April 2017

வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்?


இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைகான துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், வடமாகாணத்தில் சற்று வித்தியாசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், சிங்கள தலைவர்களுக்கு இடர்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் என அவர் என்னிடம் கூறினார். அத்துடன், சமஷ்டியை முன்வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சமஷ்டி முறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறை. பல நாடுகளில் மக்கள் தம்மை தாமே ஆளும் முறையினைக் கொடுத்துள்ளது. தன்னாட்சியை அந்தந்த பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதனால், அவர்களுக்கு தம்மைத் தாமே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகின்றது என்றேன். அதற்கு அவர், யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை பிரிவினையினை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக் காட்டினார். அதற்கு, பிரிவினைக்கு இடமளிப்பதா இல்லையா என்பது பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களும் எந்தளவிற்கு ஒத்துழைப்புடன் இருக்கின்றார்கள் என்பதில் தான் உள்ளது. பிரிவினைக்காக மக்கள் போராடியதன் காரணம், தமிழ் மக்களை அனைத்து விடயத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டமையினாலே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்களின் வேலைகளை நாங்களே செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் உள்ளீடு இல்லாமல், நாம் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஏதாவது வழியிருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மாகாணத்திற்கு போதியளவு அதிகாரத்தினைக் கொடுத்தால், போதுமானது தானே. அதுவும் அனைத்து அதிகாரங்களையும் மத்திக்கு வைத்துக்கொண்டு, மாகாணத்திற்கு கொடுத்தால், இதனடிப்படையில் தான் சமஷ்டி கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றேன் என சுட்டிக் காட்டினேன். வடகிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் எதிர்க்கின்றார்கள் நீங்கள் மட்டும் ஏன் இணைக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறீர்கள் என அவர் மீண்டும் கேள்வி எழுப்பினார். எனது சிறுவயதில் பார்த்த போது, கிழக்கு மாகாணத்தில் 5 முதல் 10 வீதத்திற்குட்பட்ட சிங்கள மக்களே இருந்தார்கள். தற்போது பார்த்தால், கிழக்கில் 31 வீதமான சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். பாரம்பரியமாக வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தும், அந்த இடங்களில் சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, வடக்கிலும் தற்போது இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கினை பிரித்து மேலாதிக்கத்தினை உருவாக்கி, மக்களை பலவிதமான குழப்பங்கள் மற்றும் கலவரங்களின் ஊடாக அவர்களது பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி, முழுமையாக சிங்கள ஆதிக்கத்தினை உருவாக்க பார்க்கின்றார்களோ என்ற அச்சத்தின் காரணமாக எமது பாதுகாப்பின் நிமித்தம் வடகிழக்கினை இணைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதென்பதனை எடுத்துக் காட்டினேன். அவர் அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்?


இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைகான துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், வடமாகாணத்தில் சற்று வித்தியாசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், சிங்கள தலைவர்களுக்கு இடர்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் என அவர் என்னிடம் கூறினார். அத்துடன், சமஷ்டியை முன்வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சமஷ்டி முறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறை. பல நாடுகளில் மக்கள் தம்மை தாமே ஆளும் முறையினைக் கொடுத்துள்ளது. தன்னாட்சியை அந்தந்த பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதனால், அவர்களுக்கு தம்மைத் தாமே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகின்றது என்றேன். அதற்கு அவர், யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை பிரிவினையினை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக் காட்டினார். அதற்கு, பிரிவினைக்கு இடமளிப்பதா இல்லையா என்பது பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களும் எந்தளவிற்கு ஒத்துழைப்புடன் இருக்கின்றார்கள் என்பதில் தான் உள்ளது. பிரிவினைக்காக மக்கள் போராடியதன் காரணம், தமிழ் மக்களை அனைத்து விடயத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டமையினாலே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்களின் வேலைகளை நாங்களே செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் உள்ளீடு இல்லாமல், நாம் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஏதாவது வழியிருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மாகாணத்திற்கு போதியளவு அதிகாரத்தினைக் கொடுத்தால், போதுமானது தானே. அதுவும் அனைத்து அதிகாரங்களையும் மத்திக்கு வைத்துக்கொண்டு, மாகாணத்திற்கு கொடுத்தால், இதனடிப்படையில் தான் சமஷ்டி கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றேன் என சுட்டிக் காட்டினேன். வடகிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் எதிர்க்கின்றார்கள் நீங்கள் மட்டும் ஏன் இணைக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறீர்கள் என அவர் மீண்டும் கேள்வி எழுப்பினார். எனது சிறுவயதில் பார்த்த போது, கிழக்கு மாகாணத்தில் 5 முதல் 10 வீதத்திற்குட்பட்ட சிங்கள மக்களே இருந்தார்கள். தற்போது பார்த்தால், கிழக்கில் 31 வீதமான சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். பாரம்பரியமாக வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தும், அந்த இடங்களில் சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, வடக்கிலும் தற்போது இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கினை பிரித்து மேலாதிக்கத்தினை உருவாக்கி, மக்களை பலவிதமான குழப்பங்கள் மற்றும் கலவரங்களின் ஊடாக அவர்களது பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி, முழுமையாக சிங்கள ஆதிக்கத்தினை உருவாக்க பார்க்கின்றார்களோ என்ற அச்சத்தின் காரணமாக எமது பாதுகாப்பின் நிமித்தம் வடகிழக்கினை இணைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதென்பதனை எடுத்துக் காட்டினேன். அவர் அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மாணவர் செயற்கைகோளை தயாரித்து சாதனை

