திருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர் பேரரசு..!

திருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர் பேரரசு..!

முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், விஜயகாந்த், அர்ஜுன் என பலரை இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசுவின் தற்போதைய நிலை என்றால் சற்று ஷாக் ஆகித்தான் போவீர்கள்.
உதவி இயக்குனராக இருக்கும் போதே திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் பேரரசு. பிறகு, விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற ஒரு படத்தை எடுத்து ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். கையில் பணம் புரள ஆரம்பித்தது. காசு இல்லாதபோது தன்னை மட்டுமே நம்பி வந்த மனைவி தற்போது பட்டிகாட்டு பெண்ணாக தோன்றுகிறார்.
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மல்லிகாவுடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் மல்லிகாவின் வீட்டிலேயே தங்கும் அளவுக்கு வளர்ந்தது அவர்களின் நெருக்கம். விஷயம் மனைவிக்கு தெரியவே, விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்கிறார். நீதிமன்றம் விவாகரத்தையும் வழங்கி, மாதம் ரூபாய் 15,000 மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட்டது.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடும் மனஉழைச்சலுக்கு ஆளான இயக்குனர் பேரரசு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியாமலும், நல்ல நடிகரின் கால்ஷீட் கிடைக்காமலும் தவித்து வருகிறார். முன்னணி இயக்குனர் அந்தஸ்தில் இருக்கவேண்டிய ஒரு இயக்குனர் தனது சிறுபிள்ளைத்தனமான வேலையால் வாழ்கையை இழந்து, நல்ல வாழ்க்கை துணையை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார் என்பது வேதனை.
சினிமாவை பார்த்து மட்டுமல்ல, இப்படியானவர்களின் வாழ்கையை பார்த்தும் நமக்கான வாழ்க்கை பாடத்தை கற்றுகொள்ளலாம். காசு, பணம் வந்துவிட்டால் தலைகீழாக ஆட்டம் போடகூடாது, கட்டிய மனைவியே கடைசிவரை என்று வாழ்வதே சிறப்பு.