November 2017

மகிந்தவும் இதுபோல நஞ்சு குடிப்பாரா ?

குரோவோஷியா நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல், நீதிமன்றில் நஞ்சை குடித்து இறந்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோவோஷியா- பொஸ்னியா ஆகிய இடங்களில், பல போர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அன் நாட்டில் இலங்கை போல இன அழிப்பும் இடம்பெற்றது. இதனை முன் நின்று நடத்தியவர், சுலோபோடன் என்னும் ராணுவ ஜெனரல்.

72 வயதாகும் இவருக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போர் குற்றம் மற்றும் இன அழிப்பு தொடர்பாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேன் முறையீடு செய்தார். அந்த விசாரணையின் இறுதி தீர்ப்பு நேற்று வெளியாக இருந்த வேளையில். கையில் சிறிய போத்தல் ஒன்றில் ஒரு வகையான திரவத்தோடு அவர் நீதிமன்றம் வந்திருந்தார்.

பலரும் அது ஏதோ குளிர்பாணம் என எண்ணி இருந்தார்கள். ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நான் போர் குற்றவாளி அல்ல என்று கூறியவாறு  அவர் அதனை அருந்தி கீழே விழுந்தார். இதனை பல சர்வதேச TV க்கள் அப்படியே படம் பிடித்துள்ளார்கள். இன் நிலையில் இன்று அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக் நீதிமன்றத்தில் ,  பல வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் இலங்கை இந்த சட்ட முறைமையில் கைச்சாத்திடவில்லை. இதனால் மகிந்தவை நீதிமன்றம் இழுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் ஒரு நாள் மகிந்தவுக்கும் இன் நிலை தான் தோன்றும்.

அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும், தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது - வடகொரியா

வடகொரியா இன்று பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன, அதையும் மீறி நாங்கள் எங்கள் சோதனையை விடமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்திருந்தது.

உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து சுமார் இரண்டு மாத காலமாக சோதனை மேற்கொள்ளாமல் இருந்த வடகொரியா, எந்த நேரத்திலும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் வடகொரியா இன்று உள்ளூர் நேரப்படி காலை 3.30 மணி அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

அது கிழக்கு நோக்கி பறந்ததாகவும், ஆனால் அது முழுமையாக எந்த வகையில் தயார் செய்யப்பட்டது, எவ்வளவு தூரம் சென்றது என்பது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகொரியா இந்த ஆண்டு பல ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தாண்டு அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா தயார் செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர் வடகொரியா ஒரு அணுசக்தி நாடாக அதன் இலக்கை அடைந்து உள்ளது. தற்போது அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது.

பெருமையுடன் பிரகடனம் செய்கிறோம் இறுதியாக வடகொரியா  அணுசக்தியை நிறைவு செய்யும் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது என வடகொரியா கூறி உள்ளது.

ஏழை நாடுகளில், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி போலி மருந்துகள் விற்பனை

மக்களின் நோய்களை தீர்க்க உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்படும் இவை ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறு விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரையில் 10 சதவீதம் போலியானவை அல்லது நம்பகத்தன்மை இல்லாதவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சார்பில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறை கடந்த 2013-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது சர்வதேச அளவில் 3 கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது 1500 தயாரிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளின் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டுடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோபியா ரோபோ , குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்

சவுதி அரேபியாவின் சோபியா ரோபோ குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்த  நிலையில், இந்த ரோபோ, குடும்பம்தான் `மிகவும் முக்கியமான விஷயம்` என்று தெரிவித்துள்ளது. சோபியா ரோபோ முன்பே பதில்கள் பதிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல. மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து, அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில், இயந்திர கற்றல் திறனை கொண்ட ரோபோ ஆகும்.

அசரவைக்கும் திறமைகள் இருந்தாலும், சோபியாவிற்கு இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோவின் வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன், இன்னும் சில வருடங்களில், ரோபோவிற்கு உணர்வுகள் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கின் `ஹன்சன் ரோபோடிக்ஸ்` நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோ, தன்னுடைய `மகள் ரோபோவிற்கு` தனது பெயரையே வைப்பேன் என்று தெரிவித்துள்ளது.அதன் மூளை சாதாரண வை-பை வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில், வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள சோபியா ரோபோ, "குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது" எனக் கூறியுள்ளது."சொந்த ரத்த வகையைத் தாண்டியும், மக்களால் தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று" என்கிறது.

"உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளது.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோபியாவிடம் கேட்டபோது, `சோஃபியா` என்றே பதிலளித்தது. சோபியா ரோபோவால், கலந்துரையாட முடியும், சிரிக்க முடியும், நகைச்சுவைகளும் சொல்ல முடியும்

ரஜினியும், கமலும் தமிழகத்திற்கு தேவையில்லை - அமீர் ஆவேசம்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு மற்றும் முதுபெரும் தலைவர் கலைஞர் உடல்நிலை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, அரசியல் தளத்தில் கால் பதித்திட முயன்றுவருகின்றனர் திரைத்துறை பிரபலங்கள். அவர்களில் ரஜினியும், கமலும் முதல் இடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணலுக்கு அளித்த செவ்வியில் இயக்குனரும், நடிகருமான அமீர் " தன்னமலற்ற, உண்மையும் நேர்மையும் கொண்ட நபர்களே ; தலைவர்களே தேவையே ஒழிய, தங்களது சுயலாபத்திற்காக திரைத்துறையில் பெற்ற செல்வாக்கினை அரசியல் தளத்தில் அறுவடை செய்திட முயல்பவர்கள் தமிழகத்திற்கு தேவையில்லை. அந்த வகையில் பார்த்தோமெனில், ரஜினியும் கமலும் தமிழகத்திற்கு தேவையில்லை" என தெரிவித்துள்ளார் அமீர்.

Banana Oat Shake Recipe செய்வது எப்படி ?

Banana Oat Shake செய்து பாருங்கள் நம்ம சிறுவர்கள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்கள்  

ஒற்றையாட்சியா? சமஷ்டியா? இணைப்பாட்சியா?

இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள், மக்களால் புனரமைக்கப்படுகின்றன. இதுவரைகாலமும், இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை மனித உரிமைகூட இலங்கையில் மறுக்கப்பட்டு வந்தன. இப்போது இது அனுமதிக்கப்படுவதால், நல்லிணக்கத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரேயடியாக பாராட்டிவிட முடியாது.  காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், நிலத்தை இராணுவத்திடம் இழந்த மக்களும் இன்னமும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

நீண்டகாலச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகுறித்து, இந்த நல்லாட்சி (?) அரசு வேண்டாவெறுப்புடனே நடந்து கொள்கிறது.

‘ ஏதோ சட்டத் சிக்கல் இருக்கிறது, சட்டமா அதிபர் திணைக்களம் பதில் சொல்ல வேண்டும், ரணிலோடு பேசுகிறோம், மைத்திரியோடு தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்கிறோம்’ என்றவாறு தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்து செல்கிறார்கள்.

சிறைக்கைதிகளை சனாதிபதி விடுதலை செய்யும் நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் அரங்கேறுகிறது.
இந்த விவகாரத்தில் மட்டும் நல்லாட்சி அதிகாரவாசிகளுக்கு என்ன பிரச்சினை?.

எதுவித நிபந்தனையுமின்றி, மேற்குலக- இந்திய பிராந்திய நலனிற்கு இசைவாக, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிமாற்றத்திற்கு உதவிய தமிழ் அரசியல் தலைமைகளால், அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியவில்லை என்பது பெருங்கொடுமை.

கூட்டமைப்பிற்குள் இருக்கும் உள்முரண்பாடுகளை தீர்ப்பதில், கோஷ்டி பிரிப்பதில் செலவிடும் பெரும்பகுதி நேரத்தை, மக்கள் முகங்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒதுக்கினால் என்ன என்பதுதான் வெகுமக்களின் கேள்வி.

அடிப்படைப்பிரச்சினைகளிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்கு உள்கட்சி விவகாரம் மற்றும் இடைக்கால அரசியல் யாப்பு முன்மொழிவு என்பன பூதாகரமாக்கப்படுகின்றன.

ஆட்சிமாற்றம் என்பது யுத்தவடுக்களை சுமந்துநிற்கும் மக்களின் வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

பிணைமுறி விவகார திரைக்குள் , எகிறிவரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
இது பற்றியதான ஆழமான பார்வையை, சரியான புள்ளிவிபரங்களோடு அடுத்த பதிவுகளில் முன்வைப்போம்.

தற்போது உத்தேச அரசியல் யாப்பு குறித்தே சமூகவலைத்தளங்களிலும், அச்சு ஊடககங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறது.

‘ அது வரும் ஆனா வராது’ என்பதுபோல்தான் தமிழ் தலைவர்களும் தற்காப்பு நிலையெடுத்துப் பேசுகிறார்கள்.

‘ புரட்சி வெடிக்கும்’ என்கிறார் இன்னுமொரு பழந்தலைவர். கார்த்திகை மார்கழி மாதமானால், தையில் ‘போராட்டம் வெடிக்கும்’ என்பார்.

உள்ளூராட்சி தேர்தல் வருவதால், மாவீரர் புகழ்பாடும் புரட்சி கீதங்களும், மாவீரர்தின அழைப்புகளும் அவரிடமிருந்தே வருகின்றன.

மாவீரர் தினம் முடிந்தவுடன், மீண்டும் யாப்புச் செங்கோல் கையிலெடுக்கப்படும்.
ஒரே கூட்டு பல குரல்களில் பேசும்.

சமஸ்டி இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்பார் ஒருவர்.
வந்தாலும் வரலாம் என்பார் இன்னொருவர்.
எக்கிய ராஜ்யவிற்குள் எல்லாமே ( சமஸ்டி) அடங்கும் என்பார் அரசியல் துறைப் பொறுப்பாளர்.

இந்த ஆரவாரம் தணியும் போது, ‘எக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு, அது ஒற்றையாட்சி என்று அர்த்தப்படாது’என்று பூகோள அரசியல் புது விளக்கம் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

72, 78 இல் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பில், Unitary State , எக்கிய ராஜ்ய, ஒற்றையாட்சி என்றே மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது தமிழில், ஒற்றையாட்சியை ‘ஒருமித்தநாடு’ என்று தன்னிலை விளக்கம் அளிக்கின்றனர் கூட்டமைப்பினர்.
ஆனால் சிங்களச் சொல்லில் எந்த மாற்றமும் இல்லையே..!.

சட்டத் சிக்கல் ஏற்படும்போது, எந்த மொழிச் சொல்லை நீதிமன்றம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளும்??.

‘எக்கிய ராஜ்ய’ என்கிற சொல்லாடல் ஒருமித்த நாடா? இல்லையா? என்பதற்கு அப்பால், அந்த ஒருமித்தநாட்டில் ஒற்றையாட்சியா? என்பதுதான் இங்கு விவாதத்திற்கூறிய விவகாரமாக இருக்கிறது.

அரசியலமைப்பானது எந்த அரசியல் யாப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

சகல சட்டமியற்றும் அதிகாரங்களும், நாடாளுமன்றத்திடம் குவிந்திருக்கும் ஒற்றையாட்சியா?, அல்லது இரு தேசங்களின் இறைமையை ஏற்றுக் கொண்ட கூட்டு ஆட்சியா ( confederation) ? அல்லது 2009 ஆகஸ்டில் தமிழ் தலைமையால் முன்வைக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியமா? என்பதனை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னும் இலகுவாகச் சொல்லப்போனால், ஒருமித்த நாட்டிற்குள் இருக்கும் ஆட்சி முறைமை என்ன?.

தீர்வினை நோக்கிய நேர்மையான உரையாடலில், ‘எக்கிய – ஒருமித்த’ போன்ற திசைதிருப்பல் வாதங்கள் தேவையற்றது.

ஆட்சி முறைமை என்ன?.

இதற்கு விடை சொன்னால் போதும்.

ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! பிரபாகரன்

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று.  இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது, வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னையும் தொட்டுச் சென்­றி­ருந்தார். அவ­ரது உரையின் முக்­கி­ய­மான பகுதி அது.
“பிர­பா­க­ர­னிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிர­பா­கரன் உரு­வா­கி­யதால் தான், பீல்ட் மார்ஷல் ஒரு­வரும் உரு­வானார்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.
2011ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, நோர்­வேயின், இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும், அமெ­ரிக்­காவின் முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்­மி­ரேஜூம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை ஒரு சிறந்த போரியல் வல்­லுனர் – இரா­ணுவ மேதை என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
ஆனாலும், பிர­பா­க­ரனின் அர­சியல், இரா­ஜ­தந்­திர ஆளு­மையை அவர்கள் அந்­த­ள­வுக்கு சிறப்­பாக மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.  எனினும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின், போரியல் ஆளுமை என்­பது, எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாத ஒன்­றா­கவே இருந்­தது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒன்றும் பிர­பா­க­ர­னுக்கு புக­ழாரம் சூட்­டு­வ­தற்­காக, பாரா­ளு­மன்­றத்தில் அந்தக் கருத்தைக் கூறி­யி­ருக்­க­வில்லை. அது பிர­பா­க­ரனின் போரியல் ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும், அங்­கீ­க­ரிக்கும் கருத்து என்­பதில் சந்­தே­க­மில்லை.
இன்று இலங்­கையின் முப்­ப­டை­களும் அதி­ந­வீன ஆயு­தங்கள், போர்த்­த­ள­வா­டங்­க­ளுடன் இருக்­கின்­றன என்றால், மூன்று இலட்சம் படை­யி­னரைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது என்றால், அதற்கு ஒரே காரணம் பிர­பா­கரன் தான்.
அதனால் தான், பிர­பா­க­ர­னிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.
போர் தொடங்­கிய போது, வெறும் 10 ஆயிரம் படை­யி­னரே இலங்­கையில் இருந்­தனர். அப்­போது எந்த நவீன போர்த் தள­வா­டங்­களும் படை­யி­ன­ரிடம் கிடை­யாது. போருக்­கான ஆயத்­த­நி­லையும் இல்லை.
இருந்­தாலும், மர­புசார் பயிற்­சி­களைப் பெற்ற ஓர் இரா­ணுவம் இருந்­தது. அதனை எதிர்­கொண்டு தான் பிர­பா­கரன் தனது போர் ஆற்­றலை வளர்த்துக் கொண்டார்.
பிர­பா­கரன் எங்கும் போர்க்­க­லையைக் கற்­க­வில்லை. எந்த நாட்­டி­டமும் பயிற்­சி­களைப் பெற­வில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவே, பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அள­வுக்கு அவ­ரது போர் ஆளுமை அமைந்­தி­ருந்­தது.
இலங்கை இரா­ணுவம் இப்­போது, உலகில் கவ­னிக்­கத்­தக்க ஓர் இரா­ணு­வ­மாக இருக்­கி­றது என்றால்,  இலங்கை இரா­ணு­வத்­திடம் போர் அனு­ப­வங்­க­ளையும் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள பல நாடுகள் முற்­ப­டு­கின்­றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிர­பா­க­ரனின் போர் ஆளுமை மட்டும் தான்.
அந்த ஆளு­மையைத் தோற்­க­டித்த ஒரே கார­ணத்­தினால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்­தது. வெளி­யு­லக ஆத­ரவு இல்­லாமல் ஒரு படைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்கி, சர்­வ­தே­சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அள­வுக்கு அதனைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார் பிர­பா­கரன். பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படை­யினர் தான் இருந்­தனர். இப்­போ­துள்ள 3 இலட்சம் படை­யினர் இருந்­தி­ருந்தால், இரண்டு ஆண்­டு­களில் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்போம் என்று கூறி­யி­ருக்­கிறார்.
இலங்கை இரா­ணு­வத்­துடன் போரைத் தொடங்­கிய போது, விடு­தலைப் புலி­களும் ஒன்றும் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையோ, மிகப்­பெ­ரிய ஆயுத தள­வா­டங்­க­ளையோ, நவீன போர்க்­க­ரு­வி­க­ளையோ, சண்­டைப்­ப­ட­குகள், விமா­னங்­க­ளையோ கொண்­டி­ருக்­க­வில்லை.
ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர் புலி­களால் தொடங்­கப்­பட்­டது. குறைந்­த­ளவு போரா­ளி­களே இருந்­தாலும், இரா­ணு­வத்தின் செறிவு குறை­வாக இருந்­தமை, புலி­க­ளுக்குச் சாத­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.
அதனால் தான், இப்­போ­துள்ள படை­ப் பலம் இருந்­தி­ருந்தால் இரண்டு ஆண்­டு­களில் போரை முடித்­தி­ருக்­கலாம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.
எனினும், படை­பலம் மாத்­தி­ரமே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்­றி­கொள்­வ­தற்கு சாத­க­மான அம்­ச­மாக இருந்­தது என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. மூன்­றா­வது கட்ட ஈழப்­போரில் கூட, இரண்டு இலட்சம் படை­யி­ன­ருடன் தான் அர­சாங்கம் இருந்­தது.
ஆனாலும் புலி­களை அப்­போது தோற்­க­டிப்­ப­தற்­கான சூழலும், உத்­தி­களும் வாய்க்­க­வில்லை.
பிர­பா­க­ர­னிடம் இருந்து போரிடும் முறை­களை மாத்­திரம் இரா­ணுவம் கற்றுக் கொள்­ள­வில்லை. பல ஆயு­தங்­களின் அறி­மு­கமும்  கூட இரா­ணு­வத்­துக்கு புலி­களால் தான் கிடைத்­தி­ருந்­தது.
1985ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி, அச்­சு­வே­லியில் புலி­களின் முகாம் ஒன்றை இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்­தனர். அது ஓர் ஆயுதக் களஞ்­சி­ய­மா­கவும் விளங்­கி­யது. அங்­கி­ருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்­மு­த­லாக இரா­ணு­வத்தின் கையில் கிடைத்­தது.
அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெரு­ம­ளவில் இரா­ணுவம் வாங்கிக் குவித்­தது. அது­போல பல ஆயுத தள­வா­டங்­களை விடு­தலைப் புலிகள் போரில் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னரே, இரா­ணு­வத்­தினர் அதனை வாங்க முயன்­றனர்.
சாம் எனப்­படும் விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் தான் விமா­னப்­படை வாங்­கி­யது. பல்­குழல் பீரங்­கி­க­ளையும் விடு­தலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்­கையில் பயன்­ப­டுத்தத் தொடங்­கினர்.

காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட காதலனுக்கு, காத்திருந்த அதிர்ச்சி

லண்டனில் 29 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட போது அவரது பார்வை பறிபோய் பின்னர் மீண்டுள்ளது.

செக்ஸ் வீரியத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தும் வயாகரா மாத்திரையால் கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

வயாகரா மாத்திரையில் சில்டெனாபில் என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள மூலப்பொருட்கள் கண்விழித்திரையில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.

இதனால் கண்பார்வை பாதிப்புக்கும், பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி செல்களை கொன்று பார்வையை படிப்படியாக குறைத்து பின்னர் முழுவதும் பறிபோக செய்யும்.

இந்த சோதனை நல்ல உடல் நலத்துடன் இருந்த சுண்டெலிகளில் நடத்தப்பட்டது. வயாகரா மாத்திரை கொடுத்த 2 நாளிலேயே அவற்றின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

குறித்த இளைஞன்  உறவில் ஈடுபட்ட போது தனது பார்வை பறி போனதையடுத்து பதறி,  உடனடியாக வைத்தியரை நாடியுள்ளார். குறித்த    இளைஞனை பரிசோதித்து அந்த நபரின் பார்வை குறைபாட்டை வைத்தியர்கள் சரி செய்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் தனது காதலியை இரு கண்களால் காதலியை கண்ட குறித்த இளைஞரும் அவரது காதலியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல், 184 பேர் பரிதாப பலி

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 184 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிராத்தனைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




இரண்டாம் இணைப்பு..


கெய்ரோ: எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டான். அந்த மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 235 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்குமு் மேற்பட்டேர் காயமடைந்தனர்.


எகிப்து வரலாற்றில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இது தான் மிகப்பெரிய தாக்குதல் என அந்நாட்டு டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.


தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி, உயரதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்றுநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாவும், விமான நிலையங்கள், மக்கள் கூடும் வழிபாட்டு தலைங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது தெரியுமா..?

தமிழகத்தைப் போல் இலங்கையிலும் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் இலக்கியங்களை மூன்று பிரிவுகளாகக் கருதுகிறார்கள் நமது தமிழ் அறிஞர்கள்.

இலங்கையில் தமிழர்கள் வாழத் துவங்கிய காலத்தில் இருந்து கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை ஒரு பிரிவு, 17-ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மற்றும் புராணங்கள் இரண்டாம் பிரிவு, விடுதலைக் காலம் என்ற மூன்றாம் பிரிவும் இருக்கிறது.

இவையெல்லாம் அந்தந்த கால கட்டத்தில் உருவாக்கப் பட்ட, இலக்கிய, புராணப் பொக்கிஷங்கள். துவக்க கால இலக்கியங்களைக் குறித்துப் பார்க்கும் போது, அது குறித்து குறைவான தகவல்கள் தான் கிடைத்துள்ளன.

சங்க காலத்து இலங்கைப் புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்பவர் எழுதிய இலக்கியங்கள் மிகவும் தொன்மையானதாகவும், புகழ் பெற்றவையாகவும் இருந்திருக்கின்றன. அப்போது, இலங்கை தனி நாடாகப் பிரிக்கப் படாமல், தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியாகவே இருந்தது.
இன்று தனி நாடாக இருக்கும் இலங்கை அன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து சங்க இலக்கியங்களை போலவே அங்கும் தமிழ் இலக்கியத்திற்கு என்று தனி வரலாறே இருக்கிறது.
உலகம் எங்கிலும், நமது தமிழ் இலக்கியங்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
 
இவர் எழுதிய நூல்களைப் பற்றி, தொன்மையான இலங்கைக் கல்வெட்டில் வெண்பா அமைப்புடன் கூடிய பாடல் ஒன்று கிடைத்துள்ளது.
இதன் பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட மூன்றாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில், இலங்கையில் உருவாக்கப் பட்ட “சரசோதி மாலை” என்ற நூலின் ஏடு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டு, இலங்கையில் உருவான இலக்கியங்ளைப் பற்றி நமக்கு தகவல் கிடைக்கின்றன.

இதனை அடுத்து போர்ச்சுக்கீசியாகளின் ஆட்சிக் காலத்தில்; கி.பி.1505-லிருந்து 1658 ஆண்டு வரையிலும், இவர்களை அடுத்து இலங்கையில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தியரின் ஆட்சிக் காலமான, கி.பி. 1658-லிருந்து 1796 வரையிலும்,  மூன்றாம் காலமான விடுதலைக் காலம் என்று குறிப்பிடக் கூடிய காலமான 1796-லிருந்து 1948-வரையிலான கால கட்டத்திலும், பல் வேறு அற்புதமான இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன.
 
இவர்களில் ஆங்கிலேயர்களும், பல சைவ சமய அறிஞர்களும், ஏராளமான தமிழ்ப் பணி ஆற்றியுள்ளனர். இந்த மூன்று வகையான கால கட்டங்களில், ஏகப்பட்ட இலங்கையின் தலப் புராணங்களும், சிற்றிலக்கியங்களும், கிறிஸ்துவ இலக்கியங்களும் தோன்றின.

ஆங்கில மொழியின் வாயிலாகவும், தமிழ் மொழியின் பெருமையைப் பிறர் அறியச் செய்திருக்கிறார்கள். இது வரையில், சுமார் 40 புராணங்கள் இலங்கையில் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை தல புராணங்கள் தான்.

இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியமான தலங்களைப் பற்றிய புராண நூல்கள் இவை. தட்சண கைலாச புராணம், திருக்கரை புராணம், திரிகோணாசல புராணம், கதிர்காம புராணம், திருக்கேதீச்சரப் புராணம், நகுலாசல புராணம், போன்ற சில புராணங்கள், தலப்புராணங்களாக உள்ளன. இது தவிர, சிவராத்திரி புராணம், சீமந்தனி புராணம், விநாயக கட்டி புராணம் போன்றவை தெய்வங்களின் மேன்மை பற்றியும், அவர்களது புராணங்களைப் பற்றியும், பக்தி மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.
 
