June 2011

என்றென்றும் இளமையாக இருக்க தொடர்02

என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01

என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்பவர்கள் பலர்.
கிராமங்களில்கூட பியூட்டி பார்லர்கள் பெருகி வருவதே இதற்கு சாட்சி. பணத்தை தண்ணீராய் செலவு செய்து முதுமையை மறைக்க படாதபாடு படுகின்றனர். மக்களின் மனநிலையை உணர்ந்து முதுமையை மறைக்கும் ஆரோக்கியமான வழிகள் குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பொப்கார்னும், பாலாடைக்கட்டியும்(சீஸ்) உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று இப்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முதுமையை மறைக்க எளிய வழிகளை பட்டியலிட்டுள்ளது.
இதில் பிரதான இடம் பெற்றிருப்பது பொப்கார்னும், சீஸும் தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடலை வயது வித்தியாசமின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வயது முதிர்வும் தெரியாது.
எலும்பு மற்றும் தசைகள், கண், மூளை, இதயம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் மெருகேறும். உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ அறிவுரைகள் இதற்கு உதவும்.
மேலை நாடுகளில் மிக பிரபலமாக இருந்த சீஸ் தற்போது நம் நாட்டு உணவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.
இதில் உள்ள அபரிமிதமான கால்சியம், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மட்டுமின்றி எலும்புகளும் வலுவிழக்கும். இந்த நிலையை சமாளிக்க அதிக அளவு சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
சோயா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தசைகள் வலுப் பெறும். மல்டி வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்த கீரைகள், சாலட் வகைகள், ஆரஞ்சுப்பழம் போன்றவை கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெரும்பாலான சத்துகள் உள்ள பொப்கார்ன் உடலுக்கு மட்டுமின்றி இதயத்துக்கும் இதமளிக்கும்.
சால்மோன் மீன்களில் உள்ள சத்துகள் மூளைக்கு பலம் சேர்க்கும். பொதுவாக 40ஐ கடந்து விட்டவர்களின் அன்றாட உணவில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துகள், சுண்ணாம்பு, புரதம், தாதுக்கள் இடம் பெற வேண்டியது அவசியம் மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது ஆய்வாளர்கள் தரும் டிப்ஸ்.
தொடர்
 

என்றென்றும் இளமையாக இருக்க தொடர்02

என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01

என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்பவர்கள் பலர்.
கிராமங்களில்கூட பியூட்டி பார்லர்கள் பெருகி வருவதே இதற்கு சாட்சி. பணத்தை தண்ணீராய் செலவு செய்து முதுமையை மறைக்க படாதபாடு படுகின்றனர். மக்களின் மனநிலையை உணர்ந்து முதுமையை மறைக்கும் ஆரோக்கியமான வழிகள் குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பொப்கார்னும், பாலாடைக்கட்டியும்(சீஸ்) உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று இப்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முதுமையை மறைக்க எளிய வழிகளை பட்டியலிட்டுள்ளது.
இதில் பிரதான இடம் பெற்றிருப்பது பொப்கார்னும், சீஸும் தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடலை வயது வித்தியாசமின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வயது முதிர்வும் தெரியாது.
எலும்பு மற்றும் தசைகள், கண், மூளை, இதயம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் மெருகேறும். உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ அறிவுரைகள் இதற்கு உதவும்.
மேலை நாடுகளில் மிக பிரபலமாக இருந்த சீஸ் தற்போது நம் நாட்டு உணவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.
இதில் உள்ள அபரிமிதமான கால்சியம், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மட்டுமின்றி எலும்புகளும் வலுவிழக்கும். இந்த நிலையை சமாளிக்க அதிக அளவு சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
சோயா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தசைகள் வலுப் பெறும். மல்டி வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்த கீரைகள், சாலட் வகைகள், ஆரஞ்சுப்பழம் போன்றவை கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெரும்பாலான சத்துகள் உள்ள பொப்கார்ன் உடலுக்கு மட்டுமின்றி இதயத்துக்கும் இதமளிக்கும்.
சால்மோன் மீன்களில் உள்ள சத்துகள் மூளைக்கு பலம் சேர்க்கும். பொதுவாக 40ஐ கடந்து விட்டவர்களின் அன்றாட உணவில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துகள், சுண்ணாம்பு, புரதம், தாதுக்கள் இடம் பெற வேண்டியது அவசியம் மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது ஆய்வாளர்கள் தரும் டிப்ஸ்.
தொடர்
 

