தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்திலேயே போட்டி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்திலேயே போட்டி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யானது இடம்பெறவுள்ள உள்@ ராட்சி தேர்தலில் பொது அமைப் புக்களுடன் இணைந்து வடக்கு கிழக்கு முழுவதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே போட்டி யிடப்போவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் தம்மோடு இணைந்து செயற்படுபவர்களையும் இணைத் துக் கொண்டு செயற்படவுள்ளதாக வும் அக் கட்சியானது அறிவித்துள் ளது.
எதிர்வரும் உள்@ராட்சி தேர் தலில் பொது எதிரணியொன்று களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின ரும் தமிழ் மக்கள்பேரவையுடைய ஆதரவுடன் இணைந்து செயற் பட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப் பொது எதி ரணியின் சின்னமாக தமிழர் விடுதலை கூட் டணியின் உதயசூரியன் சின்னம் பிரஸ்தாபி க்கப்பட்ட நிலையில் அச் சின்னத்தில் இணை ந்து போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியி னருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இது தொட ர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது,
இவ் உள்@ராட்சி தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இல ங்கை தமிழ் காங்கிரஸின் சின்னமான சைக் கிள் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த பொது அமை ப்புக்களுடன் இணைந்தே போட்டியிடவுள் ளோம். எமது கொள்கையில் இருந்து நாம் விடுபட போவதில்லை. எனவே தான் சைக் கிள் சின்னத்திலேயே போட்டியிடப்போகின்றோம்.

மேலும் எமது கொள்கையை ஏற்று எமது கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எவர் தயாராக இருந்தாலும் அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் செயற்பட தயா ராகவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.