January 2018

சிங்களத் தலைவர்கள், குழம்பிய நிலையில் தமிழ் தலைவர்கள்!

ங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளானர். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மௌனத்தையே சாதிக்கிறார்கள் என மக்கள் மத்தியிலிருந்து எழும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், ‘இப்பொழுதும் எம்முள் பலர் கேட்பது, ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற பின்னிற்கின்றீர்கள் என்பதையே, இத்தருணத்தில் நான் உச்ச நீதிமன்றத்தில் கூறியதையே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது, இது எப்படி இருக்கின்றது என்றால் நாம் கனிஷ்ட மாணவர்களாகக் கல்லூரியில் மாபிள்கள் விளையாடிக் கொண்டிருந்த போது எம் சிரேஷ்ட மாணவர்கள் வந்து அத்தனை மாபிள்களையும் அடித்துப்பறித்து தாம் கையகப்படுத்தி விடுவார்கள்.

நாங்கள் அழுது புலம்ப, ஆசிரியர்களுக்குத் தெரியவரப் போகின்றதென்று கையகப்படுத்திய 25 மாபிள்களை தாமே வைத்துக் கொண்டு 6 அல்லது 7 அல்லது 8 தருவதாகப் பேரம் பேசுவார்கள். நாம் பத்தைக் கேட்டால் உடனே தந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 15 ஐ தாம் எடுத்துச் சென்று விடுவார்கள். அதேபோல் பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல்ப்படுத்துவது எமது முக்கியமான உரிமைகளைத் தாம் வைத்திருப்பதற்கே. நாம் பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பதற்கே.

ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார நன்மைகள் முக்கியம் தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம்.

அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்கு வந்து தொழில் செய்யக் கேட்பர், இராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர், நாங்கள் அவர்களிடம் எடுத்திருப்பதால் முடியாது என்று கூறமுடியாது.மேலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வருவர். வந்து ஜம்புகஸ்பட்டுணவைக் காட்டி இது எமது சிங்கள நாட்டின் ஒரு பகுதி, தமிழர்கள் இங்கு 10 ஆம் நூற்றாண்டில் வந்து எம்மைத் துரத்திவிட்டு இப்பொழுது இங்கு குடியிருந்து கொண்டு எம்மையே எதிர்க்கப்பார்க்கின்றார்கள் என்று கூறுவர். அப்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம். எமது தனித்துவத்தை இழந்து விட்டிருப்போம். பிச்சைபோட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான இனமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுவோம்.

இருப்பதை நாம் இழந்து வருவதற்குக் காரணம் எமது பாரம்பரியம், வரலாறு, எமது இலக்கியம், இன்றைய சுற்றுச் சூழல் எதனையுமே அறியாது அரசியல் நடத்துவதேயாகும். பலமுள்ளவன் தான் விட்டுக் கொடுக்க வேண்டும். பலமற்றவன் விட்டுக்கொடுத்தால் அது பேடித்தனம். பயந்து விட்டுக்கொடுப்பதாகவே இருக்கும்.

பலமுள்ளவன் உடனே உங்கள் பலமற்ற நிலையைப் புரிந்து கொள்வான். இப்போது எமது அரசாங்கங்கள் எமது பலமற்ற நிலையை நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றன. எம்மை வாங்கிவிட முடியும் என்று நினைக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறே நடந்து வருகின்றோம். நாங்கள் பலமுள்ளவர்களாக மாறினால் தான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்.

நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் அதிகாரங்களைத் தமதாக்கி எம்மைப் பெரும்பான்மையினர் ஆளப்பார்ப்பது எமது உண்மை நிலையை மறைப்பதாகும், கொச்சைப்படுத்துவதாகும்.

ஆகவே தமிழ் மக்கள் தமது உரித்துக்களைப் பெறப் போராடுவது நியாயமானது என்பதில் நாங்கள் அசைவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் சிங்கள மக்களின் உரித்துக்களைப் பறிக்கப் போராடவில்லை. அவர்கள் மீது எமக்கு எவ்விதக் கோபமோ குரோதமோ இல்லை. அவர்களின் அரசியல்வாதிகள் மீது எமக்குப் பரிதாபம் இருக்கின்றது. கேவலம் பதவிக்குவர இந்த அருமருந்தன்ன நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் என்ற மனவருத்தம் எமக்குண்டு.

எமது உரித்துக்களை அவர்கள்தான் கையகப்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் பலமற்றவர்கள் என்று நினைப்பதைக் கைவிட வேண்டும். நாம் பலமுடையவர்கள். உலகம் பூராகவும் எம்மவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. உண்மையில் சிறுபான்மையினர் மனோநிலையில்த் தான் சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாம் எமது மனதில் பதிய வைக்க வேண்டும்.

நாங்கள் உண்மைக்குப் போராடுகின்றோம், எம் மக்கள் நன்மைக்குப் போராடுகின்றோம், நியாயத்திற்குப் போராடுகின்றோம் என்ற திட நம்பிக்கை வந்துவிட்டால் நாங்கள் பலமுள்ளவர்களாக மாறுவோம். அவ்வாறான சிந்தனையில் நாம் இல்லாதபடியால்த்தான் மற்றவர்கள் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்த்து நிற்க வேண்டியுள்ளது. அதன்போது இருப்பவற்றையும் நாம் இழந்து வருகின்றோம். நிலங்கள் பறி போகின்றன. அதிகாரங்கள் பறிபோகின்றன. தரவேண்டியவை தராமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.