தமிழ் மாணவன் தயாரித்துள்ள கையடக்க செயற்கோளானது நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் முகமது ரிபாக் ஷாருக், இவர் தற்போது 12ம் வகுப்பு இறுதி தேர்வினை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர். இவர் சென்னையில் உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இவரது ஆர்வத்தினை பார்த்த நிறுவனம், அறிவியல் ஆராய்ச்சிகளை செய்வதற்காக முகமது ரிபாக் ஷாருக்குக்கு உதவியுள்ளது. இதன் மூலம் நாசா நடத்திய செயற்கைகோள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 57 நாடுகளிலில் இருந்து பங்கேற்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவர்களில் இவர் ஒருவரே இந்தியனாவார்.3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ள 64 கிராம் எடையினை கொண்ட கையடக்க இந்த செயற்கைகோளுக்கு கலாமின் நினைவாக கலாம் சாட் என பெயரிடப்பட்டுள்ளது. டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர் வகையினை சேர்ந்த இந்த செயற்கைகோளானது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சூழல் மற்றும் இவற்றினால் செயற்கை கோள்களில் அடையும் மாற்றம் ஆகியவற்றினை அறிய உதவுகிறது. சர்-ஆர்பிட்டல் செயற்கைகோளான இதில் 8 சென்சார், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களான பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது 240 நிமிடங்கள் விண்ணில் இருந்துவிட்டு பின்னர் கடலில் விழுந்துவிடும். இதனை கண்டறிந்து மீண்டும் ஆய்வு செய்யலாம். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது ஜீன் மாதத்தில் விர்ஜீனியா ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதுகுறித்து முகமது ரிபாக், அடுத்ததாக செயற்கைகோளை நிரந்தரமாக விண்ணில் நிறுத்துவதற்கான ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன். மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கியுள்ளேன், அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

தமிழ் மாணவர் செயற்கைகோளை தயாரித்து சாதனை

தமிழ் மாணவன் தயாரித்துள்ள கையடக்க செயற்கோளானது நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் முகமது ரிபாக் ஷாருக், இவர் தற்போது 12ம் வகுப்பு இறுதி தேர்வினை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர். இவர் சென்னையில் உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இவரது ஆர்வத்தினை பார்த்த நிறுவனம், அறிவியல் ஆராய்ச்சிகளை செய்வதற்காக முகமது ரிபாக் ஷாருக்குக்கு உதவியுள்ளது. இதன் மூலம் நாசா நடத்திய செயற்கைகோள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 57 நாடுகளிலில் இருந்து பங்கேற்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவர்களில் இவர் ஒருவரே இந்தியனாவார்.3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ள 64 கிராம் எடையினை கொண்ட கையடக்க இந்த செயற்கைகோளுக்கு கலாமின் நினைவாக கலாம் சாட் என பெயரிடப்பட்டுள்ளது. டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர் வகையினை சேர்ந்த இந்த செயற்கைகோளானது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சூழல் மற்றும் இவற்றினால் செயற்கை கோள்களில் அடையும் மாற்றம் ஆகியவற்றினை அறிய உதவுகிறது. சர்-ஆர்பிட்டல் செயற்கைகோளான இதில் 8 சென்சார், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களான பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது 240 நிமிடங்கள் விண்ணில் இருந்துவிட்டு பின்னர் கடலில் விழுந்துவிடும். இதனை கண்டறிந்து மீண்டும் ஆய்வு செய்யலாம். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது ஜீன் மாதத்தில் விர்ஜீனியா ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதுகுறித்து முகமது ரிபாக், அடுத்ததாக செயற்கைகோளை நிரந்தரமாக விண்ணில் நிறுத்துவதற்கான ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன். மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கியுள்ளேன், அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