இவையெல்லாம் மரபு வழிப் புராணங்கள் எனப்படுகின்றன. இந்த மரபு வழியிலிருந்து மாறுபட்டு மூன்று புராணங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையிலும், தமிழகத்தில் பெருமளவு காணப்படும் பனைமரத்தின் பெருமைகளைப் பற்றியும், இந்த மரத்தில் ஏறுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் பற்றியும், காசிநாதப் புலவரின் தலப் புராணம் விரிவாகக் குறிப்பிடுகிறது.

இலங்கையில் இயற்றப் பட்ட புராணங்களில் மிக வித்தியாசமானது, ராமலிங்கம் என்ற புலவர் எழுதிய கோட்டுப் புராணம் என்று கருதப் படுகிறது. இதில் இறைவனின் இயல்பு நிலை, மனிதனின் வாழ்வியல் நிலையினைப் பற்றியும், புலவர் அவரது கண்ணோட்டத்தில் சுவைபட எழுதியிருக்கிறார்.

மூன்றாவதாக உள்ள சனகி புராணத்தை எழுதியவர், வண்ணார் பண்ணை சுப்பையா என்பவர். இவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சனகி என்ற உண்மையான தேவதாசியை மையமாகக் கொண்டு சனகி புராணத்தை எழுதியிருக்கிறார்.

இவருடைய சம காலத்தில் வாழ்ந்த சனகியைப் பற்றியும், தேவதாசிகளின் பிரச்சினைகளைப் பற்றியும் விரிவாக, தனது சனகி இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
இலங்கையின் தமிழ் இலக்கியங்களும் நெடிய வரலாற்றைக் கொண்ட பெருமை உடையவை.
இந்த இலக்கியங்கள் எல்லாம், நம் தமிழர்களுக்கு இன்னும் பெருமை சேர்ப்பதாகத் தான் இருக்கிறது.
உலகெங்கும் விரவி இருந்த இனம் இன்று ஒரு கோடியில் சுருங்கி கிடக்கிறது. இங்கிருந்த அறிவியல் எல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று மேலை நாடுகளில் மிளிர்கிறது.
இதுவா நம் அடையாளம்..?

திருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர் பேரரசு..!

முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், விஜயகாந்த், அர்ஜுன் என பலரை இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசுவின் தற்போதைய நிலை என்றால் சற்று ஷாக் ஆகித்தான் போவீர்கள்.
உதவி இயக்குனராக இருக்கும் போதே திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் பேரரசு. பிறகு, விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற ஒரு படத்தை எடுத்து ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். கையில் பணம் புரள ஆரம்பித்தது. காசு இல்லாதபோது தன்னை மட்டுமே நம்பி வந்த மனைவி தற்போது பட்டிகாட்டு பெண்ணாக தோன்றுகிறார்.
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மல்லிகாவுடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் மல்லிகாவின் வீட்டிலேயே தங்கும் அளவுக்கு வளர்ந்தது அவர்களின் நெருக்கம். விஷயம் மனைவிக்கு தெரியவே, விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்கிறார். நீதிமன்றம் விவாகரத்தையும் வழங்கி, மாதம் ரூபாய் 15,000 மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட்டது.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடும் மனஉழைச்சலுக்கு ஆளான இயக்குனர் பேரரசு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியாமலும், நல்ல நடிகரின் கால்ஷீட் கிடைக்காமலும் தவித்து வருகிறார். முன்னணி இயக்குனர் அந்தஸ்தில் இருக்கவேண்டிய ஒரு இயக்குனர் தனது சிறுபிள்ளைத்தனமான வேலையால் வாழ்கையை இழந்து, நல்ல வாழ்க்கை துணையை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார் என்பது வேதனை.
சினிமாவை பார்த்து மட்டுமல்ல, இப்படியானவர்களின் வாழ்கையை பார்த்தும் நமக்கான வாழ்க்கை பாடத்தை கற்றுகொள்ளலாம். காசு, பணம் வந்துவிட்டால் தலைகீழாக ஆட்டம் போடகூடாது, கட்டிய மனைவியே கடைசிவரை என்று வாழ்வதே சிறப்பு.

புதிய சதி திட்டம்?

வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரனின் பதவியை பறிப்பதற்கான முழு வீச்சில் வட மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கல்வி அமைச்சராக உள்ள க. சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் மாகாண சபை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகி தற்போது அமைச்சராகி உள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தாம் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிட மாட்டோம் எனவும் பொது கூட்டணி அமைத்து , தமிழ் மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துடன் பொது சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையிலையே தமிழ் தேசிய கூட்டமைப்பில் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான, சர்வேஸ்வரன் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லை எனில் அவரின் அமைச்சு பதவியை பறிக்க வேண்டும் என மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சரை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

அதேவேளை கல்வி அமைச்சு பதவியை அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் இருந்து தமிழரசு கட்சிக்கு மாறிய முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனுக்கு அதனை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை

உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது. போர் தொடுத்தால் அமெரிக்காவை ஏவுகணைகளால் தகர்ப்பதாகவும் மிரட்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமெரிக்காவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக கூறினார். தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரான், சூடான், சிரியா போன்ற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் இணைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் வடகொரியா மீதான கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. வடகொரியாவுடன் பல கோடி ரூபாய்க்கு வர்த்தக தொடர்பு வைத்துள்ள ஒரு தொழிலதிபர், 13 நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை தடுத்து அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் அந்த நாட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் அபராதம் மற்றும் தடை விதிக்கப்படும் என்று நிதித்துறை மந்திரி ஸ்டீவன் முனுசின் 

தொடர்ந்து பின்வாங்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இதற்கிடையில், நடிகர் கமலும் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து விட்டதால், ரஜினிகாந்த் எப்போது அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த்,” அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை. எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதிக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க உள்ளேன். காலா படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செல்வாவின் வழியிலேயே சிங்கக்கொடியைப் புறக்கணித்தேன்! – சர்வேஸ்வரன்

சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக்கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என தந்தை செல்வா கூறியிருந்தார். அவரின் வழியிலேயே நான் அதனை ஏற்ற மறுத்தேன் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவர் ‘இலங்கையின் தேசியக்கொடியாக வடிவமைக்க்பபட்ட வாளேந்திய சிங்கம் பதிக்கப்பட்ட சிங்கக்கொடி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்ற கொடியாக இருப்பதால், அதனை நாங்கள் தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று 1950 இல் தந்தை செல்வா கூறியிருந்தார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமன்றி எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான ஒவ்வொரு பேச்சுக்களின் போதும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேசுகின்ற போது தேசியக்கொடியை மாற்றுகின்ற விடயம் குறித்து பேசப்பட்டுள்ளன.

தேசியக்கொடி என்பது ஒரு பிரச்சினையாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த 60 ஆண்டுகால வரலாற்றில் எமக்குத் தெரிந்த மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகளாக இருந்தாலென்ன,விடுதலைப்போராட்ட இயக்கங்களாக இருந்தாலென்ன, அதற்குப்பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலென்ன ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர் தந்தை செல்வாவின் கொள்கையைப் பிரதி பலிக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்ற உறுதியான கொள்கையுடனேயே செயற்பட்டு வருகின்றனர்.

அதனால்,அதற்கான எதிர்ப்பையும் காட்டிக்கொண்டிருக்கிறோம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக்கூட்டத்தில் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவருக்கருகில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சம்பந்தன் தேசியக்கொடியை கையிலே வைத்து ஆட்டுகின்ற படங்கள் பத்திரிகையிலே வெளிவந்தன.

அதனைப்பார்த்த பின்னர் பத்திரிகைகளில் பல்வேறு கண்டனங்களும், மிகக்கடுமையான விமர்சனங்களும் வந்தன. அதேவேளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தேசியக்கொடியை சம்பந்தர் கையில்வைத்து ஆட்டியதைப்பார்த்து மிகப்பெரிய விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களுக்குப்பதிலாக அடுத்த நாளே சம்பந்தருடைய சார்பிலே தான் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று இப்போது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராசா அறிக்கைவிட்டார். ஆகவே அன்று சம்பந்தர் கொடி ஏற்றியது தவறு என்று அறிக்கை விட்டு மன்னிப்பு கோரிய போது அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத சிங்கள இனவாதம் இன்றைக்கு அதனைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ச இருக்கின்ற போது சிங்கக்கொடியை ஆட்டியது தவறு என்று கூறிய தமிழரசுக்கட்சி இன்று மைத்திரி ஆட்சியில் அந்தக்கொடி ஏற்ற மறுத்தமை தொடர்பில் மௌனம் சாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த விடயத்தை தூக்கிப்பிடிப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதால்,அரசு மீண்டும் தேசியக்கொடி தொடர்பில் ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது.

இப்போது இருக்கின்ற சிங்களத்தலைவர்கள் சிலர் இது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்று பேசுகின்றனர். அரசியலமைப்பின் மீது நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம். அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து விட்டு நாங்கள் அதை மீறுவதாக கூறியிருக்கின்றனர். இது தவறான விடயம் என்று கூறுகிறேன். ஏனெனில் இந்த அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் நாட்டின் ஜனாதிபதியும் வருகிறார். இந்த அரசியலமைப்பை நான் போற்றிப்பாதுகாப்பேன்,அவற்றை நடைமுறைப்படுத்துவேன் என்று தான் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட அனைவருமே சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் யாப்பிலே 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கான பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்க மாட்டேன் என்று ஏற்கனவே இருந்த ஜனாதிபதிகளும், இப்போது இருக்கின்ற ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே திரும்பத்திரும்ப கூறிவருகின்றனர். ஆகவே அரசியல் யாப்பிலே கொடுத்திருக்கக்கூடிய பொலிஸ் காணி அதிகாரங்களை நான் நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று சொல்வது அரசியல் யாப்பை மீறுகின்ற ஒரு செயலாக இவர்களுக்குத் தெரியவில்லையா.? ஆகவே இவ்வாறு அவர்கள் பகிரங்கமாகவே அரசியல் யாப்பை மீறுகின்ற போதெல்லாம் வாய் திறக்காதவர்கள் இன்று சிங்கச் சின்னம் பொறித்த கொடி ஏற்றவில்லை என்பதற்கு மட்டும் வாய் திறப்பதென்பது இன்று இருக்கக்கூடிய முக்கியமான அரசியல் விடயங்களில் இருந்து மக்களை திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த சமரசிங்க உரையாற்றுகையில், “வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தேசியக்கொடியை ஏற்றாமல் புறக்கணித்திருக்கிறார். ஆகவே நாங்கள் எப்படி அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியும்” என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படி கேள்வி கேட்கின்ற போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாரேனும் அதற்குப்பதில் சொல்லவில்லை. அதனுடைய அர்த்தம் என்ன? அவர்கள் அனைவரும் இந்த தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டு விட்டார்களா? அல்லது தமிழரசுக்கட்சி தந்தை செல்வா என்று சொல்லிக்கொண்டு செல்வாவின் கொள்கைகளை குழி தோண்டிப்புதைத்து விட்டதா?

இன்றைய ஊடகங்களிலே இந்த விடயம் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் சரி,வெளியிலும் சரி வாய் மூடி மௌனிகளாக இருப்பது இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்விக்கான பதில்களை எங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து பெறவேண்டும் – என்றார்.