சிங்களக் குடியேற்றத்திற்கு முஸ்தீபு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக ஹிபுல் ஓயா என்னும் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்களை கபளீகரம் செய்து நடைமுறைப்படுத்தவும் மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை
கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன் குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென்பண்ணை, வெடிவைத்தகல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம் ஆகிய குளங்கள் மூடப்படவுள்ளதுடன் இந்தக் குளங்களின் நீர்ப்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களையும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வில் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்;

முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்தக் குளங்களின் கீழான நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.

இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.

அந்த மயில்குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

மிக வேகமாக பரவிவரும் சிங்களக் குடியேற்றம் இந்தத் திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.

1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959 ஆம் ஆண்டு அம்பாறை சிங்களப் பிரதேசமும் 1977 ஆம் ஆண்டு சேருவில சிங்களப் பிரதேசமும் உருவாக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக பல சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. இது நல்ல உதாரணம். இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரைக் கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார்.

கள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா ?

நடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன? என்ன சின்னம் எதனையும் அறிவிக்காமல் அவர் பாணியில் இழுத்தடிப்பு செய்து வருகிறார். முதலி இவர் பேச்சைக் கேட்டு உட்சாகமடைந்த இவரது ரசிகர்கள். தற்போதும் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள்.
எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல, தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தமிழக இன்ரர் நெட்டை மட்டுமல்ல. உலகளாவிய ரீதியில் பல சர்சைகளை கிளப்பியுள்ளது. தமிழக பரபரப்பு பத்திரிகையான நக்கீரன் வைத்த பொறியில் சிக்கி சின்னாபின்னமானார். சாமியார் நித்தியானந்தா. இவர் நடிகையோடு கட்டிலில் அலங்கோலமாக இருந்த காட்சிகளை, வீடியோவில் பதிவேற்றிய செய்தியாளர். அதனை வெளியிட்டு நித்தியானந்தாவின் குட்டை உடைத்தார்.தற்போது வெளியாகியுள்ள படத்தில், ரஜனி மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் நித்தியானந்தாவிடம் ஆசி பெறுவது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது. இது தான் ரஜனி அறிவித்துள்ள ஆண் மீக அரசியலா என்று, பலர் கிண்டலடிக்கிறார்கள். இது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை
நன்றி 
அதிர்வு 

என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் குறித்து கோபமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே கூர்மையடைந்து வருகின்ற முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த முதல் சம்பவம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

அரை மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் உரையாற்றிவிட்டு வெளியே சென்ற ஜனாதிபதியைப் பின்தொடர்ந்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரு பிரதான கட்சிகளையும் சேர்ந்த மூத்த அமைச்சர்களும் அவரைச் சமாதானப்படுத்தி, அழைத்து வந்ததாகவும் அவர் அமைதியாக மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் அறியக்கூடியதாக இருந்ததுமுன்னதாக ஜனாதிபதி சிறிசேன தனது உரையில், மத்திய வங்கி பிணைமுறிகள் கொள்வனவில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழுவை தான் நியமித்தது, ஐக்கிய தேசிய கட்சியை மாசுபடுத்தவே என்று நினைப்பதனாலேயே அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைத் தாக்குகிறார்கள் என்று கூறினார்.

தேநீர் குடிக்கவே வெளிநடப்பு செய்தாரா?

அடுத்தடுத்த நாட்களில் இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய ஜனாதிபதி சிறிசேன, தேநீர் குடிக்கவே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றதாகக் கூறினர்.

அதன் பிறகு, அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காகக் கூட்டப்படுகின்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்கப் பேச்சாளர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி கழிப்பறைக்குத்தான் சென்றார் என்று கூறியதையும் நாட்டு மக்களில் எவரும் நம்பியதாகக் கூறமுடியுமா? அவ்வாறு கழிப்பறைக்கு ஜனாதிபதி சென்றிருந்தால் அரைமணி நேரமாக அங்கே என்ன செய்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்கள் மத்தியில் கேள்வியெழுப்பி பகடிசெய்ததும் காணக்கூடியதாக இருந்தது.ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்றும் அந்தப் பதவிக்காலம் 2020 ஜனவரி 9 ஆம் திகதி நிறைவுபெறுகிறது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்து இரண்டு நாட்கள் கழித்து அவர் அமைச்சரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

தனது பதவிக்காலம் குறித்து வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுவதால் குழப்பமான நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறிய ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் அரசியலமைப்பு அடிப்படையிலான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அதாவது 2015 ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சிறிசேன, மறுநாளே ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

அவர் தேர்தலில் போட்டியிட்டவேளையில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு ஏற்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களே. அதனால் மக்கள் அவரை 6 வருட பதவிக் காலத்துக்கே தெரிவு செய்தனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தனது வியாக்கியானத்தை முன்வைத்தார். ஆனால், அந்த வாதத்தை, ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். சட்டமா அதிபரின் வாதம் ஜனாதிபதி சிறிசேன 2021 ஜனவரி 9 வரை பதவியில் தொடரமுடியும் என்பதேயாகும்அமைச்சரவையில் தனது ஆவேச உரையில் பதிலளித்த ஜனாதிபதி, என்றென்றைக்கும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்காக தான் பதவிக்கு வரவில்லை என்றும் எந்த நேரத்திலும் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டுப் போகத்தயாராயிருப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

நாகரிக அரசியல் கலாசாரம்?