தசம பாகம் கட்டாயம் கொடுக்க வேண்டுமா ?

பணமும் கத்தரும்  பணத்தை எப்படி பயன்படுதுவீர்கள்.போதகர்கள் எப்படி சபை மக்களை ஏமாற்றுகின்றார்  

தசம பாகம் கட்டாயம் கொடுக்க வேண்டுமா ?

பணமும் கத்தரும்  பணத்தை எப்படி பயன்படுதுவீர்கள்.போதகர்கள் எப்படி சபை மக்களை ஏமாற்றுகின்றார்  

தமிழ்ச் சமூகத்தின் தாயகத்தில் நீதியும் ஆற்றுதலும் கிடைக்க வேண்டும் என்பதற்கான தேடல்: – ஜோன் ரொறி

ரொறொன்ரோ மேயர் ஜோன்ரோறி அவர்கள் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலே இலங்கையின் வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்ற மேயர் ரொறன்ரோ நகரத்திலுள்ள தமிழ்ச் சமூகம் எங்கேயிருந்து வந்தார்கள்? ஏன் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்வதுடன் இலங்கையில்; நீதிக்கும் அமைதிக்குமான வழிவகைகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

இப்பயணம் தொடர்பாக மேயர் ஜோன்ரோறி அவர்கள் எழுதிய அனுபவப் பகிர்வின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம்: “ரொறொன்ரோவில் வாழுகின்ற தமிழ்ச்சமூகத்தினரை நன்கு தெரிந்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்திருப்பர். தமிழர்கள் தொழில் முனைப்புக் கொண்டு வெற்றிகரகமாகச் செயற்படுபவர்கள்> நல்ல குடிமக்கள்> சிறந்த அயலவர்கள்> நல்ல நண்பர்கள் என்பதைப் பலரும் அறிவார்கள். தமிழர்களுடைய தாய்நாட்டைப் பற்றி உங்களுக்குப் பெருமளவில் தெரியாமல் இருக்கலாம்> இலங்கையில் இருந்து வந்த தமிழர்களே பெரும்பாலும் ரொறன்ரோவில் வசிக்கிறார்கள்.

இலங்கையிலே நடைபெற்ற நீண்ட துன்பியலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லது அதிலிருந்து விலகிக்கொள்வதற்காக நாட்டைவிட்டு இங்கு வந்தவர்களே இத்தமிழர்கள். இந்த யுத்தமானது பல தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒன்றாகும். இத்தகைய சூழலிற்தான் அண்மையிலே நான் ரொறொன்ரோ நகரத்தின் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கனடியரான நீதன் சண்> மைக்கல் தொம்சன் ஆகிய நகரசபை உறுப்பினர்களுடன் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு நான் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன். ஆனால் அந்த அழகான நாட்டின் வடபகுதிக்குச் செல்வதற்கு என்னால் முடியவில்லை. அந்த நேரத்தில் அங்கு போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் என் வடபகுதிக்கான பயணம் தடைசெய்யப்பட்டது.

யுத்தச் செயற்பாடுகள் சில வருடங்களிற்கு முன்னர் முடிவுற்றிருக்கும் நிலையில் நான் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள சமூகங்களையும் சந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியும் மன ஆற்றுகையும் அடையப்பெறுவதற்காக என்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விபரமான விளக்கத்துடன் திரும்பி வந்துள்ளேன்.