மெர்சல் படத்தை மிஞ்சிய கதை

டெங்குவுக்கு பலியான சிறுமியின் சிகிச்சைக் கட்டணமாக இலங்கைப் பெறுமதியில் சுமார் முப்பத்தைந்து இலட்ச ரூபாவைக் கோரிய வைத்தியசாலை மீது சமூக வலைதளங்கள் உட்பட பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் வசித்து வந்த அத்யா சிங் (7) என்ற சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் டெங்குவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சைகளுக்காக அவர் ‘ஃபோர்டிஸ்’ என்ற தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அத்யாவைக் காப்பாற்ற முடியவில்லை. ஏழு வயது மகளைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த அந்தக் குடும்பத்தாரிடம் இந்தியப் பெறுமதியில் பதினாறு இலட்ச ரூபாய் கட்டணமாகச் செலுத்துமாறு இருபது பக்கங்கள் அடங்கிய பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது. இதனால் நொறுங்கிப்போன அந்தக் குடும்பம், வேறு வழியின்றி குறித்த கட்டணத்தைச் செலுத்தியது.
இந்த விவகாரத்தை அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர் ட்விட்டரில் அண்மையில் வெளியிட்டிருந்தார். வெளியான சில நிமிடங்களில் பத்தாயிரம் முறைக்கும் மேலாக அந்த ட்வீட் மீள்பதிவிடப்பட்டது. மேலும், குறித்த வைத்தியசாலை மீதான கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
“எனது மகளின் உயிரற்ற உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒரு அம்பியுலன்ஸைத் தரவும் வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துவிட்டது. மகள் இறக்கும்போது அணிந்திருந்த வைத்தியசாலையின் ஆடையையும் தம்மிடம் ஒப்படைக்கும்படி கூறியது எம்மை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது” என்று அத்யாவின் தந்தை ஜெயந்த் சிங் தெரிவித்துள்ளார்.

உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம்

மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு – தமிழ்நாடு என்ற பெயர் சூட்டலை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்கொடுத்த – , ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு மாத காலம் சட்டப் போராட்டத்தினை நீதிமன்றத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது.

இந்த கூட்டத்தின் போது உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த தோழர் பகத்சிங் உள்ளிட்ட 8 தோழர்களுக்கும், இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் புலவர் மறவர்கோ மற்றும் ஜெயராமன் ஆகியோருக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினால் சென்னையில் நடத்தப்பட்ட பூணூல் எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தோழர் தமிழ்ப்பித்தன் அவர்களுக்கும் மே பதினேழு இயக்கம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் உயிர் நீத்த மே பதினேழு இயக்கத் தோழர் ஆட்டோ நாகராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தினில் மதுரையைச் சேர்ந்த பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் தோழர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தேர்தல் அரசியல் மட்டுமே அரசியலல்ல. இயக்க அரசியல் தமிழ்நாட்டில் வலிமையாக வேண்டியதன் அவசியத்தினை எடுத்துரைக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.
த மிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், அவற்றினை மீட்டெடுக்க நாம் ஒன்று கூட வேண்டியதன் அவசியம் குறித்தும், தற்சார்பு தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்தும், அதற்கு முதல்கட்டமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவையும், தேவைகளையும் குறித்து தோழர்கள் விரிவாக உரையாற்றினார்கள். தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், மே பதினேழு இயக்க தோழர்கள் மெய்யப்பன், முகிலன், செல்வா ஆகியோரும், மே பதினேழு ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார், லெனாகுமார், அருள்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். மே 17 மதுரையில் இயக்கத் தோழர் கிட்டு நன்றியுரையாற்றினார்.

மேலும் மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தோழர்களுக்கு துணை நின்ற தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் மே பதினேழு இயக்கத்தின் மாத இதழான “மே பதினேழு இயக்கக் குரல்” பத்திரிக்கை மதுரையில் அறிமுகம் 

ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்ய முடியாது..!

ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாத காரியம் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ப்ளூவேல் விளையாட்டால் பலர் பலியாதை அடுத்து இது போன்ற விளையாட்டுக்களை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்களை தடை செய்யாதது ஏன் எனவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதில், ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய முடியாது. ஏனெனில் அவை ஆப்ஸ் சார்ந்த விளையாட்டுக்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலில் திருப்தி அடையாத தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இது போன்ற மரணத்தை விளைவிக்கும் விளையாட்டுக்கள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தும் படி தெரிவித்துள்ளது.

மேலும், ப்ளூவேல் விளையாட்டு ஒரு தேசிய பிரச்னை. மாநிலங்களில் இயக்கப்படும் தூர்தர்ஷன் மற்றும் தனியார் டிவி சேனல்களும் இத்தகைய மரண விளையாட்டுக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு உதவ வேண்டும் என தனது முந்தைய கருத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இத்தகைய விளையாட்டுக்களால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தும் வகையிலான பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


வல்லாரை சாம்பல் செய்வது எப்படி ?

வல்லாரை மாணவர்களிற்கு மிகவும் உகந்தது அத்துடன் பல மருத்துவ குணம் உள்ளது 

சோழர்கள் காலத்து பழைமையான கழிவறைகள்

சோழர்கள் காலத்து பழைமையான கழிவறைகள்

த.தே.ம முன்னணி அ.இ.த.காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா இன்று சங்கரத்தை வீதி, வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.

வட்டு மண்ணின் மைந்தன் பிரபல இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களது தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
இன்று சனிக்கிழமை (18-11-2017) பிற்பகல் 3.30 மணியளவில் மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. அலுவலகத்தின் பெயர் பலகையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அலுவலக பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, சிறப்பு உரைகள் இடம்பெற்றது. தலைமை உரையினை சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் நிகழத்தினார்.
தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராஜா, சட்டத்தரணி அர்ச்சுனா, சட்டத்தரணி றோய், மண்டைதீவு மகா வித்தியாலய அதிபர் திரு. சிவகுரு இளங்கோ, கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடலியடைப்பு பொது அமைப்புக்கள் சார்பாக திரு தனராஜ், உட்பட பலர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

சென்னைப் பெண்ணுக்கு, அமெரிக்காவில் கிடைத்த உயர் பதவி

சென்னையை சேர்ந்தவர் ஷெபாலி ரங்கநாதன் (38). இவர் அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை சீட்டில் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜென்னி டர்கன் நியமித்துள்ளார். இவர் ஒரு பொதுச் சேவை அமைப்பின் செயல் தலைவராக இருக்கிறார்.

ஷெபாலி ரங்கநாதன் பொதுச் சேவை அமைப்பின் செயல் இயக்குனராக பணிபுரிகிறார். இவரது சேவை மற்றும் செயல்பாட்டை கருத்தில் கொண்டு துணை மேயர் பதவிக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஷெபாலியின் தந்தை பெயர் ரங்கநாதன். இவரது தாயார் ஷெரில். இவர்கள் சென்னையில் தங்கியுள்ளனர். பள்ளிப்படிப்பை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட்டில் ஷெபாலி முடித்தார்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. உயிரியல் பட்டப்படிப்பு முடித்தார். அண்ணா பல்கலைக் கழகத்தில் சுற்றுப்புற சூழல் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.

கடந்த 2001-ம் ஆண்டு மேற்பட்ட படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இவர் சென்னை படகு கிளப்பில் நடந்த பல்வேறு படகு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

எலிசபெத் மகாராணி பற்றிய, நீங்கள் அறிந்திராத விடயங்கள்

பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும்.
ஓட்டுனர் உரிமம்

பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத் மகாராணி பெயரில் தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மகாராணி வாகனம் ஒட்ட ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க தேவையில்லை.
கடவுச்சீட்டு

விமானத்தில் பயணம் செய்ய கடவுச்சீட்டு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், எலிசபெத் மகாராணிக்கு மட்டும் அது தேவையில்லை.
தனி ஏ.டி.எம்

அரச குடும்பம் மட்டும் உபயோகப்படுத்துவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனை கீழ் தளத்தில் அவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிறந்தநாள்

எலிசபெத் மகாராணி பிறந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஒரு பிறந்தநாளும், வருடா வருடம் யூன் மாதம் சனிக்கிழமை இன்னொரு பிறந்தநாளும் கொண்டாடப்படும்.
வானிலையை கருத்தில் கொண்டு ராணுவ அணி வகுப்பு நடத்த இவ்வாறு செய்யப்படுகிறது.
சட்டம் இயற்றும் உரிமை

எந்த சட்டத்தையும் ஒரு உண்மையான சட்டமாக மாற்றுவதற்கு ஒப்புதல் தேவை. முன்மொழியப்பட்ட ஒரு சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டவுடன், எலிசபெத் மகாராணியின் பார்வைக்கு வரும். அதற்கு மகாராணி ஒப்புதல் அளித்தால் தான் குறித்த சட்டம் நிறைவேறும்.
வரி கட்ட தேவையில்லை

எலிசபெத் மகாராணி எந்தவொரு வரியையும் கட்ட தேவையில்லை. ஆனால் தானாக முன்வந்து அவர் வருமான வரி மற்றும் மூலதன ஆதாய வரியை தவறாமல் கட்டி வருகிறார்.
அவுஸ்திரேலியா கெளரவ தலைவர்

அவுஸ்ரேலியா நாட்டின் கெளவர தலைவராகவும் எலிசபெத் மகாராணி இருப்பதால், அந்த அரசுக்கு எதிரான நடவடிக்கையை கூட அவரால் எடுக்க முடியும்.
அன்னப்பறவை, டால்பின்கள்

பிரித்தானியாவின் பொது வெளி தண்ணீரில் இருக்கும் அன்னப்பறவைகள், டால்பின்கள், திமிங்கலங்கள் ஆகியவை எலிசபெத் மகாராணிக்கே சொந்தமாகும்.

மஞ்சள் பூசிய பொண்ணுங்கள, பசங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்..!

மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு தலையில் மல்லிகைப்பூ என மங்களகரமாய், இயற்கை அழகோடு இருக்கும் பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.

அளவிற்கு அதிகமாக மேக் அப் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, லிப்ஸ்டிக் போட்டிருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஆடை விஷயத்திலும் கண்களை உறுத்தாத எளிமையான உடை அணிந்த பெண்களையே ஆண்கள் விரும்புகின்றனர். இயற்கை நிறத்தை வெளிப்படுத்தும் முகமும், எளிமையான உடையும் அணிந்த பெண்களே ஆண்களின் மனதில் இடம் பிடிக்கின்றனராம்.
சினிமாவிலோ, சாதரணமாகப் பார்த்து ரசிக்கவோதான் மேக் அப் அணிந்த பெண்கள்.

மனதின் அழகை வெளிப்படுத்துவதில் பெண்களின் கண்களுக்கு தனி இடம் உண்டு. இயற்கையான அழகை வெளிப்படுத்தும் காந்தம் போன்ற கண்களைக் கொண்ட பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். எனவே கண்களுக்கு அளவுக்கு அதிகமான மை தீட்டி ஆண்களை பயமுறுத்துவதை தவிர்க்கவேண்டும்.

அதேசமயம் கண்ணுக்கு மை இல்லாமலும் இருக்கக்கூடாது. அது முகத்தையும் சேர்த்து பொலிவிழக்கச் செய்யும்.அதேபோல் அடிக்கும் அளவுக்கு அதிகமாக லிப்ஸ்டிக் போடாமல் சாதாரணமாக லிப் கிளாஸ் உபயோகிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் நிறைந்த இயற்கை அழகான பெண்களே ஆண்களை கவர்கின்றனர். எனவே மேக் அப் போட்டு போனால்தான் அனைவரையும் கவரமுடியும் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம்.

பெண்கள் தங்களின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாகச் சென்றாலே ஆண்களுக்கு பிடிக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

கத்தோலிக்க பாதிரியாராக இருந்த பாதர் ராபர்ட் இளங்கோவை தேவன் சந்தித்தது எப்படி ?

ஒரு கத்தோலிக்க பாதிரியாராக இருந்த  பாதர் ராபர்ட் இளங்கோவை தேவன் சந்தித்தது எப்படி ? அருமையான சாட்சி கத்தோலிக்க சபை விசுவாசிகளே விழித்தெழுங்கள்

வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்குமாறு சீனா அதிகாரிகள் வலியுறுத்தல்


பீஜிங் : சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. உலகின் மிகப் பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கிய நாடு சீனா. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி வந்த பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை போக்கி, தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள செய்வதற்காக ஏராளமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தென்கிழக்கு சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வீடுகளில் அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏசு அவர்களை வறுமையில் இருந்து வெளிக் கொண்டுவரவோ, நோய்களில் இருந்து காப்பாற்றவோ மாட்டார் என்றும், ஆனால் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு, காரணம் என்ன ?

நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன்   தெரி­வித்­துள்ளார்.
இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு  எமது சட்­ட­ரீ­தி­யான  நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை  அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று  எம்­மவர்  நினைத்தால் அது முற்­றிலும் தவ­றா­ன­தாகும்.
தமிழ் மக்கள் போரில் தோல்­வி­ய­டை­ய­வில்லை.    இன்­றைய தமிழ் தலை­மைத்­துவம்  நாம் தோற்­று­விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­திற்கு முத­லிடம் கொடுக்­கவும் ஒற்­றை­யாட்­சியின் கீழ்  சிங்­கள பேரி­ன­வா­தத்­திற்கு   இடம் கொடுக்­கவும்   வடக்கு, கிழக்கை இணைக்­காது  விடு­வ­தற்கு தயார் என்றும்  தன்­னாட்சி தாயகம்  போன்ற கோரிக்­கை­களை கைவிட்டு  சமஷ்டி சாத்­தி­ய­மில்லை என்று கூறி  ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில்   செயற்­ப­டு­வ­த­னால்தான்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில்  பிளவு ஏற்­ப­டப்­பார்க்­கி­றது என்றும்  அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.
உள்­ளூ­ராட்சி தேர்தலை தமிழ் பிரதேசங் களில் மட்டும் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் இது சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோ நிலையை அறியும் ஒரு கைங்கரியம் என சிலரால் கூறப்படுகின்றதே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே   முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­தார்.
இது ­கு­றித்து  அவர் மேலும் கூறி­ய­தா­வது:-
அர­சாங்கம் சிங்­களப் பிர­தே­சங்­களில் தேர்­தலை நடாத்தப் பின் நிற்­கின்­றது. எங்­கே­த­மது பொரு­ளா­தாரக் கொள்­கை­களும் தமிழர் சம்­பந்­த­மான உத்­தேச அர­சியல் தீர்­வு­களும் சிங்­க­ள­மக்­க­ளி­டையே தமக்­கெ­தி­ரான ஒரு அலையை உண்டு பண்ணி விடு­மோ என்று பயப்­ப­டு­கின்­றது.  என­வே­மு­தலில் தமிழ் மக்­களின் கருத்­தை­அ­றி­யப்­பார்க்கும் ஒரு­நி­கழ்­வாக இந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­றலாம். அதா­வது பௌத்­தத்­திற்கு முத­லிடம்,சமஷ்டி தேவை­யில்லை,ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­காரப் பர­வ­லாக்கம் என்­ற­கொள்­கை­யு­டைய தற்­போ­தைய தமிழ்த் தலை­மைத்­து­வத்தின் கருத்­தை­தமிழ் மக்கள் வர­வேற்­பார்­க­ளானால் சிங்­கள மக்­க­ளுக்­கு­அ­தை­எ­டுத்­துக்­காட்டி புதி­ய­அ­ர­சியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாரா­ளு­மன்­றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்­யலாம் என்று அவர்கள் எதிர்­பார்க்­கக்­கூடும். ஆகவே தற்­போ­தைய தமிழ்த் தலை­மை­களின் கருத்­துக்­களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்­டு­ பெ­ரு­வா­ரி­யா­க அக் கருத்­துக்­க­ளை­ ஆ­த­ரித்­தால் மிகக் குறை­வா­ன­தீர்­வைநாம் விரை­வாகப் பெற இட­மி­ருக்­கின்­றது.
ஆனால் வருங்­கா­லத்தில் தமிழ் மக்­க­ளுக்­கு­என்­ன­ஆகும் என்­பதைத் தமிழ்த் தலை­மை­களும் தமிழ் மக்­களும் ஆய்ந்­து­ண­ர­வேண்டும். கிழக்கைப் போல் வடக்­கை­ஆக்­கு­வ­தற்­கு­அ­ர­சாங்­கத்­திற்­கு­ப­ல­வ­ரு­டங்கள் அப்­பொ­ழு­து­தே­வை­யில்லை.
சில­கட்­சி­களும் தமிழ் மக்­களின் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களும் பேசு­வ­தை­வைத்­து­த­மிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இவர்கள் பிள­வை­ஏற்­ப­டுத்­தப்­பார்க்­கின்­றார்கள் என்­ற­ஒ­ரு­க­ருத்­து­முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது எந்­த­அ­ள­வுக்­கு­உண்­மை­என்­று­ஆ­ராய்வோம்.
தமிழ் மக்­களின் கொள்­கை­களில், நோக்கில்,முன்­னேற்­பா­டு­க­ளில்­ஒ­ரு­பு­ரிந்­து­ணர்வும் ஸ்திரத் தன்­மையும் இருக்­க­ வேண்டும் என்­றுதான் தந்­தை­செல்­வா­கா­லத்­தி­லே­யே­சி­ல­அ­டிப்­ப­டைகள் வலி­யு­றுத்­தப்­பட்­டன. அவை­யா­வ­ன­தா­யகம்,தன்­னாட்சி,தமிழர் தரை­யி­ணைப்­பு­என்­பன. இதற்­கு­ உ­கந்­த­தீர்­வு­ ச­மஷ்டி­யே­ என்­று­ வ­லி­யு­றுத்­தப்­பட்­டது. இதனை 1949ஆம் ஆண்­டு­ தொ­டக்கம் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­வ­லி­யு­றுத்­தி­ வந்­துள்­ளது. தற்­போதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் இற்­றை­வ­லி­யு­றுத்­து­கின்­றன. தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பல­கட்­சி­களும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் நீண்­ட­கா­ல­உ­றுப்­பி­னர்­களும் ஒரு­மித்து 1949ஆம் ஆண்­டு­தொ­டக்கம் வலி­யு­றுத்­தப்­பட்­ட­கொள்­கை­க­ளை­யே­பின்­பற்­ற­வேண்டும் என்றும் அவற்றில் இருந்­து­பி­றழ்­வ­துதாம் இருந்­த­கா­லத்தில் கட்­சிக்­காகத் தம­து­ கா­ணி­ பூமி­க­ளை ­விற்­று­ வ­று­மையில் மறைந்­த­ முன்­னை­ய­ தமிழ்த் தலை­வர்­க­ளுக்கும் உயிரைப் பணயம் வைத்­து­உ­ட­லை­வ­ருத்­திப்­போ­ரா­டி­ய­எ­மது இளைஞர் சமு­தா­யத்­திற்கும்,போரினால் பாதிக்­கப்­பட்­ட ­எ­ம­து­ மக்­க­ளுக்கும்  நாம் செய்யும் துரோ­க­மா­க­ முடியும் என்­று­க­ருத்துத் தெரி­வித்­துள்­ளார்கள்.
இந்­த­வ­கையில் தவ­று­ஏற்­பட்­டுள்­ள­மை­எங்­கு­என்­று­பார்த்தால் 2009ஆம் ஆண்டின் பின்னர் போரில் நாங்கள் தோற்­று­விட்டோம் நாம் கோரு­வ­து­கி­டைக்­கா­து்­ய­தார்த்­த­அ­டிப்­ப­டையில் ஏதோ­சி­ல­ச­லு­கை­க­ளை­யேநாம் பெற்றுக் கொள்­ள­மு­டி­யும்­என்­ற­ம­னோ­பாவம் எம் தலை­வர்கள் சில­ரி­டை­யே­பு­குந்­த­மையே இதற்­கா­ன­கா­ரணம் என்­று­அ­டை­யாளம் காண­மு­டியும். ஆக­வே­போரில் தமி­ழர்கள் தோற்­று­விட்­டார்கள் இனிமேல் முன் போல் எம­து­கோ­ரிக்­கை­க­ளை­முன்­வைக்­க­மு­டி­யா­து­என்­ற­ஒ­ரு­தோல்­வி­ம­னப்­பான்­மை­யே இச் சிந்­த­னைக்­கா­ன­அ­டிப்­படைக் கார­ண­மாகத் தோன்­று­கின்­றது.
இந்­த­வ­கை­யில்த்தான் இரா­ணு­வத்­தி­ன­ரதும் சில­சிங்­களத் தலை­வர்­க­ளி­னதும் எண்­ணங்­களும் இருந்­து­வ­ரு­வ­தைநாம் காணலாம். போரில் நாம் தமி­ழர்­க­ளை­வென்­று­விட்டோம். ஆக­வே­அ­வர்­க­ளிடம் நாம் பறித்­த­கா­ணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமி­ழர்கள் கோரும் எந்தக் கோரிக்­கை­க­ளுக்கும் நாம் செவி­சாய்க்கத் தேவை­யில்லை. நாமா­க­ம­ன­மு­வந்­து­த­ரு­வ­தை­யே­அ­வர்கள் ஏற்­க­வேண்­டும்­என்­று­சிலர் கூறு­வதைக் கேட்­டுள்ளோம்.
ஓரி­ரு­வி­ட­யங்­க­ளை நாம் மனதில் வைத்துக் கொள்­ள­வேண்டும். ஆயு­த­மேந்­தியோர் மத்­தி­ய­ அ­ரசைப் பிடிக்­க­ எத்­த­னிக்­க­வில்லை. தாம் வாழ்ந்த இடங்­களில் அர­சை­ நி­று­வ­வே­ மு­யன்­றனர். போர் நடந்­த­கா­லத்தில் மத்­தி­ய­அ­ர­சாங்­க ­அ­தி­காரம் தொடர்ந்­து வ­டக்குக் கிழக்கில் கோலோச்­சி­ய­மை­யா­வர்க்கும் நினை­வி­ருக்­கலாம். அர­ச­அ­லு­வ­லர்கள் மத்­தி­ய­அ­ர­சாங்­கத்­தா­லே­யே­சம்­பளம் கொடுக்­கப்­பட்­டார்கள். மத்­தி­ய­அ­ரசின் நிகழ்ச்சி நிர­லையே நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்கள். ஆக­வேபோர் என்று கூறி­யது இரு இனங்­க­ளுக்­கி­டை­யே­யான போர் அல்ல. அது அர­சாங்­கத்­திற்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற ஒன்று. முன்னர் பழைய ஜே.வி.பி காலத்­திலும் அப்­ப­டித்தான். அர­சாங்­கத்­திற்கும் ஜே.வி.பி க்கும் இடை­யி­லே­யேபோர் நடை­பெற்­றது.
எனவே விடு­தலைப் புலி­களின் வன்­மு­றையும் ஜே.வி.பியின் வன்­மு­றையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்­சி­க­ளே­யொ­ழி­ய­யுத்தம் அல்ல. அர­சாங்­கத்தின் அதி­காரம் தொடர்ந்து வடக்­கிலும் தெற்­கிலும் அந்­தந்தக் காலத்தில் தொடர்ந்து இருந்­ததால் கிளர்ச்­சி­க­ளை ­யுத்தம் என்­று­அ­டை­யா­ளப்­ப­டுத்­த­மு­டி­யாது. ஆக­வே­கி­ளர்ச்­சி­மு­டி­வுக்குக் கொண்­டு­வந்­ததும் இரா­ணுவம் தமது முகாம்­க­ளுக்குச் சென்­று­விட வேண்டும். அவர்­கள்­கை­யேற்ற காணிகள் உரி­ய­வர்­க­ளிடம் சேர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுவும் அவர்­களால் அன்­றி­சிவில் அர­சாங்­க­அ­தி­கா­ரிகள் மூல­மாகக் சேர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுதான் சட்­டத்தின் எதிர்­பார்ப்பு.போர்க் காலத்தில் கைய­கப்­ப­டுத்­திய காணி­க­ளை­தொ­டர்ந்து எட்டு வரு­டங்­க­ளுக்கு வைத்துக் கொண்­டு­விட்­டு­அ­வை­எம்­மு­டை­ய­வை­என்று கூற இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சட்­டத்தில் இட­மில்லை.
ஆகவே இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள் என­வே­எ­மக்கு எம­து­சட்­ட­ரீ­தி­யான நியா­ய­மான கோரிக்­கை­களை அதன் பொருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்­த­வி­த­உ­ரித்தும் இல்­லை­என்று எம்­மவர் நினைத்தால் அது­முற்­றி­லுந்­த­வ­றான சிந்­த­னை­யாகும். தமிழ் மக்கள் போரில் தோல்வி அடை­ய­வில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்­த­நாட்டின் ஒரு­அங்­கமே. அவர்­களின் சட்­ட­ரீ­தி­யான உரி­மை­களைத் திருப்பிக் கேட்க எத்­த­ரு­ணத்­திலும் அவர்­க­ளுக்கு உரித்­துண்டு.
இன்­றைய தமிழ்த் தலை­மைத்­துவம் தோற்று விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­துக்கு முத­லிடம் கொடுக்­கநாம் தயார், ஒற்­றை­யாட்­சியின் கீழ் சிங்­களப் பேரி­ன­வா­தத்­துக்கு தொடர்ந்து இடம் கொடுக்­க
நாம் தயார், ­வ­ட­கி­ழக்கை இணைக்­காது விடநாம் தயார் தன்­னாட்சி, தாயகம் போன்­ற­கோ­ரிக்­கை­களைக் கைவிடத் தயார், சமஷ்டி முறை சாத்­தியம் இல்லை என்று கூறி ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்­வ­தால்த்தான் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் பிளவு ஏற்­படப் பார்க்­கின்­றது. அதா­வது நாமா­கவே வலிந்­து­ த­யா­ரித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்­றித்­த­ன­மாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்தமையே பிளவுஏற்பட ஏதுவாக இருக்கின்றது.
பெரும்பான்மையான தமிழ்க்கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையேதாம் கொண்டுள்ளன. ஆகவே அந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லைஎன்றுதமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல் கட்சியாகமுன்னேற முடியும். அவ்வாறில் லாமல் குறைந்ததைப் பெறு வதே உசிதம் என்றுஎமது தொடர் அடிப் படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறான குறைந்தபட்ச தீர்வுக ளுக்கு இவ்வளவு தியாகங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளூராட்சித் தேர்தல்களின் போதுசம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சிலசலுகை
களைஎம் மீது திணித்துவிட்டு எமதுநீண்ட கால அரசியல் பிரச்சினையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வட மாகாணமும் கிழக்குமாகாணம் போல் பறிபோய்விடும்.
உண்மையில் இவ்வாறான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வடகிழக்கில் மட்டும் வைக்க அரசாங்கம் முன்வருமானால் அது தமிழ் மக்களின் நாடி பிடித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். எனவே மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம். 