புதிய முறையில் தீ எற்றிடுவோம் வாரீர்









அரசியல் வாதிகளை நம்பி அநாதை 
ஆனது போதும்  திரண்டுவாரீர்.
ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு   
அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர்.
இதயத்தில் எரியும் நெருப்பை 
கையில் ஏந்த விரைந்து வாரீர்.
உடலில் தீ வைத்தபோதும், திருந்தாத
ஆதிக்க சக்திகளுக்கு புதிய முறையில்  
தீ எற்றிடுவோம் வாரீர்.
பாஞ்சாலி,  கண்ணகி எமது பாட்டிகள் 
என உணர்த்திடுவோம் வாரீர்.


புதிய முறையில் தீ எற்றிடுவோம் வாரீர்









அரசியல் வாதிகளை நம்பி அநாதை 
ஆனது போதும்  திரண்டுவாரீர்.
ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு   
அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர்.
இதயத்தில் எரியும் நெருப்பை 
கையில் ஏந்த விரைந்து வாரீர்.
உடலில் தீ வைத்தபோதும், திருந்தாத
ஆதிக்க சக்திகளுக்கு புதிய முறையில்  
தீ எற்றிடுவோம் வாரீர்.
பாஞ்சாலி,  கண்ணகி எமது பாட்டிகள் 
என உணர்த்திடுவோம் வாரீர்.


இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இந்திய அதிகாரிகளின் பங்கும்




இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இலங்கை  அரசுடன் கள்ள காதல் உறவாடிய இந்திய அதிகாரிகளின் பங்கும் காணொளி

இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இந்திய அதிகாரிகளின் பங்கும்




இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இலங்கை  அரசுடன் கள்ள காதல் உறவாடிய இந்திய அதிகாரிகளின் பங்கும் காணொளி

எனிடமே தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன் 


வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை
இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே



எனிடமே தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன் 


வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை
இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே



மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி இன்று (14-06-2011) செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது ரசிகர்களிடம் மாயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மாயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது ரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல் 4  தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்கின்றார்.

கரும்புலிகள் உட்பட விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களின் உயிர் தியாகம் தொடர்பாவும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்துப் பாடிவரும் மாயா பல இன்னல்களை அதனால் அனுபவித்திருந்தார்.
பொப் பாடகரான அமெரிக்கர் ஒருவரைத் திருமணம் முடித்துள்ள போதிலும், மாயாவிற்கும், அவரின் தாயாருக்கும் அமெரிக்கா செல்ல அந்த நாட்டின் அரசாங்கம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவை ஒன்றிற்கும் அஞ்சாத மாயா, தமிழ் மக்களிற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்.
அது மட்டுமன்றி தமிழ்நாட்டின் மற்றொரு தமிழனும் உலக மட்டத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒஸ்கார் உட்பட பல பன்னாட்டு விருதுகளுக்கு பரிந்துரைத்துப் போட்டியிடும் பணிகளிற்கு முன்னின்று உதவியதால், ஒஸ்கார் விருதைப் பெறும்போது ரஹ்மான் மாயாவிற்கு நன்றி கூறியது பலருக்கு நினைவிருக்கலாம்.
முற்று முழுதான வேறுபட்ட சூழலில் தொழில் நிமித்தம் வாழ்ந்தாலும், தனது இனத்தையும், மொழியையும், நாட்டுப்பற்றையும் மறக்காத மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி இன்று (14-06-2011) செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது ரசிகர்களிடம் மாயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மாயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது ரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல் 4  தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்கின்றார்.

