளியே வர வேண்டும்.
ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வந்து நம்மைக் கேள்வி கேட்டது. அப்போது சொர்க்கத்தில்​ ஏற்ற தாழ்வு உண்டா? என்ற கேள்விக்கு ஏற்ற தாழ்வு இல்லை என்றனர். அப்படியானால், பூமியில் மட்டும் ஏன் ஏற்ற தாழ்வு என்று ஆன்மீகப் பெரியவர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.​ நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான்​. சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து நம்மை பிரித்தாண்டது அவன்தான்​. எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள், வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில், 15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும் ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள்.​ நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது? 5000 ஆண்டுகளுக்குமுன் பலவற்றைக் கண்டுபிடித்த நம்மால் ஏன் இப்போது முடியவில்லை.
ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர், பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர், கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு. நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும், படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம்​.​ கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதில் முடித்தேன்.​ அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.
அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன்​​.​ ​ நியூ​யார்க் என்கிற ஊரில் 3 மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது 14 வயதுதான். வேலை பார்த்தவர்கள் 30 வயது 40 வயது கொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும் கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதி பார்த்து கொடுத்தது. அப்போதே 14, 15 செமினார் கூட நடத்தினேன்.
எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும், சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை​ ​இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.​ ​அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் இமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் இமெயில்​ ​கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு.
இதுமாதிரி புதுமாதிரியான கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது, தகுதியுள்ளது என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக ‘ரேட்டியான்’ என்கிற கும்பல் மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். இமெயில் என்றால் அது ‘சிவா அய்யாதுரைதான்’ என்று வெற்றி பெற்றேன். அதுவரை ‘இமெயில்’ என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக் ஷனரியிலும் வந்தது.
இசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல் அங்கு வந்தது. இப்போது தினமும் இமெயில் போக்குவரத்துகள் 20 ஆயிரம் கோடி முறை நடக்கின்றன. 4.2 பில்லியன் இமெயில் முகவரிகள் உள்ளன. இது ஒரு இந்தியனின் தமிழனின் கண்டுபிடிப்பின், பங்களிப்பின் விளைவு அல்லவா?
1993ல் அதிபர் கிளிண்டன் கூட இமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார். எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும், ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.
நம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான். ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்னை என்று கண்டுபிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது.
மேலை நாட்டு வைத்தியமுறையிலோ உடம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம் மருந்துகள், ஆயிரம் டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு எதையும்
வியாபாரமாகப் பார்ப்பார்கள்
‘சைட்டோ சால்வ்’ என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம். நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது. நம் வீட்டு கறி மசாலாவில் மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம்.
சித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் மென்பொருள் செய்து வருகிறேன் .சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை. இறுதியாகச் சொல்வது இதுதான்.. அமெரிக்காவில் அவர்களால் முடியும் என்றால், இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம்” என்றார்.

இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம்

இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை, மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில் அமெரிக்கா சென்று குடியேறிய இவர், தற்போது சென்னை வந்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“நான் இங்கே அழுத்தமாகக் கூற விரும்புவது நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடைக்க வேண்டும். நம்மால் முடியாது என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். நம் மீது சில கற்பிதங்களையும், நம்பிக்கைகளையும் மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேயர் வேண்டுமென்றே உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை நாம் உடைக்க வேண்டும்.
நான் 1978ல் ​​இமெயிலைக் கண்டு பிடித்தது ஒரு இந்தியனாக ​​கண்டு பிடித்தேன். ​​ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ​ ஒரு தமிழனாக இமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் ​அப்போது இதை பிரபலம் ​பண்ணும் அளவிற்கு என்னிடம் வழக்கறிஞரோ அல்லது உடனிருந்து வழி நடத்துவதற்கான நபரோ இல்லை.
பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஆனால் இப்போது உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது. ஒரு 14 வயது இந்தியப் பையன், தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது, முதலில் கரண்டி பொருட்களைக் கொண்டு சென்றார்கள். அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம்.​ ​அவ்வளவுதான். ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்,​​ வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள். நம்மை அந்தப் பட்டியலில் ​​சேர்க்கவே மாட்டார்கள்​.​
சேர்க்க​விடவே மாட்டார்கள்​. எனக்கும் அது நடந்தது. அவர்களில் ஒருவன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விளையாட்டுகளைச் செய்தார்கள். ​​ ​​வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள்​ என்ற நம்பிக்கையை நம்மிடம் விதைத்தது அவர்களின் வெற்றி, அவர்களின் தந்திரம், நாம் இதை உடைத்து வெளிவராமல் நம்மால் எதையும் நாம் தான் ​கண்டு பிடி​த்தேன் என்று சொல்ல முடியாது.​ ​
எனக்கான ஆதாரங்கள் என் அம்மாவிடமிருந்து கிடைத்தபோது நான் கண்டுபிடித்ததை நிரூபித்தேன். நான் வெள்ளைக்காரனுக்கு நிரூபிக்கவில்லை. இந்தியனுக்கான அடையாளத்தை நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம், இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு பதினான்கு வயதுச் சிறுவன், அதுவும் கருப்புத்தோல் கொண்ட தமிழன், இந்தியன் என்று! இந்த​ ​வெள்ளை​த்​ தோல்​ ​கொண்டவந்தான் கண்டுபிடிப்பான் என்ற ​மூளைச் சலவையிலிருந்து ​இந்திய மக்கள் முதலில் வெளியே வர வேண்டும்.
ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வந்து நம்மைக் கேள்வி கேட்டது. அப்போது சொர்க்கத்தில்​ ஏற்ற தாழ்வு உண்டா? என்ற கேள்விக்கு ஏற்ற தாழ்வு இல்லை என்றனர். அப்படியானால், பூமியில் மட்டும் ஏன் ஏற்ற தாழ்வு என்று ஆன்மீகப் பெரியவர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.​ நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான்​. சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து நம்மை பிரித்தாண்டது அவன்தான்​. எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள், வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில், 15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும் ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள்.​ நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது? 5000 ஆண்டுகளுக்குமுன் பலவற்றைக் கண்டுபிடித்த நம்மால் ஏன் இப்போது முடியவில்லை.
ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர், பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர், கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு. நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும், படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம்​.​ கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதில் முடித்தேன்.​ அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.
அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன்​​.​ ​ நியூ​யார்க் என்கிற ஊரில் 3 மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது 14 வயதுதான். வேலை பார்த்தவர்கள் 30 வயது 40 வயது கொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும் கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதி பார்த்து கொடுத்தது. அப்போதே 14, 15 செமினார் கூட நடத்தினேன்.
எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும், சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை​ ​இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.​ ​அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் இமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் இமெயில்​ ​கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு.
இதுமாதிரி புதுமாதிரியான கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது, தகுதியுள்ளது என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக ‘ரேட்டியான்’ என்கிற கும்பல் மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். இமெயில் என்றால் அது ‘சிவா அய்யாதுரைதான்’ என்று வெற்றி பெற்றேன். அதுவரை ‘இமெயில்’ என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக் ஷனரியிலும் வந்தது.
இசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல் அங்கு வந்தது. இப்போது தினமும் இமெயில் போக்குவரத்துகள் 20 ஆயிரம் கோடி முறை நடக்கின்றன. 4.2 பில்லியன் இமெயில் முகவரிகள் உள்ளன. இது ஒரு இந்தியனின் தமிழனின் கண்டுபிடிப்பின், பங்களிப்பின் விளைவு அல்லவா?
1993ல் அதிபர் கிளிண்டன் கூட இமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார். எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும், ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.
நம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான். ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்னை என்று கண்டுபிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது.
மேலை நாட்டு வைத்தியமுறையிலோ உடம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம் மருந்துகள், ஆயிரம் டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு எதையும்
வியாபாரமாகப் பார்ப்பார்கள்
‘சைட்டோ சால்வ்’ என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம். நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது. நம் வீட்டு கறி மசாலாவில் மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம்.
சித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் மென்பொருள் செய்து வருகிறேன் .சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை. இறுதியாகச் சொல்வது இதுதான்.. அமெரிக்காவில் அவர்களால் முடியும் என்றால், இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம்” என்றார்.

