தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு

தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு


அதரிசனமான கடவுள் தரிசனமாக எடுத்தார் ஏழை மனுவுரு 
 பாவ இருளில் இருந்து மனிதனை மீட்க எடுத்தார் ஏழை மனுவுரு 
தேவனின் நித்திய அன்பை மனிதனுக்கு வெளிபடுத்த எடுத்தார் ஏழை மனுவுரு 
 தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு 
மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த முறிந்து போன உறவை புதுபிக்க எடுத்தார் ஏழை மனுவுரு 
மனிதனுக்கு நித்திய வாழ்வை வழங்க எடுத்தார் ஏழை மனுவுரு 
மனித இனத்திற்காக மட்டுமே எடுத்தார் ஏழை மனுவுரு 
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு 
 என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக. உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்