வடபகுதிக்குச் செல்லும்போது உங்களுக்குத் தென்படக்கூடிய முதலாவது விடயம் யாதெனில் மிகையாகக் காணப்படுகின்ற இராணுவத்தின் பிரசன்னமே.

ஒரு சனநாயக நாட்டில் மக்கள் வாழும் பகுதியில் எதிர்பார்பதைவிட பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்ட தன்மையே அங்கு காணப்படுகின்றது. பெருமளவு இராணுவத்தளங்கள் குறிப்பிட்ட மைற்கற்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மூன்று தமிழ் குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற அடிப்படையில் அங்கே இராணுவப்படை இருப்பதாகவும் தமிழ் மக்களிடமிருந்து வற்புறுத்திப் பறிக்கப்பட்ட நிலங்களில்தான் இப்படைகள் குடிகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமது தேவைகளுக்காக இராணுவம் பயன்படுத்துவதும் மக்கள் மூச்சுவிடத் திணறுகின்ற அளவுக்கு இராணுவத்தின் நடமாட்டமும் இணைந்ததான இந்தச் செயற்பாடே இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களின் நிம்மதி மிக்க வாழ்வுக்கு பலத்த அச்சுறுத்தலாக இருக்கின்றது.

நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது தமிழர் பறிகொடுத்த தமது உறவுகளை நினைவு கொள்வதற்கு எந்தவிதமான நினைவுச்சிலைகளோ நினைவிடமோ வடமாகாணத்தில் இல்லை. இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற இடமான முள்ளிவாய்க்காலிலே தமிழர் ஒரு தற்காலிக நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தி உள்ளனர். இறுதிக்கட்டதின் போது நாற்பதினாயிரம் (40>000) உயிர்கள் இழக்கப்பட்டதாக ஐக்கியநாடுகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த நினைவிடத்திலே ஒரு சுடரை ஏற்றி மலர்கள் இட்டு ஒரு கணம் அந்த நினைவை மீட்டியது என் மனதை நெகிழச் செய்வதாக இருந்தது.

நான் அங்கிருந்த வேளையில் அமைதியான வழியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் குறிப்பிட்ட ஒரு எதிர்ப்புப்பேரணியிலே நடுத்தர வயதுள்ள பெண்கள் ஒரு குழுவாகக் காணப்பட்டனர். அவர்கள் இளம் ஆண்களின் படங்களைத் தாங்கிய வண்ணம் சோகம் நிறைந்திருந்தனர். அது எனது மனதை மிகவும் தொட்டதாக இருந்தது.

இந்தப்படங்கள் அவர்களின் மகன்மார் பேரன்மார்களுடையது என்பதனை நான் அவர்களுடன் பேசியபோது உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடைசிக் கட்டப்போரின்போது பிடித்துச் செல்லப்பட்டதாகப் பலருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை காணாமல் போன இந்த ஆண்கள் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டதாகவோ அல்லது அவர்களைக் கண்டதாகவோ இதுவரை எதுவும் இல்லை.

இதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் சில வருடங்களுக்கு முன்பு சுற்றிவளைக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட பின்பு  இப்பிள்ளைகளின் கதி என்னவாயிற்று என்பது பற்றி ஏதும் அறிய முடியவில்லை என்றால் எத்தகைய துயரம் எமக்குண்டாகும்?

இது தொடர்பாக அண்மையில் அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்திருந்தும் எல்லாமே பெருமளவில் மூடி மறைக்கப்படும் மர்மமாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து தங்களை விட அரசாங்கத்திற்கு அதிகம் தெரிந்திருக்கக்கூடிய நிலையில் இருக்கும் தாய்மார்களை அவர்களின் நிலையிலிருந்து எண்ணிப்பாருங்கள். ஒரு தாத்தாவாக, அப்பாவாக என்னை உணர்ந்து அவர்களின் வேதனையைக் அந்தக் கண்களில் கண்டேன். அவர்களின் துயரத்தை ஆழமாக விளங்கிக்கொண்டேன்.

