புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுவது எப்படி ?

புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுவது எப்படி ?


நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம்  தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து  வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம்   முதல் சிகரட்  இலவசமாக  ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான்  தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி  செய்வதால் நண்பர்கள் எங்கே  வெறுத்து விடுவார்கள் என்று பயந்து  புகைபிடிக்க  தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்


கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ?
எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்