தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு, காரணம் என்ன ?

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு, காரணம் என்ன ?

நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன்   தெரி­வித்­துள்ளார்.
இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு  எமது சட்­ட­ரீ­தி­யான  நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை  அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று  எம்­மவர்  நினைத்தால் அது முற்­றிலும் தவ­றா­ன­தாகும்.
தமிழ் மக்கள் போரில் தோல்­வி­ய­டை­ய­வில்லை.    இன்­றைய தமிழ் தலை­மைத்­துவம்  நாம் தோற்­று­விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­திற்கு முத­லிடம் கொடுக்­கவும் ஒற்­றை­யாட்­சியின் கீழ்  சிங்­கள பேரி­ன­வா­தத்­திற்கு   இடம் கொடுக்­கவும்   வடக்கு, கிழக்கை இணைக்­காது  விடு­வ­தற்கு தயார் என்றும்  தன்­னாட்சி தாயகம்  போன்ற கோரிக்­கை­களை கைவிட்டு  சமஷ்டி சாத்­தி­ய­மில்லை என்று கூறி  ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில்   செயற்­ப­டு­வ­த­னால்தான்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில்  பிளவு ஏற்­ப­டப்­பார்க்­கி­றது என்றும்  அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.
உள்­ளூ­ராட்சி தேர்தலை தமிழ் பிரதேசங் களில் மட்டும் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் இது சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோ நிலையை அறியும் ஒரு கைங்கரியம் என சிலரால் கூறப்படுகின்றதே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே   முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­தார்.
இது ­கு­றித்து  அவர் மேலும் கூறி­ய­தா­வது:-
அர­சாங்கம் சிங்­களப் பிர­தே­சங்­களில் தேர்­தலை நடாத்தப் பின் நிற்­கின்­றது. எங்­கே­த­மது பொரு­ளா­தாரக் கொள்­கை­களும் தமிழர் சம்­பந்­த­மான உத்­தேச அர­சியல் தீர்­வு­களும் சிங்­க­ள­மக்­க­ளி­டையே தமக்­கெ­தி­ரான ஒரு அலையை உண்டு பண்ணி விடு­மோ என்று பயப்­ப­டு­கின்­றது.  என­வே­மு­தலில் தமிழ் மக்­களின் கருத்­தை­அ­றி­யப்­பார்க்கும் ஒரு­நி­கழ்­வாக இந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­றலாம். அதா­வது பௌத்­தத்­திற்கு முத­லிடம்,சமஷ்டி தேவை­யில்லை,ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­காரப் பர­வ­லாக்கம் என்­ற­கொள்­கை­யு­டைய தற்­போ­தைய தமிழ்த் தலை­மைத்­து­வத்தின் கருத்­தை­தமிழ் மக்கள் வர­வேற்­பார்­க­ளானால் சிங்­கள மக்­க­ளுக்­கு­அ­தை­எ­டுத்­துக்­காட்டி புதி­ய­அ­ர­சியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாரா­ளு­மன்­றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்­யலாம் என்று அவர்கள் எதிர்­பார்க்­கக்­கூடும். ஆகவே தற்­போ­தைய தமிழ்த் தலை­மை­களின் கருத்­துக்­களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்­டு­ பெ­ரு­வா­ரி­யா­க அக் கருத்­துக்­க­ளை­ ஆ­த­ரித்­தால் மிகக் குறை­வா­ன­தீர்­வைநாம் விரை­வாகப் பெற இட­மி­ருக்­கின்­றது.
ஆனால் வருங்­கா­லத்தில் தமிழ் மக்­க­ளுக்­கு­என்­ன­ஆகும் என்­பதைத் தமிழ்த் தலை­மை­களும் தமிழ் மக்­களும் ஆய்ந்­து­ண­ர­வேண்டும். கிழக்கைப் போல் வடக்­கை­ஆக்­கு­வ­தற்­கு­அ­ர­சாங்­கத்­திற்­கு­ப­ல­வ­ரு­டங்கள் அப்­பொ­ழு­து­தே­வை­யில்லை.
சில­கட்­சி­களும் தமிழ் மக்­களின் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களும் பேசு­வ­தை­வைத்­து­த­மிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இவர்கள் பிள­வை­ஏற்­ப­டுத்­தப்­பார்க்­கின்­றார்கள் என்­ற­ஒ­ரு­க­ருத்­து­முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது எந்­த­அ­ள­வுக்­கு­உண்­மை­என்­று­ஆ­ராய்வோம்.