செய்திகள் கெட்டவையாக இருப்பினும் கூட  மனம் புண்பட்டிருக்கும் இந்தத் தாய்மாருக்கும் ஒரு முடிவு தேவை. இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்தக் காணாமற்போன பிள்ளைகள் பற்றி அரசாங்கத்திடம் உள்ள பழைய அறிக்கைகளை வெளியிடுவது, ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

வடமாகாண முதலமைச்சர் கூறுவது போன்று உண்மையிலே ஒரு சுதந்திரமான, பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றிலே சர்வதேச சமூகம் பங்கு கொள்ளும்போதுதான் மனித உரிமை அத்து மீறல்கள்  காணாமற் போனோர், இறந்தோர் பற்றிய உண்மையான நீதியை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனபதுதான் நியாயமானதாக அமையும்.

இப்பொறுப்புக்கூறும் படிமுறையை அமைக்கும் போது சர்வதேச ரீதியில் மதிக்கக்கூடிய நீதியாளர்களை அனுமதிக்கின்ற செயலே பயனுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தவும் உண்மையான மாற்றத்தை நிகழ்த்தவும் அமைதியினைக் கொண்டுவரவும்; வல்ல நம்பிக்கையினை அளிப்பதாக அமையும்.

பொருளாதார சமூக முதலீட்டிற்கான ஒரு திட்டம் இப்பிரதேசத்திற்குப் பெருமளவில் தேவைப்படுவதாக உள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான இடங்கள் போன்று முன்னேறுவதற்கான வழிகளையும் வேலை வாய்ப்புகளையும் தமிழர்கள் அடைவது என்பது தமிழ் மக்களுக்கான சமூக நீதியை அவர்கள் அடைவதற்கும் வழி வகுக்கும்.

இதற்குரிய தொடக்கத்திற்கான முனைப்பு கூடுதலாகச் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தே வரவேண்டும். இருந்தும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் ரொறொன்ரொ நகரத்திற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் நாம் கையெழுதிட்டுள்ளோம் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் கல்வியிற் தொடங்கி பொருளாதார அபிவிருத்தி போன்ற எல்லா விடயங்களிலும் ஒருமித்துச் செயற்பட முடியும்.

இந்த உடன்படிக்கை போரின்போது அழிக்கப்பட்ட சரித்திர ரீதியான நூலகத்திற்கு உதவுவதையும் உள்ளிட்டதாக அமையும். இப்புரிந்துணர்வு அறிக்கையின் அடிப்படையில் நல்லெண்ணத்தினையும் கூட்டு ஒத்துழைப்பினையும் வெளிக்காட்டும் ஒரு அடையாளக் குறியீடாக ரொறொன்ரொ பொது நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துச் சென்று யாழ். பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளோம்.

சிறிலங்காவின் வடபகுதிக்கு பயணம் செய்த அனுபவம் என்பது மாறுபட்டதாக இருந்தது.

மனக்கலக்கத்தை அனுபவித்த மக்களைச் சந்தித்ததன் மூலம் எமது மனம் நெகிழ்வுற்றது. இம்மக்கள் அரசாங்கத்தினால் இதுவரை போதுமான அளவு நீதியையும் உண்மையான மன ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையையும் பெறவில்லை. பல வருடங்களாக முன்னைய அரசாங்கங்களால் மறுக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க தற்போதைய அரசாங்கம் குறைந்த அளவில் சில சிறிய படிகளை எடுத்திருப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்கான அறிகுறி தென்படுகின்றது.

தற்போதுள்ள சவால் என்பது அடுத்த கட்டமாக பெரிய படிகளை அரசாங்கம் எடுப்பது என்பதாகும். காணாமற்போன பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் உரிமையும் இத்தாய்மாருக்கு இருப்பதால் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும். அளவுக்கதிமான இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும்.

காணிச் சொந்தக்காரர்களிடம் பெருமளவிலான காணியைத் திரும்பவும் கொடுத்தல்  சர்வதேச பங்களார்களின் ஈடுபாட்டுடன் என்ன நடைபெற்றது என்பதனை அறிந்து கொள்ள ஒரு பொறுப்புக்கூறும் படிமுறையை அமைத்தல்  இப்பிரதேசத்தினதும் தமிழ் மக்களிற்கும் நம்பிக்கை உணர்வினையும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளவும் உதவி செய்யும் பொருட்டு ஒரு உண்மையான திட்டத்தினை உருவாக்குதல் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இங்கே ரொறொன்ரோவில் உள்ள சமூகத்துடன் இணைந்து இவ்விடயங்கள் சாத்தியமாகும் பொருட்டு பணியாற்றுவதற்காக நான் காத்திருக்கின்றேன்.