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாமே இரு வருடங்களுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி நின்ற நிலையில் அவரோ கடந்த சனிக்கிழமை தலைநகர் கொழும்புக்கு வெளியே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் சகல ஊழல் மோசடிக்காரர்களையும் குற்றவாளிகளையும் நரகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, நாகரிகமான அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவித்த பிறகே ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கப்போவதாகச் சூளுரைத்தார்.

ஜனாதிபதி சிறிசேனவின் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்துவிட்டு 2015 ஜனவரி 9 மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த உடன், அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது செய்த பிரகடனத்தை தவிர்க்க முடியாமல் நினைவுபடுத்துகின்றன.இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அன்று கூறினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதென்ற தனது தேர்தல் வாக்குறுதியை விரைவாக நிறைவேற்றுவதில் தனக்கு இருக்கும் உறுதிப்பாட்டையே அவர் அந்தப் பிரகடனத்தின் மூலமாக நேர்மையாக வெளிக்காட்டினார் என்றே பலரும் நம்பினார்கள்.

ஆனால், ஜனாதிபதி சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் என்று சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பல மாதங்களாக தொடர்ந்து கூறிவருகின்றபோது அவரோ சூட்சுமமான ஒரு மௌனத்தைச் சாதித்து வருகிறாரே தவிர, வெளிப்படையாக மறுக்கவில்லை. இது அவரது அரசியல் நேர்மையைக் கடுமையான சந்தேகத்துக்குள்ளாக்குகிறதுசில தினங்களுக்கு முன்னர்கூட நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மாற்றப்படாமல் தற்போதுள்ளவாறே தொடர்ந்து இருக்குமானால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையும் மாற்றப்படாமல் இருக்குமானால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறினார்.

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, 2020 ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக சிறிசேன போட்டியிடுவாரா, இல்லையா என்பது தெளிவற்றதாக இருக்கிறது.

நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை மதித்து, எஞ்சியிருக்கும் இரு வருட காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலமாக ஒழிக்க அவரால் இயலுமா என்ற கேள்வியையும் கேட்கவேண்டியிருக்கிறது.மூன்று வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானிப்பாரேயானால், ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுகிறது.

வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிப்பாரேயானால், அவரின் அரசியல் நம்பகத்தன்மை அடிபட்டுப்போகும்.

அதேவேளை மீண்டும் தேர்தல் அரசியலில் பங்கேற்காதிருக்க சிறிசேன முடிவெடுத்தால் இன்னும் இருவருடங்களில் பதவியில் இருந்து இறங்கப்போகின்றார் என்பதை நன்கு தெரிந்துகொண்டபின்னர் சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அதிகாரத்தையும் பதவிவழியான வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதிலேயே எப்போதும் குறியாக இருக்கின்ற அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவு காலத்துக்கு அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

ராஜபக்சவுடன் நிற்கும் எம்.பி.க்கள்

சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வ தலைவராக ஜனாதிபதி சிறிசேன இருக்கிறபோதிலும், தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரிவினருக்கே அவர் நடைமுறையில் தலைவராக இருக்கிறார். மற்றைய பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணி என்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் அதிகமானவர்கள் ராஜபக்சவுடனேயே அணிசேர்ந்து நிற்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலானதாகும்.ராஜபக்சவுடன் நிற்பவர்கள் கட்சித் தலைமையின் எச்சரிக்கையையும் மீறி உள்ளூராட்சி தேர்தல்களில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சுதந்திர கட்சியின் தலைமையை மீண்டும் கைப்பற்ற முடியாமல் போகுமேயானால் தங்களது எதிர்கால அரசியல் வாகனமாக ராஜபக்ச சகோதர்களும் பிள்ளைகளும் இந்தப் புதிய கட்சியையே பயன்படுத்துவார்கள். தற்போதைக்கு அதன் பெயரளவிலான தலைவராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 'அமர்த்தப்பட்டிருக்கிறார்'ஜனாதிபதி சிறிசேனவின் இடத்தில் சுதந்திர கட்சியின் தலைமைக்கு வருவதற்கு தேசிய ரதியில் ஏற்புடைய அரசியல்வாதியொருவர் இல்லாத நிலையில் அந்த கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தலைமைக்காக ராஜபக்ச சகோதரர்களை நோக்கியே ஓடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி சிறிசேன தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகுமேயானால் இப்போது அவருடன் நிற்கும் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு ஓடுவார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், அவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்வதிலேயே அக்கறையாயிருப்பார்கள்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினரைப் பொறுத்தவரை அவர்கள் சுதந்திர கட்சியுடனான அரசியல் சக வாழ்வைத் தொடருவதில் இனிமேலும் அக்கறை காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் அடுத்து மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதியின் கட்சிக்கும் இடையிலான உறவு நிலையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நம்பலாம்.