தமிழில் பேசினால் அடிப்போம் இந்திய இராணுவத்தினர்


இதை தான் இலங்கை தமிழர்கள் அனுபவித்தார்கள் .சிங்கள இராணுவத்தை விட மிக மோசமான கேவலமானவர்கள் இந்திய இராணுவத்தினர் 87 ஆண்டும் 2009 பல மோசமான இரத்த தாண்டவம் ஆடியது
இந்திய இராணுவமே



இதை நாங்கள் சொன்னபோது புலிகள் பயங்கரவாதிகள் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் .என்றும் சினிமா மோகத்திலும் அம்மா அம்மா என்று கன்னடத்தி ஜெயலலிதா காலில் விழுவது அவரது கார்ரை வணங்குவது இப்படி பட்ட அடிமையிலும் அடிமைகளிற்கு வாக்களித்தார்கள் இப்போ அம்மா செத்த நிலையில் அவர்களிற்கு சொந்தமாக புத்தி இல்லை எனவே மோடி காலில்

இந்த அதிமுக அடிமை படடாளம் இருக்கிறது அந்த துணிவில் மத்திய அரசு தமிழர் மீதான கால காழ்ப்புணர்வை நேரடியா காட்டுகிறது 2009 இலங்கையில் செய்ததை போல தமிழ் நாட்டிலும் விரைவில் ஒரு இனப்படுகொலையை அரங்கேறி தமிழரை மொத்தமாக அளிப்பதே இந்திய மத்திய அரசின் கொள்கை அது காங்கிரசுக்கும் பிஜேபி இரண்டுக்கும் இந்த கொள்கையில் மாற்று கருத்தில்லை தமிழ்நாட்டு பாச்சோந்தி அரசியல்வாதிகளிற்கும் இந்த கொள்கை நன்றாகவே தெரியும் தங்கள் சுய நலத்திற்காக கூட்டுடணி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள் ஆகவே இனியாவது தமிழ் நாட்டு தமிழர்கள் சினிமா மோகத்தையும் தனி நபர் மயக்கத்தையும் விட்டு வெளியே வாருங்கள்

முனைங்

Platic Egg பிளாஸ்டிக் முட்டைகள்

இதனால் வரும் ஆபத்துகள் இதன் பிண்ணி  என்ன ? இந்த காணொளி விளக்குகிறது 

இராணுவம் செய்தது தவறு.. ஒப்புக்கொண்ட மைத்திரிபால ..!

கொழும்பு: ''இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும,'' என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினரால் 40,000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா., புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுவரை இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக பேசி வந்த சிறிசேனா, முதல் முறையாக எதிராகவும், பல அதிர்ச்சிகர தகவல்களையும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து சிறிசேனா பேசியதாவது:
இலங்கையில், விடுதலை புலிகளுக்கு எதிராக 2009 ம் ஆண்டு நடந்த
இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இதை மனசாட்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போரில் நாட்டுக்காக சண்டையிட்டவர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை நான் நிராகரிக்கிறேன். ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி சில விஷயங்கள் நடந்துள்ளன. அவை ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானதுடன், சட்ட விரோதமானதும் கூட.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்
பட்டுள்ளவர்கள்
நிரபராதிகள் என தெரிய வந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள், என்றார்.

Big mag சவால் சுப்பையாவுடன்

சிந்திக்க சிரிக்க ருசிக்க இந்த காணொளியை பாருங்கள் 

மாம்பழம் விற்றவர், இன்று கோடிகளில் புரளுகிறார்



பாரத் விகாஸ் குழுமம் (பிவிஜி) இரண்டாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாகும். இந்தியாவின் 12 மாநிலங்களில் 22 கிளைகள் இந்நிறுவனத்துக்கு உள்ள நிலையில் சுமார் 500 நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 70,000 பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள். பிவிஜி-யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் பெயர் ஹனுமந்த் கெய்க்வாட் (45). மகாராஷ்டிராவில் உள்ள ரஹிமத்பூர் என்ற சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் இவர் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை தனது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் எண்ணெய் விளக்கில் தான் ஹனுமந்த் படித்தார். பின்னர் இவர் குடும்பம் புனேவுக்கு குடிபெயர்ந்தது, நீதிமன்ற குமாஸ்தாவாக இருந்த ஹனுமந்த் தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதையடுத்து ஹனுமந்தின் அம்மா நகைகளை விற்று செலவுகளை சமாளித்தார், இவரோ படித்து கொண்டே மாம்பழம் விற்றார். ஒரு டஜனுக்கு 3 ரூபாய் கிடைத்தது, பின்னர் உயர்பள்ளிப்படிப்பில் 88% மதிப்பெண்கள் பெற்ற ஹனுமந்த், தாய் வாங்கிய 15000 ரூபாய் கடன் உதவியுடன் பி.டெக் பட்டப்படிப்பில் சேர்ந்தார். படிக்கும் போது வீடுகளுக்கு வர்ணம் பூசும் ஆர்டர்களை அடுத்து பத்து வேலையாட்களை வைத்து செய்தார். இதில் மாதம் 5000 வருமானம் வந்தது. சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 1993-ல் பாரத் விகாஸ் பிரதிஷ்தான் என்ற லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனத்தைத தொடங்கினார். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதே நிறுவனத்தின் நோக்கமாகும். படிப்பின் இறுதி ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் பலேவாடி அரங்கில் நடப்பதாகக் கேள்விப்பட்டார். அங்கு நடைபாதையை சரிசெய்யும் 3 லட்ச ரூபாய் ஒப்பந்தத்தை ஹனுமந்த் பெற்றார்.
பி.டெக் முடித்ததும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் தண்டமாகக் கிடந்த பழைய பொருட்களைப் பயன்படுத்த ஒரு வழி கண்டதன் மூலம் நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் சேமித்துக்கொடுத்தார். பின்னர் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹனுமந்துக்கு தோட்டவேலை, மின்சாரம், எந்திரத் துறைகளில் வேலைகள் செய்யும் ஒப்பந்தத்தை அளித்தது.இதையெல்லாம் தனது பாரத் விகாஸ் பிரதிஷ்தான் மூலம் அவர் செய்தார். பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இவர்களுக்குப் பணி ஒப்பந்தங்களை அளித்தன. கடந்த 1997-ல் பிவிஜி இந்தியா நிறுவனத்தை தொடங்கிய ஹனுமந்துக்கு முதல் ஆண்டில் 8 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது. இரண்டாம் ஆண்டில் 56 லட்சமாக அது உயர்ந்தது. இன்று பஜாஜ், மஹிந்திரா, அசோக் லேலண்ட், ஹுண்டாய், போக்ஸ்வாகன், பியட், போன்ற நிறுவனங்களுடன், ஓஎன் ஜிசி , ஐடிசி, ஹிந்துஸ்தான் லீவர், இந்திய ரயில்வே ஆகிய நிறுவனங்களுடனும் பிவிஜி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறது. கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதே ஹனுமந்தின் மந்திரச்சொல்லாக உள்ளது.

இஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவடைந்த சகோ - ராபர்ட்

இஸ்லாமியர்களின் பொய்ப்பிரச்சாரங்களினால் இரண்டு ஆண்டுகள் பாதிக்கப்பட்டு பின் மீண்டும் கிறிஸ்தவ விசுவாசத்தில் இணைந்த என் அனுபவ சாட்சிஇஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவடைந்த சகோ - ராபர்ட்

இஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவடைந்த சகோ - ராபர்ட்

இஸ்லாமியர்களின் பொய்ப்பிரச்சாரங்களினால் இரண்டு ஆண்டுகள் பாதிக்கப்பட்டு பின் மீண்டும் கிறிஸ்தவ விசுவாசத்தில் இணைந்த என் அனுபவ சாட்சிஇஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவடைந்த சகோ - ராபர்ட்

30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர்புரா கிராமத்தில் உள்ள இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டது.

பல கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 30க்கு மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. வன்முறை கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளளது.

இந்நிலையில், இந்துக்கள் வீடுகளில் தீவைத்தது தொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்துக்கள் வீடுகளில் தீ வைத்தது தொடர்பாக கோட்வாலி மற்றும் கங்காசரா காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 53 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர்புரா கிராமத்தில் உள்ள இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டது.

பல கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 30க்கு மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. வன்முறை கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளளது.

இந்நிலையில், இந்துக்கள் வீடுகளில் தீவைத்தது தொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்துக்கள் வீடுகளில் தீ வைத்தது தொடர்பாக கோட்வாலி மற்றும் கங்காசரா காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 53 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டம்

விடுதலைப் புலிகள், தங்களை 90ம் ஆண்டில் விரட்டி அடித்தார்கள். யாழில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்தது. எமது இனம் இலங்கையில் அழிந்து வருகிறது என்று, சவுதி அரசாங்கத்திடம் பல ஆவணங்களைக் காட்டி, சில முஸ்லீம் பிரமுகர்கள். மீட்ப்பு நடவடிக்கைக்கு உதவிகோரியுள்ள நிலையில். மீண்டும் யாழ்பாணம் சென்றால் தான் அங்கே வியாபாரம் செய்ய முடியும். எனவே அங்கே கடை ஆரம்பிக்கும் ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் 30 லட்சம் படி கொடுக்க வேண்டும். இக் கடன் மீள் செலுத்தப்படும் என்று கூறி சம்மதம் வாங்கியுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணத்தால் சமீபகாலமாக பல தமிழ் கடைகளை, முஸ்லீம்கள் பெரும் பணத்தை கொடுத்து வாங்கி. அதனை புதுப்பித்து வியாபாரங்களை ஆரம்பித்துள்ளார்கள். கொழும்பின் புற நகர்ப் பகுதிகளில் வாடகை வீட்டில், ஒருவேளை சோற்றுக்கு அல்லாடிய ஒரு முஸ்லீம் குடும்பம், ஒன்று சமீபத்தில் யாழில் 30 லட்சம் பணமாக கொடுத்து கடை ஒன்றை வாங்கியுள்ளார்கள். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று அதிர்வின் புலனாய்வு நிருபர் தோண்டிய வேளை. சில ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

யாழில் மீண்டும் முஸ்லீம்களை குடியேற்றவும். முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டங்களும் போடப்பட்டுள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறது. இதனைக் கேட்டால் தலை சுற்றும். ஒரு தமிழ் பெண்ணை காதலித்து, அல்லது கர்பமாக்கி 6 மாதம் கழிந்தால் அதற்கு ஒரு தொகை என்றும். திருமணம் முடித்தால் ஒரு தொகை. யாழில் கடை திறக்க ஒரு தொகைப் பணம் என்று பேரம் பேசிக் கொடுக்கப்படுகிறது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, சவுதி அரசாங்கமே பின்னணியில் இருந்து இதவுவதாக கூறப்படுகிறது.

தமிழர்கள் என்றுமே, முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இப்படி திட்டமிட்டு தமிழர் பகுதியை ஆக்கிரமிப்பதும். கலப்பு திருமணங்களை நடத்துவதும் எந்த ஒருவகையிலும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு விடையம் ஆகும். தமிழர்களின் தனித்தன்மை கெட்டுப்போகவே இல்லை அவர்கள் பூர்விக சொத்துக்களை இழக்கவோ , புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். யாழில் இது ஓசை படாமல் நடக்கலாம். நாம் அதனை வெளிச்சம்போட்டுக் காட்ட பல நாட்டுப்பற்றாளர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டம்

விடுதலைப் புலிகள், தங்களை 90ம் ஆண்டில் விரட்டி அடித்தார்கள். யாழில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்தது. எமது இனம் இலங்கையில் அழிந்து வருகிறது என்று, சவுதி அரசாங்கத்திடம் பல ஆவணங்களைக் காட்டி, சில முஸ்லீம் பிரமுகர்கள். மீட்ப்பு நடவடிக்கைக்கு உதவிகோரியுள்ள நிலையில். மீண்டும் யாழ்பாணம் சென்றால் தான் அங்கே வியாபாரம் செய்ய முடியும். எனவே அங்கே கடை ஆரம்பிக்கும் ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் 30 லட்சம் படி கொடுக்க வேண்டும். இக் கடன் மீள் செலுத்தப்படும் என்று கூறி சம்மதம் வாங்கியுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணத்தால் சமீபகாலமாக பல தமிழ் கடைகளை, முஸ்லீம்கள் பெரும் பணத்தை கொடுத்து வாங்கி. அதனை புதுப்பித்து வியாபாரங்களை ஆரம்பித்துள்ளார்கள். கொழும்பின் புற நகர்ப் பகுதிகளில் வாடகை வீட்டில், ஒருவேளை சோற்றுக்கு அல்லாடிய ஒரு முஸ்லீம் குடும்பம், ஒன்று சமீபத்தில் யாழில் 30 லட்சம் பணமாக கொடுத்து கடை ஒன்றை வாங்கியுள்ளார்கள். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று அதிர்வின் புலனாய்வு நிருபர் தோண்டிய வேளை. சில ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

யாழில் மீண்டும் முஸ்லீம்களை குடியேற்றவும். முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டங்களும் போடப்பட்டுள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறது. இதனைக் கேட்டால் தலை சுற்றும். ஒரு தமிழ் பெண்ணை காதலித்து, அல்லது கர்பமாக்கி 6 மாதம் கழிந்தால் அதற்கு ஒரு தொகை என்றும். திருமணம் முடித்தால் ஒரு தொகை. யாழில் கடை திறக்க ஒரு தொகைப் பணம் என்று பேரம் பேசிக் கொடுக்கப்படுகிறது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, சவுதி அரசாங்கமே பின்னணியில் இருந்து இதவுவதாக கூறப்படுகிறது.

தமிழர்கள் என்றுமே, முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இப்படி திட்டமிட்டு தமிழர் பகுதியை ஆக்கிரமிப்பதும். கலப்பு திருமணங்களை நடத்துவதும் எந்த ஒருவகையிலும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு விடையம் ஆகும். தமிழர்களின் தனித்தன்மை கெட்டுப்போகவே இல்லை அவர்கள் பூர்விக சொத்துக்களை இழக்கவோ , புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். யாழில் இது ஓசை படாமல் நடக்கலாம். நாம் அதனை வெளிச்சம்போட்டுக் காட்ட பல நாட்டுப்பற்றாளர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

பிரபாகரன் உயிருடன்? சிவாஜிலிங்கம்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து அரசாங்க தரப்பினரால் காட்டப்பட்ட உடலம் தலைவர் பிரபாகரனுடையது இல்லை என பல முறை பகிரங்கமாக கூறியிருந்தேன்.இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “குறித்த விடயம் தொடர்பில் இது வரையில் ஏன் மரபணு சோதனை நடத்தவில்லை என அரசாங்கத்திடம் கோரியிருந்தேன். உடனடியாக செய்வதாக கூறியிருந்தார்கள்.
ஆனாலும், இது வரையில் மரபணு சோதனை நடத்தவில்லை. அத்துடன், மரணச் சான்றிதழ் கூட இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.
இன்று கேட்டாள் பிரபாகரனுடைய உடல் கடலில் வீசப்பட்டு விட்டது என்றெல்லாம் கூறுகின்றார்கள்.
ஆகையினால் அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நிரூப்பிக்கும் வகையிலான ஆதரபூர்வமான தகவல் ஏதும் அரசாங்க தரப்பிடம் இல்லை” என அவர் கூறியிருந்தார்.
இதன் போது “விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்றால் அது எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தெரிந்திருக்க கூடும்” என்று அரத்தம் கொள்ளலாமா? என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “விடுலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எனக்கு சொல்லாமலே ஏன் அவர் உயிருடன் இருக்க கூடாது? எனக்கு அவர் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.
சிங்கள மக்களை பொருத்த மட்டில் பிரபாகரன் ஒரு குற்றவாளி. அவருக்கு 200 ஆண்டுகள் சிறைதண்டனை கூட விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நினைத்திருந்தால் அவரின் உடலை கொழும்பில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருக்க முடியும். ஆனாலும் ஏன் அவ்வாறு செய்யவில்லை” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரபாகரன் உயிருடன்? சிவாஜிலிங்கம்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து அரசாங்க தரப்பினரால் காட்டப்பட்ட உடலம் தலைவர் பிரபாகரனுடையது இல்லை என பல முறை பகிரங்கமாக கூறியிருந்தேன்.இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “குறித்த விடயம் தொடர்பில் இது வரையில் ஏன் மரபணு சோதனை நடத்தவில்லை என அரசாங்கத்திடம் கோரியிருந்தேன். உடனடியாக செய்வதாக கூறியிருந்தார்கள்.
ஆனாலும், இது வரையில் மரபணு சோதனை நடத்தவில்லை. அத்துடன், மரணச் சான்றிதழ் கூட இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.
இன்று கேட்டாள் பிரபாகரனுடைய உடல் கடலில் வீசப்பட்டு விட்டது என்றெல்லாம் கூறுகின்றார்கள்.
ஆகையினால் அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நிரூப்பிக்கும் வகையிலான ஆதரபூர்வமான தகவல் ஏதும் அரசாங்க தரப்பிடம் இல்லை” என அவர் கூறியிருந்தார்.
இதன் போது “விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்றால் அது எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தெரிந்திருக்க கூடும்” என்று அரத்தம் கொள்ளலாமா? என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “விடுலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எனக்கு சொல்லாமலே ஏன் அவர் உயிருடன் இருக்க கூடாது? எனக்கு அவர் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.
சிங்கள மக்களை பொருத்த மட்டில் பிரபாகரன் ஒரு குற்றவாளி. அவருக்கு 200 ஆண்டுகள் சிறைதண்டனை கூட விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நினைத்திருந்தால் அவரின் உடலை கொழும்பில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருக்க முடியும். ஆனாலும் ஏன் அவ்வாறு செய்யவில்லை” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெளியேற்றப்படும் சென்னையின் பூர்வகுடிகள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழக அரசால் சென்னை ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கார்பரேட், தனியார் வணிக நிறுவனங்களை அப்புறப்படுத்தாமல், ஏழை எளிய மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் தமிழக அரசின் சமூக விரோத நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 31-10-2017 அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்   பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
பத்திரிகை குறிப்பு Press Notes:

சென்னையின் ஆற்றங்கரையோரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்து
செப்டம்பர் 9 மற்றும் 15, 2017இல் சென்னையில் இரு இடங்களில் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் 347 குடும்பங்களை மதுரவாயில் எம்.எஸ்.பி நகரில் இருந்தும், அமைந்தகரையிலிருந்து 46 குடும்பத்தினரையும்  வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி அப்புறப்படுத்தி இருக்கிறது  சென்னை மாநகராட்சி. இந்த மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறது அரசு. மேலும் இவர்கள் தாங்கள் வசித்தப்பகுதியிலிருந்து வெகுதொலைவிற்கு கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மதுரவாயிலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அங்கிருந்து கிட்டதட்ட 24.3 கி.மீ தொலைவில் குடப்பாக்கம் திருமழிசையில் குடியமர்த்தப்பட்டார்கள். அமைந்தகரையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்களுடைய வசிப்பிடத்திலிருந்து 30கி.மீ தொலைவில் இருக்கும் பெரும்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இடம்மாற்றுவது குறித்தான எவ்வகையான ’ பாதிப்புகள் குறித்த களஆய்வும்’ மேற்கொள்ளாமல் செய்யப்பட்டிருக்கிறது.

வசித்த இடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் கொண்டமர்த்தும் பொழுது அம்மக்களுடைய வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. பல சமயங்களில் அவர்களது வாழ்வாதாரம் அழிந்து போகிறது. புதிய இடங்கள் இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றவகையிலும் அமைவதில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே. பள்ளி படிப்பின் இடைக்காலத்தில் இவ்வாறு மாற்றுவதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய பள்ளிக்கு கிட்டதட்ட 24, 30 கிமீ தூரம் பயணப்பட வேண்டி இருக்கிறது. இது அவர்களுடைய பள்ளி படிப்பையும், கல்வி உரிமையையும் கடுமையாக பாதிக்கிறது. பெரும்பாலன குழந்தைகள் போதிய உணவுகூட எடுக்க இயலாத நிலையில் பள்ளிக்கூடம் செல்வது அல்லது பள்ளியில் இருந்து நின்றுவிடுவது போன்ற அவலங்கள் நிகழ்கிறது. வேலைவாய்ப்பினையும் அம்மக்கள் இழக்கின்றனர். அமைந்தகரை மக்களுக்கு வீடு அகற்றப்படுவது குறித்து முன்னறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே கொடுத்துவிட்டு வீடுகளை அகற்றியது அரசு. ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று குடிசைகளை ஏழை எளிய மக்களை அகற்றும் அரசு, அதே சமயத்தில் கார்ப்பரேட்-வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை/கட்டிடங்களை அகற்ற மறுக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் வீடுகள் இடிக்கப்பட்ட கிட்ட 12 குடும்பங்களுக்கு இன்றூவரை மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை.  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் இம்மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைகள் குறித்து எவ்விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் வன்முறையாக அரசு நடந்து கொள்கிறது. மேலும் இந்த வெளியேற்றம் என்பது சர்வதேச விதிமுறைகள், உள்நாட்டு விதிமுறைகள் என எவற்றையும் பின்பற்றாமல் எதேச்சையாக நடந்து கொண்டுவருவது கண்டிக்கத் தக்கது.

அதே போல  காசிமேடு அருகே அமைந்துள்ளது நல்லதண்ணி ஓடை குப்பம். இந்தக் கிராமத்தில் மட்டும் 446 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் எண்ணூர் சாலை விரிவாக்கத்துக்காக நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராமத்தில் முதலில் 250 மீனவக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிவுறும் தருவாயில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 196 மீனவக் குடிசைகளை அரசு அதிகாரிகள் தலைமையில் வந்த குழுவினர் இடித்துள்ளனர். இதற்கு மாற்றாக, நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராம மக்களுக்கு மாற்று நிலத்தையும் வழங்கியுள்ளனர். இந்த நிலத்துக்கான சர்வே எண் நடுக்கடலில் அமைந்துள்ளது

2015இல் நிகழ்ந்த வெள்ளத்தினை காரணமாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் Mr. Rajiv Rai v. Government of Tamil Nadu (W.P. No. 39234 of 2015) கொடுத்த “ ஆக்கிரமிப்புகளை அகற்றுவது” குறித்தான ஆணையை வைத்து பெருநகர சென்னைமாநகராட்சி, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், மற்றும் சென்னை நதிமறுசீரமைப்பு நிறுவனத்தின் கூவம் ஆற்று சூழல் சீரமைப்பு திட்டம் ஆகியவை ஒன்றிணைந்து 2016 முதல் இந்த வெளியேற்றத்தை மனித உரிமை மீறுகின்ற வகையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த ஆணையின் மூலமாக கிட்டதட்ட 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இதன்படி

அடையாறு ஆற்றுப்பகுதியில் இருந்து 9539 குடும்பங்கள்
கூவம் ஆற்றுப்பகுதியில் இருந்து 14,257 குடும்பங்கள்,
வடக்கு பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 9000 குடும்பங்கள்
மத்திய பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 5300 குடும்பங்கள்
வடக்கு பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 12000 குடும்பங்கள்
என ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கின்றன.கூவம் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அம்பாமால் உள்ளிட்ட பெருநிறூவன முதலீடுகள் மீது நடவடிக்கை எடுக்காத இந்நிறுவனங்கள் ஏழை எளிய மக்கள் குடிசைகளை அப்புறப்படுத்துகின்றன. இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாற்று இடங்களும் வெள்ளத்தால் மூழ்கும் இடங்களாகவும், பள்ளிக்கூடம், மருத்துவமனை இல்லாத பகுதிகளாகவுமே அமைக்கப்பட்டிருக்கின்றன. இம்மாதிரியான நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர்களுடைய இடங்களிலிருந்து 5 கிமீக்கும் உள்ளாகவே அவர்கள் மறுகுடியமர்த்தபப்ட வேண்டிமென்கிற சர்வதேச-உள்நாட்டு விதிமுறைகளுக்கு எதிராக வெகு தொலைவில் இக்குடும்பங்கள் அமர்த்தப்படுகின்றன. இம்மக்களைக்கு தேவையான அடிப்படை வசதிகள், அகற்றப்படும் போது பின்பற்றவேண்டிய ஆய்வுகள், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய  ஐநாவின் விதிமுறைகள், உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பாதிக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நட்ட ஈடுகள், பாதிக்கப்படும் மக்கள் குறித்து சமூக ஆர்வலர் உடனான கலந்தாலோசனைகள், பாதிக்கப்படும் மக்களுடனான விவாதங்கள் என எவையும் மேற்கொள்ளப்படாமல் நிகழும் இந்த மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். முறையான மாற்றிடம் இல்லாமல், வாழ்வாதார வசதிகள், குழந்தைகளுக்கான பள்ளிகள், குடியிருப்பு வசதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் ஒப்புதல் இல்லாமல்,  இவர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட கூடாது என்பதையே மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.

மேலும் கார்ப்பரேட், தனியார் வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவும் ஏழை எளிய மக்களுக்கு விரோதமாகவும் நடந்து கொண்டு இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படும் நடவடிக்கை பாரபட்சமானது மட்டுமல்ல சமூக விரோதமானது எனவே இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மே பதினேழு இயக்கம் & தோழமை இயக்கங்கள்
9884072010
பின்குறிப்பு: உச்சநீதிமன்ற. அரசியல் சாசன விளக்கம்
**The Supreme Court of India, in several judgments, has held that the right to adequate housing is a fundamental human right emanating from the right to life protected by Article 21 of the Constitution (“No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law”). There have been several important court judgments that have clearly established the relation between the right to housing and the right to life as guaranteed by Article 21.4 In the case of Chameli Singh and Others v. State of Uttar Pradesh (1996),5 the Court has given a clear understanding of the right to life by stating that the “Right to life guaranteed in any civilized society implies the right to food, water, decent environment, education, medical care and shelter.”

வெளியேற்றப்படும் சென்னையின் பூர்வகுடிகள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழக அரசால் சென்னை ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கார்பரேட், தனியார் வணிக நிறுவனங்களை அப்புறப்படுத்தாமல், ஏழை எளிய மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் தமிழக அரசின் சமூக விரோத நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 31-10-2017 அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்   பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
பத்திரிகை குறிப்பு Press Notes:

சென்னையின் ஆற்றங்கரையோரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்து
செப்டம்பர் 9 மற்றும் 15, 2017இல் சென்னையில் இரு இடங்களில் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் 347 குடும்பங்களை மதுரவாயில் எம்.எஸ்.பி நகரில் இருந்தும், அமைந்தகரையிலிருந்து 46 குடும்பத்தினரையும்  வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி அப்புறப்படுத்தி இருக்கிறது  சென்னை மாநகராட்சி. இந்த மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறது அரசு. மேலும் இவர்கள் தாங்கள் வசித்தப்பகுதியிலிருந்து வெகுதொலைவிற்கு கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மதுரவாயிலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அங்கிருந்து கிட்டதட்ட 24.3 கி.மீ தொலைவில் குடப்பாக்கம் திருமழிசையில் குடியமர்த்தப்பட்டார்கள். அமைந்தகரையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்களுடைய வசிப்பிடத்திலிருந்து 30கி.மீ தொலைவில் இருக்கும் பெரும்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இடம்மாற்றுவது குறித்தான எவ்வகையான ’ பாதிப்புகள் குறித்த களஆய்வும்’ மேற்கொள்ளாமல் செய்யப்பட்டிருக்கிறது.

வசித்த இடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் கொண்டமர்த்தும் பொழுது அம்மக்களுடைய வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. பல சமயங்களில் அவர்களது வாழ்வாதாரம் அழிந்து போகிறது. புதிய இடங்கள் இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றவகையிலும் அமைவதில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே. பள்ளி படிப்பின் இடைக்காலத்தில் இவ்வாறு மாற்றுவதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய பள்ளிக்கு கிட்டதட்ட 24, 30 கிமீ தூரம் பயணப்பட வேண்டி இருக்கிறது. இது அவர்களுடைய பள்ளி படிப்பையும், கல்வி உரிமையையும் கடுமையாக பாதிக்கிறது. பெரும்பாலன குழந்தைகள் போதிய உணவுகூட எடுக்க இயலாத நிலையில் பள்ளிக்கூடம் செல்வது அல்லது பள்ளியில் இருந்து நின்றுவிடுவது போன்ற அவலங்கள் நிகழ்கிறது. வேலைவாய்ப்பினையும் அம்மக்கள் இழக்கின்றனர். அமைந்தகரை மக்களுக்கு வீடு அகற்றப்படுவது குறித்து முன்னறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே கொடுத்துவிட்டு வீடுகளை அகற்றியது அரசு. ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று குடிசைகளை ஏழை எளிய மக்களை அகற்றும் அரசு, அதே சமயத்தில் கார்ப்பரேட்-வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை/கட்டிடங்களை அகற்ற மறுக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் வீடுகள் இடிக்கப்பட்ட கிட்ட 12 குடும்பங்களுக்கு இன்றூவரை மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை.  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் இம்மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைகள் குறித்து எவ்விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் வன்முறையாக அரசு நடந்து கொள்கிறது. மேலும் இந்த வெளியேற்றம் என்பது சர்வதேச விதிமுறைகள், உள்நாட்டு விதிமுறைகள் என எவற்றையும் பின்பற்றாமல் எதேச்சையாக நடந்து கொண்டுவருவது கண்டிக்கத் தக்கது.

அதே போல  காசிமேடு அருகே அமைந்துள்ளது நல்லதண்ணி ஓடை குப்பம். இந்தக் கிராமத்தில் மட்டும் 446 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் எண்ணூர் சாலை விரிவாக்கத்துக்காக நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராமத்தில் முதலில் 250 மீனவக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிவுறும் தருவாயில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 196 மீனவக் குடிசைகளை அரசு அதிகாரிகள் தலைமையில் வந்த குழுவினர் இடித்துள்ளனர். இதற்கு மாற்றாக, நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராம மக்களுக்கு மாற்று நிலத்தையும் வழங்கியுள்ளனர். இந்த நிலத்துக்கான சர்வே எண் நடுக்கடலில் அமைந்துள்ளது

2015இல் நிகழ்ந்த வெள்ளத்தினை காரணமாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் Mr. Rajiv Rai v. Government of Tamil Nadu (W.P. No. 39234 of 2015) கொடுத்த “ ஆக்கிரமிப்புகளை அகற்றுவது” குறித்தான ஆணையை வைத்து பெருநகர சென்னைமாநகராட்சி, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், மற்றும் சென்னை நதிமறுசீரமைப்பு நிறுவனத்தின் கூவம் ஆற்று சூழல் சீரமைப்பு திட்டம் ஆகியவை ஒன்றிணைந்து 2016 முதல் இந்த வெளியேற்றத்தை மனித உரிமை மீறுகின்ற வகையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த ஆணையின் மூலமாக கிட்டதட்ட 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இதன்படி

அடையாறு ஆற்றுப்பகுதியில் இருந்து 9539 குடும்பங்கள்
கூவம் ஆற்றுப்பகுதியில் இருந்து 14,257 குடும்பங்கள்,
வடக்கு பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 9000 குடும்பங்கள்
மத்திய பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 5300 குடும்பங்கள்
வடக்கு பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 12000 குடும்பங்கள்
என ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கின்றன.கூவம் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அம்பாமால் உள்ளிட்ட பெருநிறூவன முதலீடுகள் மீது நடவடிக்கை எடுக்காத இந்நிறுவனங்கள் ஏழை எளிய மக்கள் குடிசைகளை அப்புறப்படுத்துகின்றன. இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாற்று இடங்களும் வெள்ளத்தால் மூழ்கும் இடங்களாகவும், பள்ளிக்கூடம், மருத்துவமனை இல்லாத பகுதிகளாகவுமே அமைக்கப்பட்டிருக்கின்றன. இம்மாதிரியான நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர்களுடைய இடங்களிலிருந்து 5 கிமீக்கும் உள்ளாகவே அவர்கள் மறுகுடியமர்த்தபப்ட வேண்டிமென்கிற சர்வதேச-உள்நாட்டு விதிமுறைகளுக்கு எதிராக வெகு தொலைவில் இக்குடும்பங்கள் அமர்த்தப்படுகின்றன. இம்மக்களைக்கு தேவையான அடிப்படை வசதிகள், அகற்றப்படும் போது பின்பற்றவேண்டிய ஆய்வுகள், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய  ஐநாவின் விதிமுறைகள், உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பாதிக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நட்ட ஈடுகள், பாதிக்கப்படும் மக்கள் குறித்து சமூக ஆர்வலர் உடனான கலந்தாலோசனைகள், பாதிக்கப்படும் மக்களுடனான விவாதங்கள் என எவையும் மேற்கொள்ளப்படாமல் நிகழும் இந்த மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். முறையான மாற்றிடம் இல்லாமல், வாழ்வாதார வசதிகள், குழந்தைகளுக்கான பள்ளிகள், குடியிருப்பு வசதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் ஒப்புதல் இல்லாமல்,  இவர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட கூடாது என்பதையே மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.

மேலும் கார்ப்பரேட், தனியார் வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவும் ஏழை எளிய மக்களுக்கு விரோதமாகவும் நடந்து கொண்டு இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படும் நடவடிக்கை பாரபட்சமானது மட்டுமல்ல சமூக விரோதமானது எனவே இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மே பதினேழு இயக்கம் & தோழமை இயக்கங்கள்
9884072010
பின்குறிப்பு: உச்சநீதிமன்ற. அரசியல் சாசன விளக்கம்
**The Supreme Court of India, in several judgments, has held that the right to adequate housing is a fundamental human right emanating from the right to life protected by Article 21 of the Constitution (“No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law”). There have been several important court judgments that have clearly established the relation between the right to housing and the right to life as guaranteed by Article 21.4 In the case of Chameli Singh and Others v. State of Uttar Pradesh (1996),5 the Court has given a clear understanding of the right to life by stating that the “Right to life guaranteed in any civilized society implies the right to food, water, decent environment, education, medical care and shelter.”

திருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்

திருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்

திருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்

திருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்