பந்தயத்தின் மூலம், பணம் சம்பாதித்த எலிசபெத் மகாராணி

பந்தயத்தின் மூலம், பணம் சம்பாதித்த எலிசபெத் மகாராணி

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் குதிரை பந்தயம் மூலம் இதுவரை 6 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை அவருடைய மாட்சிமைக்கு கீழ் உள்ள குதிரைகள் 2815 பந்தயங்களில் பங்கேற்று 451 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பரிசி கிடைத்துள்ளது. அத்துடன் அதிக வெற்றிகள் பெற்ற குதிரைகளுக்கு சொந்தக்காரராக மகாராணி 11 ஆவது இடத்தில் உள்ளார்.

குதிரை பந்தயத்தை 1988 ஆம் ஆண்டே ஆரம்பித்திருந்தாலும் கடந்த 2016 ஆம் ஆண்டே குதிரை பந்தயத்தில் சிறப்பானதாக இருந்துள்ளது. ஏனெனில் 2016 ஆம் ஆண்டே பரிசாக அதிகளவு பணத்தை பெற்றுள்ளார்.

91 வயதாகியும் குதிரை பந்தயத்தில் இன்னமும் மகாராணிக்கு ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.