ஜனாதிபதியைக் கண்டனம் செய்து பேசவேண்டாம் என்று பிரதமர் விக்கிரமசிங்க இப்போது தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுவதைப் போன்று முன்பு ஜனாதிபதியும் பிரதமரை விமர்சிக்கவேண்டாம் என்று சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையே சஞ்சலத்துடன் கூடிய ஒருவித புரிந்துணர்வு இருப்பதென்பது உண்மையென்றாலும் அடுத்து வரும் மாதங்களில் ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களது தலைவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்கான வியூகங்களை வகுக்கவேண்டியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சகவாழ்வு சீர்குலைவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்று தோன்றுகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுவதென்பது பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை மிகவும் அவசியமானதாகும். அவரின் அரசியல் எதிர்காலம் அதில் தங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நழுவ அவர் முயற்சிப்பாரேயானால் கட்சியில் தனது தலைமைத்துவத்தைக் காப்பாறுவதற்கு அவரால் இயலாமல் போகும்.
கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் பொருளாதார விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும் இனிமேல் அந்த விவகாரத்தை தானே கையேற்கப் போவதாகவும் ஜனாதிபதி வார இறுதியில் கூறியிருந்தார். இது நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் அவருக்கு பெரும் முரண்நிலையைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

நாடாளுமன்றத்தை கலைக்க முடியாமை

முன்னைய ஜனாதிபதிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்டிருந்த கட்சிகளுடன் முரண்பாடுகள் தீவிரமடைந்த சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவதற்கு தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தினர். முந்தைய அரசியலமைப்பு ரீதியான ஏற்பாட்டின்படி, ஒரு நாடாளுமன்றம் முதன் முதலாகக் கூடிய தினத்தில் இருந்து ஒரு வருடம் கடந்த பின்னர் அதைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.ஆனால், அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்துக்குப் பிறகு அவ்வாறு செய்யமுடியாது என்றாகிவிட்டது. நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக் காலத்தில் நாலரை வருடங்கள் கடந்த பின்னரே நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கமுடியும்.

சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் 2015 ஜனவரி 9 முடிவடையும்போது நாடாளுமன்றம் அதன் பவிக்காலத்தில் நாலரை வருடங்களுக்கும் குறைவான காலத்தையே பூர்த்திசெய்திருக்கும். அதனால், தனக்கு அரசியல் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாத பலவீனமான நிலையே அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, தனது பதவிக்காலம் தொடர்பாக குழப்பநிலை இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கேட்கப்போய் இறுதியில் அரசியல் ரீதியில் தனது அதிகாரத்தை முனைப்புடன் செயற்படுத்த முடியாத ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக (Lame duck president) சிறிசேன தன்னை ஆக்கிக்கொண்டுவிட்டாரோ என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

அவ்வாறான சூழ்நிலையைத் தவிர்க்க அல்லது தடுக்கக்கூடிய அளவுக்கு போதுமான அரசியல் நுண்மதியும் சூழ்ச்சித் திறனும் தன்னிடமிருக்கிறது என்று அவரால் நிரூபிக்கமுடியுமா?

பாதுகாப்புத் துறையில், விரைவில் ரோபோக்களா.?

பாதுகாப்புத்துறையில் விரைவில் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இந்தியாவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன. இதற்காக இருநாடுகளும் இணைந்து செயற்பட புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் நெருங்கிய ஆலோசகரும், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச் சருமான கென்டாரோ சோனோரா கூறுகையில், ஆளில்லா வாகனங்கள் மற்றும் ரோபோக்களை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளன. இருநாட்டு பிரதமர்களும் இந்த திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளதால், அணுசக்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட வுள்ளது. இம்மாத இறுதிக்குள் விரைவாக இதனை தொடங்க வேண்டும் என்பதே ஜப்பானின் விருப்பம் என்றார்.

ஆன்டி இந்தியன்

ஒபாமா அதிபராகப் பதவியேற்ற இரண்டு முறையும் வெள்ளை மாளிகை முன்பு தரை தெரியாத அளவுக்கு மனிதர்களால் நிரம்பி வழிந்தது வெள்ளை மாளிகை வளாகம். ட்ரம்பின் பதவியேற்பில் கூட்டமே இல்லை. மேலும் நீங்கள் எங்கள் அதிபரே இல்லை என்ற பதாகைகளுடன் எதிப்பாளர்கள் அமெரிக்க வீதிகளில் வலம் வந்தனர். அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் ட்ரம்புக்குத் துளியும் செல்வாக்கு இல்லை. அங்குதான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்பது ஜனநாயகக் கட்சியின் வாதம்.

ட்விட்டர் அதிபர்

அதிபராகப் பதவியேற்ற நாள்முதல் தனது சொந்த ட்விட்டர் பக்கத்திலிருந்து 2598 ட்விட்களை செய்துள்ளார். அதிபருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 1797 ட்விட்களை செய்துள்ளார். இதில் 672 ட்விட்கள் தனது சொந்தப் பக்கத்திலிருந்து ரீ-ட்விட் செய்யப்பட்டவை. ஒபாமா அதிபராக இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 18 மாதங்களில் 372 ட்விட்களைதான் செய்துள்ளார். ஆனால் ட்ரம்ப் ட்விட்டரிலேயே வாழ்கிறார் ஒருநாளைக்கு சராசரியாக 12 ட்விட்களை தட்டி விடுகிறார் ட்ரம்ப்.