இஸ்ரேல் தேசம் உருவானது எப்படி ?

சங்கீதம்
105 அதிகாரம்
1. கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

2. அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

3. அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

4. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

5. அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

6. அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

7. அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

8. ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

9. அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

10. அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

11. உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

12. அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

13. அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

14. அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:

15. நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

16. அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார்.

17. அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.

18. அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.

19. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

20. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.

21. தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

22. அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.

23. அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.

24. அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

25. தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

26. தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

27. இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

28. அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.

29. அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

30. அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

31. அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

32. அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.

33. அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

34. அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

35. அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.

36. அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.

37. அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.

38. எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

39. அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.

40. கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

41. கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.

42. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

43. தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,

44. தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

45. அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

நீ என் மகன் நான் உனது தகப்பன்

என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .

எருசலேமிலிருந்து சிறுவர்கள்


ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்

சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி.

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 10


காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய  போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின்  ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு  கொண்டு இதனை அவர்களது  பெறோருக்கு தெரியபடுத்தி  4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின்  ஊடாக  தொடர்பில் இருந்து  இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும்  விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை  இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள் 

இது  தொடர்பான இன்னொரு பதிவு
மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்

வரபோகும் மூன்று மாற்றங்கள்

வரபோகும் மூன்று மாற்றங்கள் 

விடுதலை

விடுதலை வாலிபருக்கான சிறப்பு நிகழ்ச்சி 

Domain Name பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு மனமார்ந்த நன்றி

வணக்கம் என் இனிய வாசகர்களுக்கு,

எனது  வலைபூவிற்க்கு Domain Name பரிசாக கிடைத்துள்ளது. இன்றில்  இருந்து http://www.tamounaku.com/ எனும் பெயரில் எனது வலைப்பூ செயல்படும் என்பதை மகிழ்ச்சியூடன் தெரிவித்து கொள்கிறேன் .அனத்துக்கும் மேலாக இந்த பரிசு கிடைக்க கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி  டொமைன்  பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு. எமது வாசகர்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  அத்துடன் இந்த Domain  எனது வலிப்பூவில் இணைக்க  தொழில்நுட்ப உதவி செய்த திரு சக்திதாசன் அவர்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நீங்கள் வலைப்பூ வைத்து உள்ளீர்களா? உங்களுக்கும் இந்த பரிசு கண்டிப்பாக கிடைக்கும். பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி நீங்களும் Apply செய்யுங்கள்.

தமிழ் களஞ்சியம் திரட்டி வழங்கும் அதிரடி Domain  பரிசு திருவிழா!

நமது தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து புதிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக சிறந்த பதிவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வருகிறது. அதனை பின்தொடரும் வகையில் இந்த அதிரடி domain பரிசு திருவிழா.

பல வலைப்பதிவர்கள் தங்களின் வலைப்பதிவுக்கு Domain Name பதிவு செய்யாமல் Blogger கொடுக்கும் இலவச பெயரையே வைத்துள்ளார்கள். இதனால் அவர்களின் வலைப்பதிவு உடனடியாக Google, Yahoo, Bing போன்ற தேடல்களில் கிடைப்பதில்லை. இதனால் வலைப்பதிவு பலரை எளிதில் சென்றடைவதில்லை. Domain Name பதிவு செய்யப்பட்ட வலைப்பதிவானது எளிதில் தேடல்களில் கிடைப்பதுடன் உங்களின் வலைப்பதிவின் அடையாளமாகவும் இருக்கும்.

