சுயநலமே அரசியல் பிளவுகளை சரி செய்யும் என்கிறார் விக்கி

சுயநலமே அரசியல் பிளவுகளை சரி செய்யும் என்கிறார் விக்கி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் – “ சுய நலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரி செய்யவும் உதவும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் – “ சுய நலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரி செய்யவும் உதவும்.
1949ல் கொள்கை நிமித்தம் தந்தை செல்வா தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் தறுவாயில் சுயநலங் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர். ஆகவே, பிளவுகள் கொள்கை நிமித்தமும் ஏற்படக் கூடும், சுயநல காரணங்களுக்காகவும் ஏற்படலாம்.

இன்றைய பிளவு நிலை எவ்வாறு ஏற்பட்டதென்பதை நீங்களே ஆய்தறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானியரின் வேலை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி, யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என, அவர் கூறியுள்ளார்.