தடையோ தடை

ட்ரம்ப் பதவியேற்று முதலில் கையெழுத்திட்டதே ஒபாமா கேர் ரத்து செய்யும் ஆணையில்தான். அதனை தொடர்ந்து சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்று அறிவித்தார். பின்னர் ஹ1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் செக் வைத்தார். மெக்ஸிகோவிடம் சுவர் எழுப்பப் பணம் கேட்டது. வடகொரியாவை ஒற்றை பட்டனை அழுத்தி அழித்து விடுவேன் என மிரட்டுவது என வருடம் முழுவதும் அதிர்ச்சி மோடிலேயே வைத்திருந்தார்.

ட்ரம்ப்

மிரட்டிய சிலிக்கான் வேலி

அமெரிக்காவில் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவேன். அமெரிக்கர் அல்லாத பிறநாட்டவரின் எண்ணிக்கையையும் குறைக்கும் அமெரிக்க ஃபர்ஸ்ட் திட்டத்துக்கு ட்ரம்ப் அச்சாரம் போட்டதும் சிலிக்கான் வேலி சிஇஓ-க்களின் எதிர்ப்பு முதல் வில்லனாக ட்ரம்புக்கு அமைந்தது. திறமையானவர்களை இழந்துவிடுவீர்கள் என கூகுள் சுந்தர் பிச்சை குரலுயர்த்தினார். என்னங்க சார் உங்க சட்டம், அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்டது என மார்க் ஆங்க்ரி மோடை ஆக்டிவேட் செய்தார்.

ஆன்டி இந்தியன்

இந்தியாவுடன் நட்பு பாராட்டுவேன் என்று சத்தமாக முழங்கிய ட்ரம்புக்கு இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகமாகிவிட்டது. ஹச்1பி விசாவில் கிடுக்கிபிடி போட்ட ட்ரம்ப் இப்போது லட்சக்கணக்கில் இந்திய டெக்கிகளை வெளியேற்ற ப்ளான் போடுகிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கர்களைப் பணியமர்த்த வலியுறுத்தும் திட்டமும் உள்ளதாம். இதனால் நிறுவனங்களுக்குச் செலவு அதிகமாகும் என விழி பிதுங்கியுள்ளனர் சிலிக்கான் வேலி சிஇஓ-க்கள். க்ரின்கார்டுக்கு காத்திருப்போரும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் 6 லட்சம் இந்தியர்கள் இந்தியா திரும்பும் சூழல் ஏற்படும் என்கின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.பயமுறுத்தும் வார் ரூம்

அமெரிக்க அதிபருக்கு அன்றாடம் அமெரிக்கா குறித்த தகவல்களை வழங்க வெள்ளை மாளிகையில் வார் ரூம் என்ற அமைப்பு செயல்படுகிறது. காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும் இந்த அமைப்பு அளிக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் ப்ளஸ், மைனஸ் இருக்கும். ஆனால் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வார் ரூம் பாசிட்டிவ் செய்திகளை மட்டும்தான் தரவேண்டும் என்ற உத்தரவால் அமெரிக்கா புகழ் மட்டுமே வாசிக்கிறது. இது ஆபத்தானது என்ற அபயக்குரலும் எழத் தொடங்கிவிட்டது.

பொருளாதாரத்தில் சிக்ஸர்

2016ல் ஒபாமா அரசு இருந்த போது 1.5 சதவிகிதமாக இருந்த ஜிடிபி ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் 2.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2009 பொருளாதாரச் சரிவின் போது 10 சதவிதமாகவும், ட்ரம்ப் பதிவியேற்பதற்கு முன்பு 5 சதவிகிதமாகவும் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 4.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பு நவம்பர் 9, 2016ல் 18589 புள்ளிகளாக இருந்த டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை தற்போது 26,014 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ட்ரம்ப் ஆட்சியில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதில் மறுப்பதற்கு இடமில்லை.

ட்ரம்ப்

துப்பாக்கிச் சூடு

ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நடந்த மோசமான தாக்குதல்கள் எண்ணிக்கை மொத்தம் ஐந்து. அதில் உயிரிழந்தோர் மட்டும் 145 பேர். ஒரு ஆண்டில் அமெரிக்காவின் 127 நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் என்பதை தாண்டி அரசு துப்பாக்கி சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். அமெரிக்காவில் உள்ள அரசியல் லாபி தான். குறிப்பாக குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலருக்கு தேசிய ரைபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்க துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் லாபி செய்கிறது. மொத்தமாக உள்ள 435 அமெரிக்க பிரதிநிதிகளில் 232 பேரை இந்தச் சங்கங்கள் லாபி செய்கின்றன. இதனை மறைக்க ட்ரம்ப் மக்களின் மனநிலையில் பிரச்னை என்று கூறியதும் சர்ச்சைக்குள்ளானது.