Domain Name இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களுக்கு Domain Name பரிசாக ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே உங்களுக்கு Domain Name தேவையெனில் admin@tamilkalanchiyam.com என்ற மின்னஞ்சலுக்கு,

உங்கள் பெயர் :

உங்களின் தளத்தின் பெயர் :

உங்களின் ஈமெயில் முகவரி:

பூர்த்தி செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
-------------------------------------


நிபந்தனைகள்:
1. நீங்கள் தமிழ் வலைப்பதிவு வைத்திருக்க வேண்டும்.
2. தமிழ் களஞ்சியம் திரட்டியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
3. பரிசாக Domain Name ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் Renew செய்துக் கொள்ள வேண்டும்.
4. Domain Name .in என்பதில் மட்டுமே வழங்கப்படும்.
5. உங்களுக்குத் தேவையான பெயர் .in - ல் available ஆக இருக்க வேண்டும்.
6. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Domain Names மட்டுமே வழங்கப்படும். எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
7. ஒரு உறுபினருக்கு அதிகபட்சமாக 2 Domain மேல் பரிசாக தரப்பட மாட்டது.
8. இச்சலுகை குறுகிய காலத்திருக்கு மற்றும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும். ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் இந்த வாய்ப்பு முடிவடைகிறது.
---------------------------------------
பதிவர்களுக்கு தமிழ் களஞ்சியம் திரட்டி புதுப் புது வசதிகளையும் சலுகைகளையும் எப்போதும் வழங்கி கொண்டே இருக்கும்.
தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு உங்களின் ஆதரவு என்றும் தேவை.
நன்றி.
மேலும் விவரங்களுக்கு - www.tamilkalanchiyam.com

இந்தியாவுக்காக நான் எழும்ப வேண்டுமே


இந்தியாவுக்காக  நான் எழும்ப  வேண்டுமே
இரவும் பகலுமாய் நான் புலம்ப  வேண்டுமே 

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!

சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் தமிழ்த் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,எமக்கு எதிராக எத்தனையோ பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலத்த சவாலின் மத்தியில் இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டை தொவித்துக்கொள்கின்றோம்.
தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி எதனையும் செய்யவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
ஆனாலும் கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைபெறவுள்ள செயற்பாடுகளின் அடிப்படையிலேயே எது தொடர்பாகவும் முடிவுக்கு வர முடியும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய நிதியுதவியின் மூலம் தான் நாம் மனிதாபிமான உதவிகளை செய்து வந்துள்ளோம்.
அவர்களுடைய உதவியும் ஆதரவும் தொடர்ந்தும் எமக்கு இருக்க வேண்டும். தமிழ் தேசம் என்பது வெறும் உள்ளூரில் உள்ளவர்களை மட்டும் கொண்டது அல்ல.
இது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியதாகும். தமிழ்த் தேசியவாதம் தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கின்றது.
தமிழ்த் தேசியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். எந்தவோரு சந்தர்ப்பத்திலும் வேறு இனத்தவர்களின் அடையாளத்தை அழிக்கவோ அன்றி சிதைக்கவோ நாம் முயலவில்லை.
அதனைப்போல எமது தேசியத்தையும் கலாசாரத்தையும் யாரும் அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்கவும் முடியாது என்றார்.
இன்று மதியம் நடைபெற்ற இவ்  ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!

சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் தமிழ்த் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,எமக்கு எதிராக எத்தனையோ பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலத்த சவாலின் மத்தியில் இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டை தொவித்துக்கொள்கின்றோம்.
தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி எதனையும் செய்யவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
ஆனாலும் கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைபெறவுள்ள செயற்பாடுகளின் அடிப்படையிலேயே எது தொடர்பாகவும் முடிவுக்கு வர முடியும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய நிதியுதவியின் மூலம் தான் நாம் மனிதாபிமான உதவிகளை செய்து வந்துள்ளோம்.
அவர்களுடைய உதவியும் ஆதரவும் தொடர்ந்தும் எமக்கு இருக்க வேண்டும். தமிழ் தேசம் என்பது வெறும் உள்ளூரில் உள்ளவர்களை மட்டும் கொண்டது அல்ல.
இது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியதாகும். தமிழ்த் தேசியவாதம் தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கின்றது.
தமிழ்த் தேசியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். எந்தவோரு சந்தர்ப்பத்திலும் வேறு இனத்தவர்களின் அடையாளத்தை அழிக்கவோ அன்றி சிதைக்கவோ நாம் முயலவில்லை.
அதனைப்போல எமது தேசியத்தையும் கலாசாரத்தையும் யாரும் அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்கவும் முடியாது என்றார்.
இன்று மதியம் நடைபெற்ற இவ்  ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய  போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின்  ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு  கொண்டு இதனை அவர்களது  பெறோருக்கு தெரியபடுத்தி  4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின்  ஊடாக  தொடர்பில் இருந்து  இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும்  விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை  இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள் 

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய  போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின்  ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு  கொண்டு இதனை அவர்களது  பெறோருக்கு தெரியபடுத்தி  4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின்  ஊடாக  தொடர்பில் இருந்து  இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும்  விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை  இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள் 

நோவாவும் இயேசுவும்

நோவா காலத்தில் வந்த பெரு வெள்ளம்

மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்..


சீனாவில் நடந்த TV நிகழ்ச்சி ஒன்றில் , ஒரு தந்தை கதறி அழுத விதம் அனைவரையும் மனம் உருகச் செய்துள்ளது. மகள் குளிக்கச் சென்றவேளை எதேட்சையாக அவளவு மோபைல் போனை எடுத்துப் பார்த்தால் அங்கே பல எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. அதில் அந்த 13 வயதுச் சிறுமி , நான் ஒரு ராத்திரிக்கு 3,000 (சீன நாட்டு காசு) கேட்டேன் அவர் தருவாரா என்று கேட்க்க. இல்லை இல்லை எப்படி தருவார் ? நீ ஒரு ராத்திரிக்கு படுக்க 2,000 வாங்கும் விடையம் எனது பாசுக்கு தெரியும். ஆகையால் நீ 2000 வாங்கிக் கொண்டு அவரோடு உறவு கொள் என்று , விபச்சார கும்பல் தலைவன் ரெக்ஸ் போட்டுள்ளான்.
இதனை வாசித்த தந்தை அதிர்ந்து போனார் ... என்ன நடக்கிறது என்று மகளிடம் கேட்டால். ஆம் எனக்கு பணம் தேவை. நான் அதனால் இந்த தொழிலில் இறங்கிவிட்டேன் என்று அவர் சற்றும் கூசாமல் சொல்லியுள்ளார். இதனை என்னல் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என்று கேட்டு அந்த தந்தை கதறி அழுதுள்ளார். சிறுவர்களையும் , சிறுமிகளையும் செக்ஸ் அடிமைகளாக்கி அவர்களை வைத்து காசு சம்பாதிக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்
எச்சரிக்கை  சாத்தனின்  குறி சிறு குழந்தைகள் 

வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்

தமிழ் மக்களுக்கு வெள்ளைக்காரன் தமிழ் பேசினால் அவர்களுக்கு உடனே ஒரு பரவசம் அத்துடன் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு .இந்த விஷத்தை வைத்து தமது மதத்தை பரப்ப வெள்ளைகாரருக்கு தமிழ் கற்பித்து  புலம் பெயர் நாடுகளில் யெகோவாவின்சாட்சிகள் .தமிழர் அதிகமாக உலாவும் பகுதிகளில் தமிழ் பேசும் வெள்ளைகாரர்களை வைத்து  தமது மதத்தை கச்சிதமாக பரப்பி வருகின்றனர்.

யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ? இவர்களது உபதேசம் சரியானதா ? இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றனர் ? இவர்களது தந்திரம் என்ன?  இந்த காணொளியில் தெளிவான தீர்கதரிசன உள்ளது