என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே

என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே


பாவ இருள் நீங்க மானிடரான  பரம ஒளியே
மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே
உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே
எம் ஆத்துமாவை அமைதிபடுத்த வந்த  அருள் ஒளியே
ஒருவரும் ஒருபோதும் காண கூடாத ஒளியே
எம் கண்கள் காண அவதரித்தீரே
வான தூதர்கள் பரிசுத்தவான்களினால் புகழபடுபவரே
என்னை காண பாவ உலகத்தில் ஏழ்மையில் அவதரித்தீரே
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
என்னுயிரை காக்க உன்னுயிரை கொடுக்க  மானிடன் ஆனீரே
என்னை பரலோகம் கொண்டு செல்ல பாலகனாக  வந்தவரே
நம் முன்னோர் மன்னவை கொடுத்தவரே
நமக்கோ ஜீவ மன்னாவாக பாலகனாக அவதரித்தீரே
அன்பிற்கு வரைவிலக்கணம் கொடுக்க வந்தவரே
எனக்காக யாவற்றையும் செய்து முடிக்க பாலகனாக  வந்தவரே

எனது இணையதள வாசகர் அனைவருக்கும்  எனது நத்தார் வாழ்த்துக்கள்  
கத்தர் இயேசு நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்