அவமானப்படுத்திய மேடைகள்

சென்ற வருட ஆஸ்கர் மேடையில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெலின் லைவ் ட்விட்டில் ட்ரம்ப்பை சாடியது, 2017 கோல்டன் க்ளோப் விருதில் மெரில் ஸ்ட்ரீப்பின் ட்ரம்ப்புக்கு எதிரான மிக நீண்ட உரை, 2018 கோல்டன் க்ளோப் விருது மேடையில் ட்ரம்பை நக்கலாக கலாய்த்த செத் மேயர்ஸ் என விருது மேடைகள் ட்ரம்புக்கு எதிராகவே அமைந்தன.

குடும்ப அரசியல்

அதிபர் ட்ரம்பின் ஆலோசகராக அவரது மகள் இவான்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவான்காவின் கணவர் ஜெராடும் அதிபர் ஆலோசகர்தான். அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளில் இன்னும் சில முக்கிய உறவினர்களைப் பணியமர்த்தியிருக்கிறார் ட்ரம்ப். அதிபர் தேர்தலின் போது பிரசார அதிகாரியாக இருந்த டேவிட் பூன் அமெரிக்க அதிபருக்கும் ரஷ்யாவுக்கு நடந்த பேச்சுவார்த்தைகள், தேர்தல் விதிமீறல்கள் எனப் பல விஷயங்களை முன் வைத்தார். மேலும் ட்ரம்பின் மகள் இவான்காவுக்கு அதிபர் ஆகும் ஆசை இருந்தது, ட்ரம்பின் மகனும், மருமகனும் ரஷ்ய வல்லுநர்களோடு ட்ரம்ப் டவரில் பேசிய விஷயங்கள் அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்று கூறினார். இதற்கு டேவிட் பூன் மனநிலை தவறிவிட்டார் என்கிறார் ட்ரம்ப்.
மொத்தத்தில் ஓராண்டில் நிறைய வைரல் நிகழ்வுகளை நிகழ்த்திய ட்ரம்ப் ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை. மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்றவர் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்பவரை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்கிறது. இது முதல் வருடம் அதற்குள் இம்பீச்மென்ட் குறித்தெல்லாம் பேச்சு எழுகிறது.

2020ன் அமெரிக்க அதிபருக்கான அரியணையை ட்ரம்ப் தக்க வைப்பாரா என்ற கேள்விக்கு இந்த வருட பதில் இல்லை என்பதுதான். ஓப்ரா வின்ஃப்ரேவும், மார்க் சக்கர்பெர்க்கும், மிச்செல் ஒபாமாவும்தான் அமெரிக்காவும் 2020 களத்தில் இருக்கிறார்கள். மிஸ்டர் ட்ரம்ப் நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரி அல்ல, அமெரிக்க அதிபர் அந்த மனநிலைக்கு மாறி மீதமுள்ள நாள்களில் செயல்பட்டால் மேக் ட்ரம்ப் க்ரேட் எகெய்ன் சாத்தியம். இல்லையெனில் மீண்டும் குத்துச்சண்டை மைதானங்களில் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும்.

இந்தியர்களை குறிவைக்கும் சீனா

இந்தியர்களை குறிவைக்கும் சீனா அதன் தந்திரம் அதன் மறைமுக திட்டம்  

மத்திய அரசுடன் மோதமுடியும்! – முதலமைச்சர்

நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சர்வதேச சட்டம் பலவழிகளிலும் விரிவடைந்து வருகின்றது என்பதை அவதானிப்போம். சர்வதேச சட்டம் என்றாலேயே பாரம்பரியமாகவோ, உடன்பாடுகள் மூலமாகவோ ஒன்று சேர்ந்த ஒரு தொகை விதிகளையே அடிப்படையில் அதுகுறிப்பிடும். இந்த விதிகளைக் கொண்டு நாடுகள் தம்மிடையேயான உறவுகளை வளர்க்கும் போது விதிகள் சட்ட அந்தஸ்து பெறுகின்றன. அண்மைக் காலங்களில் பல முக்கிய மாற்றங்கள் சர்வதேசச் சட்டத்தில் ஏற்பட்டுள்ளன. பலநாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள், அவற்றினால் உலக மக்கள் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள் போன்றவை இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆகிவிட்டன.

1983ம் ஆண்டு ஜுலை மாதத்தில் எமது அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். அம் மாதம் 23ஆம் திகதிக்கு பின் வந்த நாட்களில் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகள் தொலைக்காட்சி ஊடக ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதுபற்றி அவர் பின்னர் என்னிடம் கூறியபோது “எமது நாடு அந்தக் காலகட்டத்தில் நாறியது” என்றார். “வெட்கப்படுகின்றேன்” என்றார்.

அவ்வாறு நாடுகளில் நடந்தவற்றைப் பார்த்த சட்ட வல்லுநர்கள் பலர், சர்வதேச ச்சட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று எண்ணிய காரணத்தாலேயே சர்வதேசச் சட்டம் இப்போது விரிவடைந்த நிலையில் உள்ளது. இதன் பிரதிபலிப்பே உலகக் குற்றவியல் நீதிமன்ற ஏற்பாடு. அதுமட்டுமல்ல நிலைமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்பொழுதுவலுவான கருத்துக்கள் தோன்றியுள்ளன. நிலைமாற்றம் என்றால் என்ன? ஒருநாட்டின் அரசியல் நிலையில், யதார்த்தநிலையில் மாற்றம் ஏற்படுவதையே அதுகுறிக்கின்றது. ஒரு இருண்ட காலத்தினுள் இருந்து வெளிச்சத்தை நோக்கி எட்டிப்பார்ப்பதையே நிலைமாற்றம் குறிக்கின்றது.