கரும்புலிகள் உட்பட விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களின் உயிர் தியாகம் தொடர்பாவும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்துப் பாடிவரும் மாயா பல இன்னல்களை அதனால் அனுபவித்திருந்தார்.
பொப் பாடகரான அமெரிக்கர் ஒருவரைத் திருமணம் முடித்துள்ள போதிலும், மாயாவிற்கும், அவரின் தாயாருக்கும் அமெரிக்கா செல்ல அந்த நாட்டின் அரசாங்கம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவை ஒன்றிற்கும் அஞ்சாத மாயா, தமிழ் மக்களிற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்.
அது மட்டுமன்றி தமிழ்நாட்டின் மற்றொரு தமிழனும் உலக மட்டத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒஸ்கார் உட்பட பல பன்னாட்டு விருதுகளுக்கு பரிந்துரைத்துப் போட்டியிடும் பணிகளிற்கு முன்னின்று உதவியதால், ஒஸ்கார் விருதைப் பெறும்போது ரஹ்மான் மாயாவிற்கு நன்றி கூறியது பலருக்கு நினைவிருக்கலாம்.
முற்று முழுதான வேறுபட்ட சூழலில் தொழில் நிமித்தம் வாழ்ந்தாலும், தனது இனத்தையும், மொழியையும், நாட்டுப்பற்றையும் மறக்காத மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,

 வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது
 
அழகிய வடிவம் அழிகிறது 

உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 
 

















உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,

 வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது
 

எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் தூக்கலாம் என்பது போர் முறைக்கு கூட பொருந்தாத தியரி. ஆனால் சீமானை காலி செய்வதற்காக சிலர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே புடவையும் சுரிதாருமாக இருப்பதுதான் சோகம்.


பிரண்ட்ஸ் விஜயலட்சுமியின் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிற இந்த நேரத்தில் மேலும் ஒரு வழக்கு சீமானை சுற்றி பின்னப்படலாம் என்கிறது நம் காதுக்கு வந்த ரகசிய சோர்ஸ் ஒன்று.

தம்பி படத்தில் பூஜாவை நடிக்க வைத்திருப்பார் சீமான். ஒரு நடிகைக்கும் இயக்குனருக்குமான உறவு அதோடு முடிந்து போயிருக்கும். அப்படம் வெளிவந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் தனது சொந்தங்களை பார்க்க போயிருந்தாராம் பூஜா. அங்கு வைத்து அவரிடம் ஒரு கட்டாய புகார் எழுதி வாங்கியிருக்கிறதாம் இலங்கை அரசு.அதில் பூஜா சீமானை ஒரு குணக்கேடர் என்று சித்தரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சில தினங்களில் இந்த விவகாரமும் விஜயலட்சுமியின் புகாரோடு இணைந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

நன்றி மனிதன் 

எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் தூக்கலாம் என்பது போர் முறைக்கு கூட பொருந்தாத தியரி. ஆனால் சீமானை காலி செய்வதற்காக சிலர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே புடவையும் சுரிதாருமாக இருப்பதுதான் சோகம்.

நாவுக்கு ருசியான சமையல், வந்து சமைத்துப் பாருங்கள்

சமையல் கலை என்பது அனைவருக்கும் அமுது படைக்கும் ஒரு உயர்ந்த கலை. இந்த கலை எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது.
இருந்தாலும் விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் சமையல் மட்டுமல்ல உணவுப்பண்டம் மற்றும் பலகாரம் செய்யும் முறையிலும் நாம் திறமையானவர்களாக ஜொலிக்கலாம்.
சிறந்த உணவு என்றால் சமைக்காத உணவு தான். ஆனால் பெரும்பாலும் மக்கள் சமைக்காத உணவை விரும்புவதில்லை. காரணம் ருசி போன்ற காரணங்களால் மக்கள் நாளும் ஒரு சமையல் கலையை கற்றுக்கொண்டு முயற்சித்துகொண்டே இருக்கின்றனர். சமையல் உணவில் நமக்கு திறமையை வளர்ப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று பலவகையான சமையல் எப்படி செய்ய வேண்டும் என்பதை சில நிமிடங்களில் எளிதாக படத்துடன் அறியலாம். சாதாரண லெமன் சாதம் எப்படி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி இப்போது மிகப்பெரிய உணவு அங்காடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வரை அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை படத்துடன் விளக்கின்றனர்.
ஒவ்வொரு வகையான உணவு வகைகளையும் Slideshow மூலம் பார்க்கலாம். வாசகர்கள் தங்கள் அனுபவத்தையும் பதிவு செய்யலாம். தங்களுக்கு பிடித்த சமையல் வகைககளுக்கு மதிப்பெண் கொடுக்கலாம். மற்றவருடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது