இரண்டாம் ஆண்டு நினைவலைகள்

இரண்டாம் ஆண்டு நினைவலைகள்

                          இரண்டாம் ஆண்டு நினைவலைகள்  

                                                  ஆசீர்வாதம்
                                        அகன்ற திகதி 10- 09- 2009
இதயத்துடிப்பினிலே........................

என்னையும் பிள்ளைகளையும் விட்டு இறைவனடி சென்றீர்களே!

அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்

உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்

பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி

பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!

குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த

நீங்கள் பிரிய மனம் வந்ததோ!

அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!

உம் அன்பு மொழி எப்போது கேட்போம்

வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் உன் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்

இரண்டு ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது

உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்


ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!


உங்கள் பிரிவால் துயரும்
மனைவி, பிள்ளைகள்
பிரான்ஸ்