எனவே நிலைமாறும் நாடுகள் நீதிக்குகந்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே நிலைமாற்ற நீதிமுறைகள் ஆவன. இதையே Transitional Justice என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கஷ்ட நிலையில் இருந்து ஒருநாடு மீண்டுவரும் போது என்னென்ன நடவடிக்கைகளை நீதிக்குகந்ததாக அந்நாட்டில் எடுக்கவேண்டும் என்று சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதோ அவற்றையே நிலைமாற்ற நீதிமுறைகள் என்று குறிப்பிடுகின்றது சர்வதேசச்சட்டம்.யாரோ அடக்கி ஆளப்பட்டதால்த்தான் அந்நாட்டில் வன்முறை வெடித்திருக்க வேண்டும் அல்லது கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன.ஒன்று அதிகாரப் பரவலாக்கம் மற்றது போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல். இவற்றைச் சர்வதேசச் சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போர் முடிவுக்கு 2009ல் வந்திருப்பினும் இனப்பிரச்சனை அதனால்த் தீர்க்கப்படவில்லை.

அதனால்த்தான் அதிகாரப் பரவலாக்கம் தேவையுடையதாகின்றது. தற்போதும் 13வது திருத்தச்சட்டம் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தியேயுள்ளது. ஆனால் அது பெரும்பான்மையினரின் பெருந்தயவை முன்வைத்தேயாக்கப்பட்டுள்ளது.அதனால் தான் 1992இன் 58வது இலக்கச் சட்டமான மாவட்ட செயலாளர்கள் பற்றிய அதிகாரமாற்றச் சட்டத்தை இயற்றக் கூடியதாக இருந்தது. ஒற்றையாட்சி எனும் போது முன்னர் கொடுத்த அதிகாரங்களைப் பறித்து இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவரலாம்.

காரணம் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமே தொடர்ந்திருக்கும். மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழிருந்த மாவட்டச் செயலர்கள் திடீரென்று இந்தச் சட்டம் இயற்றப்பட்டதும் மத்திக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. ஒன்று மக்களால்த் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண உறுப்பினர்களின் நிர்வாகம். மற்றையது மத்திய அரசாங்கத்தின் முகவர்களின் நிர்வாகம்.

இங்கு இரு முகவர்கள் சேர்ந்தும் சேராமலும் அவர்கள் நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்கள். ஆளுநரும் மத்தியின் முகவர். அரசாங்க அதிபரும் அவர்களின் முகவரே. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் என்ற போது நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதையே. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற போர்வையில் எமக்குக் கிடைத்தது வேண்டியபோது மத்தியின் ஊடுறுவல்களே. இவ்வாறு ஊடுறுவல்கள் தொடர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படப் போகின்றவர்கள் போருக்கு முன்னர் பாதிக்கப்பட்ட அதேமக்களே. இதனால்த்தான் ஒற்றையாட்சியைக் களைந்து சமஷ்டி ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுவருகின்றோம்.

இடைக்காலவரைவுகள் ஒற்றையாட்சியினையே மையமாகக் கொண்டு வரையப்பட்டதால்த்தான் சர்வதேச நாடுகள் போதிய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இப்பொழுது இன்றைய பேச்சாளர்களின் பேச்சுக்களின் கருப்பொருட்களின் ஒன்றுக்கொன்றான தொடர்பானது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். சர்வதேசச் சட்டம் எதிர்பார்ப்பதைத்தான் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளன.

ஆர்ஜென்டீனா சர்வாதிகாரத்தில் இருந்து வெளிவந்த போது யுகோஸ்லாவியா, றுவண்டா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இருந்து அவைவிடுபட்ட போது நிலைமாற்ற நீதிமுறைகள் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் தடைகளை விதித்தன.உலகக் குற்றவியல் மன்றத்தை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் கரிசனைகாட்டின. ஆகவே சர்வதேசச் சட்டம் நிலைமைக்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறுமாறுதல் அடைந்து வந்துள்ளது.

எனவேதான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்ற விசாரணையும் எமக்கு முக்கியமாகியுள்ளன. இரண்டையுந் தட்டிக்கழிக்கவே இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்கு மறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தை தொடர்ந்துவைத்திருக்கவே அரசாங்கம்மும் முரம் காட்டுகின்றது.

ஆனால் எம்முள் சிலரோ “அதற்கென்ன நாங்கள் கொழும்பில்த்தானே வசிக்கின்றோம், மத்திய அரசாங்கம் இங்குதானே இருக்கின்றது, நாம் இங்கு சுதந்திரமாக எப்படியும் வலம் வரலாம், ஆனால் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் எமது சுதந்திரம் பறிபோய்விடும், எனவே அரசாங்கம் சாட்டையைத் தன்கைவசம் வைத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்” என்ற பாணியில் நடந்து வருகின்றார்கள்.