தமிழ் மக்­களின் கொள்­கை­களில், நோக்கில்,முன்­னேற்­பா­டு­க­ளில்­ஒ­ரு­பு­ரிந்­து­ணர்வும் ஸ்திரத் தன்­மையும் இருக்­க­ வேண்டும் என்­றுதான் தந்­தை­செல்­வா­கா­லத்­தி­லே­யே­சி­ல­அ­டிப்­ப­டைகள் வலி­யு­றுத்­தப்­பட்­டன. அவை­யா­வ­ன­தா­யகம்,தன்­னாட்சி,தமிழர் தரை­யி­ணைப்­பு­என்­பன. இதற்­கு­ உ­கந்­த­தீர்­வு­ ச­மஷ்டி­யே­ என்­று­ வ­லி­யு­றுத்­தப்­பட்­டது. இதனை 1949ஆம் ஆண்­டு­ தொ­டக்கம் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­வ­லி­யு­றுத்­தி­ வந்­துள்­ளது. தற்­போதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் இற்­றை­வ­லி­யு­றுத்­து­கின்­றன. தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பல­கட்­சி­களும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் நீண்­ட­கா­ல­உ­றுப்­பி­னர்­களும் ஒரு­மித்து 1949ஆம் ஆண்­டு­தொ­டக்கம் வலி­யு­றுத்­தப்­பட்­ட­கொள்­கை­க­ளை­யே­பின்­பற்­ற­வேண்டும் என்றும் அவற்றில் இருந்­து­பி­றழ்­வ­துதாம் இருந்­த­கா­லத்தில் கட்­சிக்­காகத் தம­து­ கா­ணி­ பூமி­க­ளை ­விற்­று­ வ­று­மையில் மறைந்­த­ முன்­னை­ய­ தமிழ்த் தலை­வர்­க­ளுக்கும் உயிரைப் பணயம் வைத்­து­உ­ட­லை­வ­ருத்­திப்­போ­ரா­டி­ய­எ­மது இளைஞர் சமு­தா­யத்­திற்கும்,போரினால் பாதிக்­கப்­பட்­ட ­எ­ம­து­ மக்­க­ளுக்கும்  நாம் செய்யும் துரோ­க­மா­க­ முடியும் என்­று­க­ருத்துத் தெரி­வித்­துள்­ளார்கள்.
இந்­த­வ­கையில் தவ­று­ஏற்­பட்­டுள்­ள­மை­எங்­கு­என்­று­பார்த்தால் 2009ஆம் ஆண்டின் பின்னர் போரில் நாங்கள் தோற்­று­விட்டோம் நாம் கோரு­வ­து­கி­டைக்­கா­து்­ய­தார்த்­த­அ­டிப்­ப­டையில் ஏதோ­சி­ல­ச­லு­கை­க­ளை­யேநாம் பெற்றுக் கொள்­ள­மு­டி­யும்­என்­ற­ம­னோ­பாவம் எம் தலை­வர்கள் சில­ரி­டை­யே­பு­குந்­த­மையே இதற்­கா­ன­கா­ரணம் என்­று­அ­டை­யாளம் காண­மு­டியும். ஆக­வே­போரில் தமி­ழர்கள் தோற்­று­விட்­டார்கள் இனிமேல் முன் போல் எம­து­கோ­ரிக்­கை­க­ளை­முன்­வைக்­க­மு­டி­யா­து­என்­ற­ஒ­ரு­தோல்­வி­ம­னப்­பான்­மை­யே இச் சிந்­த­னைக்­கா­ன­அ­டிப்­படைக் கார­ண­மாகத் தோன்­று­கின்­றது.
இந்­த­வ­கை­யில்த்தான் இரா­ணு­வத்­தி­ன­ரதும் சில­சிங்­களத் தலை­வர்­க­ளி­னதும் எண்­ணங்­களும் இருந்­து­வ­ரு­வ­தைநாம் காணலாம். போரில் நாம் தமி­ழர்­க­ளை­வென்­று­விட்டோம். ஆக­வே­அ­வர்­க­ளிடம் நாம் பறித்­த­கா­ணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமி­ழர்கள் கோரும் எந்தக் கோரிக்­கை­க­ளுக்கும் நாம் செவி­சாய்க்கத் தேவை­யில்லை. நாமா­க­ம­ன­மு­வந்­து­த­ரு­வ­தை­யே­அ­வர்கள் ஏற்­க­வேண்­டும்­என்­று­சிலர் கூறு­வதைக் கேட்­டுள்ளோம்.
ஓரி­ரு­வி­ட­யங்­க­ளை நாம் மனதில் வைத்துக் கொள்­ள­வேண்டும். ஆயு­த­மேந்­தியோர் மத்­தி­ய­ அ­ரசைப் பிடிக்­க­ எத்­த­னிக்­க­வில்லை. தாம் வாழ்ந்த இடங்­களில் அர­சை­ நி­று­வ­வே­ மு­யன்­றனர். போர் நடந்­த­கா­லத்தில் மத்­தி­ய­அ­ர­சாங்­க ­அ­தி­காரம் தொடர்ந்­து வ­டக்குக் கிழக்கில் கோலோச்­சி­ய­மை­யா­வர்க்கும் நினை­வி­ருக்­கலாம். அர­ச­அ­லு­வ­லர்கள் மத்­தி­ய­அ­ர­சாங்­கத்­தா­லே­யே­சம்­பளம் கொடுக்­கப்­பட்­டார்கள். மத்­தி­ய­அ­ரசின் நிகழ்ச்சி நிர­லையே நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்கள். ஆக­வேபோர் என்று கூறி­யது இரு இனங்­க­ளுக்­கி­டை­யே­யான போர் அல்ல. அது அர­சாங்­கத்­திற்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற ஒன்று. முன்னர் பழைய ஜே.வி.பி காலத்­திலும் அப்­ப­டித்தான். அர­சாங்­கத்­திற்கும் ஜே.வி.பி க்கும் இடை­யி­லே­யேபோர் நடை­பெற்­றது.
எனவே விடு­தலைப் புலி­களின் வன்­மு­றையும் ஜே.வி.பியின் வன்­மு­றையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்­சி­க­ளே­யொ­ழி­ய­யுத்தம் அல்ல. அர­சாங்­கத்தின் அதி­காரம் தொடர்ந்து வடக்­கிலும் தெற்­கிலும் அந்­தந்தக் காலத்தில் தொடர்ந்து இருந்­ததால் கிளர்ச்­சி­க­ளை ­யுத்தம் என்­று­அ­டை­யா­ளப்­ப­டுத்­த­மு­டி­யாது. ஆக­வே­கி­ளர்ச்­சி­மு­டி­வுக்குக் கொண்­டு­வந்­ததும் இரா­ணுவம் தமது முகாம்­க­ளுக்குச் சென்­று­விட வேண்டும். அவர்­கள்­கை­யேற்ற காணிகள் உரி­ய­வர்­க­ளிடம் சேர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுவும் அவர்­களால் அன்­றி­சிவில் அர­சாங்­க­அ­தி­கா­ரிகள் மூல­மாகக் சேர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுதான் சட்­டத்தின் எதிர்­பார்ப்பு.போர்க் காலத்தில் கைய­கப்­ப­டுத்­திய காணி­க­ளை­தொ­டர்ந்து எட்டு வரு­டங்­க­ளுக்கு வைத்துக் கொண்­டு­விட்­டு­அ­வை­எம்­மு­டை­ய­வை­என்று கூற இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சட்­டத்தில் இட­மில்லை.
ஆகவே இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள் என­வே­எ­மக்கு எம­து­சட்­ட­ரீ­தி­யான நியா­ய­மான கோரிக்­கை­களை அதன் பொருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்­த­வி­த­உ­ரித்தும் இல்­லை­என்று எம்­மவர் நினைத்தால் அது­முற்­றி­லுந்­த­வ­றான சிந்­த­னை­யாகும். தமிழ் மக்கள் போரில் தோல்வி அடை­ய­வில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்­த­நாட்டின் ஒரு­அங்­கமே. அவர்­களின் சட்­ட­ரீ­தி­யான உரி­மை­களைத் திருப்பிக் கேட்க எத்­த­ரு­ணத்­திலும் அவர்­க­ளுக்கு உரித்­துண்டு.
இன்­றைய தமிழ்த் தலை­மைத்­துவம் தோற்று விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­துக்கு முத­லிடம் கொடுக்­கநாம் தயார், ஒற்­றை­யாட்­சியின் கீழ் சிங்­களப் பேரி­ன­வா­தத்­துக்கு தொடர்ந்து இடம் கொடுக்­க
நாம் தயார், ­வ­ட­கி­ழக்கை இணைக்­காது விடநாம் தயார் தன்­னாட்சி, தாயகம் போன்­ற­கோ­ரிக்­கை­களைக் கைவிடத் தயார், சமஷ்டி முறை சாத்­தியம் இல்லை என்று கூறி ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்­வ­தால்த்தான் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் பிளவு ஏற்­படப் பார்க்­கின்­றது. அதா­வது நாமா­கவே வலிந்­து­ த­யா­ரித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்­றித்­த­ன­மாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்தமையே பிளவுஏற்பட ஏதுவாக இருக்கின்றது.
பெரும்பான்மையான தமிழ்க்கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையேதாம் கொண்டுள்ளன. ஆகவே அந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லைஎன்றுதமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல் கட்சியாகமுன்னேற முடியும். அவ்வாறில் லாமல் குறைந்ததைப் பெறு வதே உசிதம் என்றுஎமது தொடர் அடிப் படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறான குறைந்தபட்ச தீர்வுக ளுக்கு இவ்வளவு தியாகங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளூராட்சித் தேர்தல்களின் போதுசம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சிலசலுகை
களைஎம் மீது திணித்துவிட்டு எமதுநீண்ட கால அரசியல் பிரச்சினையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வட மாகாணமும் கிழக்குமாகாணம் போல் பறிபோய்விடும்.
உண்மையில் இவ்வாறான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வடகிழக்கில் மட்டும் வைக்க அரசாங்கம் முன்வருமானால் அது தமிழ் மக்களின் நாடி பிடித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். எனவே மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம்.