தமிழ்ச் சமூகத்தின் தாயகத்தில் நீதியும் ஆற்றுதலும் கிடைக்க வேண்டும் என்பதற்கான தேடல்: – ஜோன் ரொறி

ரொறொன்ரோ மேயர் ஜோன்ரோறி அவர்கள் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலே இலங்கையின் வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்ற மேயர் ரொறன்ரோ நகரத்திலுள்ள தமிழ்ச் சமூகம் எங்கேயிருந்து வந்தார்கள்? ஏன் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்வதுடன் இலங்கையில்; நீதிக்கும் அமைதிக்குமான வழிவகைகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

இப்பயணம் தொடர்பாக மேயர் ஜோன்ரோறி அவர்கள் எழுதிய அனுபவப் பகிர்வின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம்: “ரொறொன்ரோவில் வாழுகின்ற தமிழ்ச்சமூகத்தினரை நன்கு தெரிந்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்திருப்பர். தமிழர்கள் தொழில் முனைப்புக் கொண்டு வெற்றிகரகமாகச் செயற்படுபவர்கள்> நல்ல குடிமக்கள்> சிறந்த அயலவர்கள்> நல்ல நண்பர்கள் என்பதைப் பலரும் அறிவார்கள். தமிழர்களுடைய தாய்நாட்டைப் பற்றி உங்களுக்குப் பெருமளவில் தெரியாமல் இருக்கலாம்> இலங்கையில் இருந்து வந்த தமிழர்களே பெரும்பாலும் ரொறன்ரோவில் வசிக்கிறார்கள்.

இலங்கையிலே நடைபெற்ற நீண்ட துன்பியலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லது அதிலிருந்து விலகிக்கொள்வதற்காக நாட்டைவிட்டு இங்கு வந்தவர்களே இத்தமிழர்கள். இந்த யுத்தமானது பல தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒன்றாகும். இத்தகைய சூழலிற்தான் அண்மையிலே நான் ரொறொன்ரோ நகரத்தின் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கனடியரான நீதன் சண்> மைக்கல் தொம்சன் ஆகிய நகரசபை உறுப்பினர்களுடன் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு நான் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன். ஆனால் அந்த அழகான நாட்டின் வடபகுதிக்குச் செல்வதற்கு என்னால் முடியவில்லை. அந்த நேரத்தில் அங்கு போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் என் வடபகுதிக்கான பயணம் தடைசெய்யப்பட்டது.

யுத்தச் செயற்பாடுகள் சில வருடங்களிற்கு முன்னர் முடிவுற்றிருக்கும் நிலையில் நான் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள சமூகங்களையும் சந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியும் மன ஆற்றுகையும் அடையப்பெறுவதற்காக என்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விபரமான விளக்கத்துடன் திரும்பி வந்துள்ளேன்.

வடபகுதிக்குச் செல்லும்போது உங்களுக்குத் தென்படக்கூடிய முதலாவது விடயம் யாதெனில் மிகையாகக் காணப்படுகின்ற இராணுவத்தின் பிரசன்னமே.

ஒரு சனநாயக நாட்டில் மக்கள் வாழும் பகுதியில் எதிர்பார்பதைவிட பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்ட தன்மையே அங்கு காணப்படுகின்றது. பெருமளவு இராணுவத்தளங்கள் குறிப்பிட்ட மைற்கற்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மூன்று தமிழ் குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற அடிப்படையில் அங்கே இராணுவப்படை இருப்பதாகவும் தமிழ் மக்களிடமிருந்து வற்புறுத்திப் பறிக்கப்பட்ட நிலங்களில்தான் இப்படைகள் குடிகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமது தேவைகளுக்காக இராணுவம் பயன்படுத்துவதும் மக்கள் மூச்சுவிடத் திணறுகின்ற அளவுக்கு இராணுவத்தின் நடமாட்டமும் இணைந்ததான இந்தச் செயற்பாடே இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களின் நிம்மதி மிக்க வாழ்வுக்கு பலத்த அச்சுறுத்தலாக இருக்கின்றது.

நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது தமிழர் பறிகொடுத்த தமது உறவுகளை நினைவு கொள்வதற்கு எந்தவிதமான நினைவுச்சிலைகளோ நினைவிடமோ வடமாகாணத்தில் இல்லை. இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற இடமான முள்ளிவாய்க்காலிலே தமிழர் ஒரு தற்காலிக நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தி உள்ளனர். இறுதிக்கட்டதின் போது நாற்பதினாயிரம் (40>000) உயிர்கள் இழக்கப்பட்டதாக ஐக்கியநாடுகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த நினைவிடத்திலே ஒரு சுடரை ஏற்றி மலர்கள் இட்டு ஒரு கணம் அந்த நினைவை மீட்டியது என் மனதை நெகிழச் செய்வதாக இருந்தது.

நான் அங்கிருந்த வேளையில் அமைதியான வழியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் குறிப்பிட்ட ஒரு எதிர்ப்புப்பேரணியிலே நடுத்தர வயதுள்ள பெண்கள் ஒரு குழுவாகக் காணப்பட்டனர். அவர்கள் இளம் ஆண்களின் படங்களைத் தாங்கிய வண்ணம் சோகம் நிறைந்திருந்தனர். அது எனது மனதை மிகவும் தொட்டதாக இருந்தது.

இந்தப்படங்கள் அவர்களின் மகன்மார் பேரன்மார்களுடையது என்பதனை நான் அவர்களுடன் பேசியபோது உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடைசிக் கட்டப்போரின்போது பிடித்துச் செல்லப்பட்டதாகப் பலருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை காணாமல் போன இந்த ஆண்கள் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டதாகவோ அல்லது அவர்களைக் கண்டதாகவோ இதுவரை எதுவும் இல்லை.

இதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் சில வருடங்களுக்கு முன்பு சுற்றிவளைக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட பின்பு  இப்பிள்ளைகளின் கதி என்னவாயிற்று என்பது பற்றி ஏதும் அறிய முடியவில்லை என்றால் எத்தகைய துயரம் எமக்குண்டாகும்?

இது தொடர்பாக அண்மையில் அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்திருந்தும் எல்லாமே பெருமளவில் மூடி மறைக்கப்படும் மர்மமாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து தங்களை விட அரசாங்கத்திற்கு அதிகம் தெரிந்திருக்கக்கூடிய நிலையில் இருக்கும் தாய்மார்களை அவர்களின் நிலையிலிருந்து எண்ணிப்பாருங்கள். ஒரு தாத்தாவாக, அப்பாவாக என்னை உணர்ந்து அவர்களின் வேதனையைக் அந்தக் கண்களில் கண்டேன். அவர்களின் துயரத்தை ஆழமாக விளங்கிக்கொண்டேன்.

செய்திகள் கெட்டவையாக இருப்பினும் கூட  மனம் புண்பட்டிருக்கும் இந்தத் தாய்மாருக்கும் ஒரு முடிவு தேவை. இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்தக் காணாமற்போன பிள்ளைகள் பற்றி அரசாங்கத்திடம் உள்ள பழைய அறிக்கைகளை வெளியிடுவது, ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

வடமாகாண முதலமைச்சர் கூறுவது போன்று உண்மையிலே ஒரு சுதந்திரமான, பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றிலே சர்வதேச சமூகம் பங்கு கொள்ளும்போதுதான் மனித உரிமை அத்து மீறல்கள்  காணாமற் போனோர், இறந்தோர் பற்றிய உண்மையான நீதியை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனபதுதான் நியாயமானதாக அமையும்.

இப்பொறுப்புக்கூறும் படிமுறையை அமைக்கும் போது சர்வதேச ரீதியில் மதிக்கக்கூடிய நீதியாளர்களை அனுமதிக்கின்ற செயலே பயனுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தவும் உண்மையான மாற்றத்தை நிகழ்த்தவும் அமைதியினைக் கொண்டுவரவும்; வல்ல நம்பிக்கையினை அளிப்பதாக அமையும்.