அவர்களின் நடவடிக்கை காலாகாலத்தில் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.ஒற்றையாட்சியால் எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகப் போகின்றன. படைகள் தொடர்ந்து எம் மாகாணங்களில் நிலைநிற்கப்போகின்றன. எம் காணிகளின் வருமானங்கள் அவர்கள் கைவசம் செல்லவிருக்கின்றன.

மகாவலி சட்டத்தின் கீழ்மேலும் மேலும் வெளியிலிருந்து மக்களை எமது மாகாணத்தினுள் கொண்டுவந்து குடியேற்ற இருக்கின்றார்கள். சுற்றுலாவை தமக்குச் சாதகமாக வளர்த்துக் கொள்ளவிருக்கின்றார்கள். எம்மக்களின் தொகைக் குறைவினால் திணைக்களங்களில் தென்னவரை நிலைநிறுத்தி வருகின்றார்கள். இந்த நிலை தொடரும். முன்னேற்றம் என்றபோர்வையில் எமதுகாணிகளைச் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

இன்னும் பலதையும் கூறலாம். சமஷ்டி அரசியலின் கீழ் சுயாட்சிச் சுதந்திரம் அதிகாரப்பரவலாக்கல் மூலம் எமக்குக் கிடைத்தால் இவற்றைத் தடுத்துநிறுத்தலாம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அவைதடுக்கப்படமுடியாது.ஐக்கிய நாடுகள் முன், தாமே முன் வந்து செய்வதாக ஏற்றுக்கொண்டவற்றை இன்றுசெய்யப் பின் நிற்கின்றது எம் நாட்டின் அரசாங்கம்.

அடுத்து போர்க்குற்ற விசாரணைகளையும் நிலைமாற்ற நீதிமுறைமைகள் வலியுறுத்துகின்றன.அதைத் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றது எமது அரசாங்கம். போர்க்குற்றங்கள் எத்தகையன என்பது பற்றியெல்லாம் பேராசிரியர் சுவர்ணராஜா அவர்கள் விளக்கப்படுத்தினார். போரை அநியாயமான முறையில் வேண்டுமென்றே நடத்துவது போர்க்குற்றம்.

அடுத்து மனித குலத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றாவது வேண்டுமென்றே இன அழிப்பில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றிலும் எமது அரசபடைகள் ஈடுபட்டிருந்தன. அக்குற்றவாளிகளை இனங்காண எமது மத்திய அரசாங்கம் பின் நிற்கின்றது. இனப்படுகொலை பற்றிய விளக்கமும் அண்மைக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

பர்மாவில் றோகின்தியாகொலைகள், ஈராக்கில் யாசிடியரின் வன்புணர்வு நிகழ்ச்சிகள் இனப்படுகொலையின் அம்சமே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய பேச்சுக்களால் நாம் முக்கியமான இரு விடயங்களைப்புரிந்துள்ளோம்.

சர்வதேசச் சட்டம் விரிவடைந்துள்ளதால் எமது அல்லல்களும் அழிவுகளும் அதனுள் அடங்குவன என்ற முறையில் சர்வதேசச் சட்டத்தை ஒரு கேடயமாக ஏந்தி மத்திய அரசுடன் மோதமுடியும் என்பது.

அடுத்து இல்லாததை இருப்பதாகக் கூறி இனிவருங்காலத்தில் இருப்பதையும் இல்லாததாக்க நாம் உடன்படக்கூடாது என்பது.ஆகவே சர்வதேசச் சட்டம் எதிர்பார்க்கும் நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் முறையான அதிகாரப் பரவலாக்கத்தை முயன்றுபெற நீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்றவிசாரணைகளாவன சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிக் குற்றவாளிகளை அடையாளங்காண வேண்டும்.

நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம்.அந்தக் காவாலிகளை வீரதீரசூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற முறையில் மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள்.

எமது நெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்துவர வேண்டும் என்று கருதுகின்றோம். இவற்றைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து, அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரைஸ் குக்கர் பொங்கல்

எனது இணைய  வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .இந்த பொங்கல் ஆனது உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க சந்தோசம் போங்க ,பொருளாதாரம் பெருக எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் 

இரட்டை குண்டு வெடிப்பு: தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 16 பேர் பலி

ஈராக் தலைநகரான பக்தாத்திலுள்ள ரைய்ரன் சதுக்கத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் இது வரை சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இடிபாடுகளிலிருந்து சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டுள்ள இடத்திலேயே இந்த இரட்டை தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  கட்டுமானத் தொழிலாளர்களே அவ்விடத்தில் அதிகளவில் கூடியிருந்ததாகவும் அந்நாட்டு  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவுவைத்துக் கொள்ள, அதிகம் விரும்புவார் ட்ரம்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் மைக்கேல் வுல்ப் என்பவர் 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்கின்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த புத்தகம் அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா..? என்று
பலரும் நினைத்துக் கொண்டு இருந்த போதே., அது டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 300 க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம்  அவர் பேட்டி எடுத்துள்ளார். அதனோடு., ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் மைக்கேல் வுல்ப்  பேட்டி எடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

இந்த புத்தகத்தில் இருக்கும் இன்னொரு மிக முக்கியமான குற்றச்சாட்டு., டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

அவர் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர். இந்த புத்தகத்தினால் வெள்ளை மளிகை கலக்கத்தில் உள்ளது.