இரட்டை குண்டு வெடிப்பு: தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 16 பேர் பலி

இரட்டை குண்டு வெடிப்பு: தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 16 பேர் பலி

ஈராக் தலைநகரான பக்தாத்திலுள்ள ரைய்ரன் சதுக்கத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் இது வரை சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இடிபாடுகளிலிருந்து சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டுள்ள இடத்திலேயே இந்த இரட்டை தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  கட்டுமானத் தொழிலாளர்களே அவ்விடத்தில் அதிகளவில் கூடியிருந்ததாகவும் அந்நாட்டு  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.