பொருளாதார சமூக முதலீட்டிற்கான ஒரு திட்டம் இப்பிரதேசத்திற்குப் பெருமளவில் தேவைப்படுவதாக உள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான இடங்கள் போன்று முன்னேறுவதற்கான வழிகளையும் வேலை வாய்ப்புகளையும் தமிழர்கள் அடைவது என்பது தமிழ் மக்களுக்கான சமூக நீதியை அவர்கள் அடைவதற்கும் வழி வகுக்கும்.

இதற்குரிய தொடக்கத்திற்கான முனைப்பு கூடுதலாகச் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தே வரவேண்டும். இருந்தும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் ரொறொன்ரொ நகரத்திற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் நாம் கையெழுதிட்டுள்ளோம் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் கல்வியிற் தொடங்கி பொருளாதார அபிவிருத்தி போன்ற எல்லா விடயங்களிலும் ஒருமித்துச் செயற்பட முடியும்.

இந்த உடன்படிக்கை போரின்போது அழிக்கப்பட்ட சரித்திர ரீதியான நூலகத்திற்கு உதவுவதையும் உள்ளிட்டதாக அமையும். இப்புரிந்துணர்வு அறிக்கையின் அடிப்படையில் நல்லெண்ணத்தினையும் கூட்டு ஒத்துழைப்பினையும் வெளிக்காட்டும் ஒரு அடையாளக் குறியீடாக ரொறொன்ரொ பொது நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துச் சென்று யாழ். பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளோம்.

சிறிலங்காவின் வடபகுதிக்கு பயணம் செய்த அனுபவம் என்பது மாறுபட்டதாக இருந்தது.

மனக்கலக்கத்தை அனுபவித்த மக்களைச் சந்தித்ததன் மூலம் எமது மனம் நெகிழ்வுற்றது. இம்மக்கள் அரசாங்கத்தினால் இதுவரை போதுமான அளவு நீதியையும் உண்மையான மன ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையையும் பெறவில்லை. பல வருடங்களாக முன்னைய அரசாங்கங்களால் மறுக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க தற்போதைய அரசாங்கம் குறைந்த அளவில் சில சிறிய படிகளை எடுத்திருப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்கான அறிகுறி தென்படுகின்றது.

தற்போதுள்ள சவால் என்பது அடுத்த கட்டமாக பெரிய படிகளை அரசாங்கம் எடுப்பது என்பதாகும். காணாமற்போன பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் உரிமையும் இத்தாய்மாருக்கு இருப்பதால் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும். அளவுக்கதிமான இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும்.

காணிச் சொந்தக்காரர்களிடம் பெருமளவிலான காணியைத் திரும்பவும் கொடுத்தல்  சர்வதேச பங்களார்களின் ஈடுபாட்டுடன் என்ன நடைபெற்றது என்பதனை அறிந்து கொள்ள ஒரு பொறுப்புக்கூறும் படிமுறையை அமைத்தல்  இப்பிரதேசத்தினதும் தமிழ் மக்களிற்கும் நம்பிக்கை உணர்வினையும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளவும் உதவி செய்யும் பொருட்டு ஒரு உண்மையான திட்டத்தினை உருவாக்குதல் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இங்கே ரொறொன்ரோவில் உள்ள சமூகத்துடன் இணைந்து இவ்விடயங்கள் சாத்தியமாகும் பொருட்டு பணியாற்றுவதற்காக நான் காத்திருக்கின்றேன்.

டாஸ்மாக் ஷாப் மூடப்பட

டாஸ்மாக்  ஷாப் மூடப்பட ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள் . தேவன் தந்த விடுதலைகாக  ஸ்தோத்திரம் தேவன் தந்த விடுதலைகாக ஸ்தோத்திரம்

டாஸ்மாக் ஷாப் மூடப்பட

டாஸ்மாக்  ஷாப் மூடப்பட ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள் . தேவன் தந்த விடுதலைகாக  ஸ்தோத்திரம் தேவன் தந்த விடுதலைகாக ஸ்தோத்திரம்

தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய

தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய  அவர்கள் ஆசிர்வதிக்கபட தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள்

தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய

தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய  அவர்கள் ஆசிர்வதிக்கபட தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள்