பிரான்ஸ் பள்ளிகளில், செல்போன்களுக்கு வரும் தடை

பிரான்ஸ் பள்ளிகளில், செல்போன்களுக்கு வரும் தடை

பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிற்கு மாணவர்கள் தொலைபேசி கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் தொலைபேசி பாவிப்பதற்கு ஏற்கனவே தடை உள்ளது. ஆனாலும் தற்று போது பிரான்ஸ் கல்வி அமைச்சர் Jean Michel Blanquer அறிவித்துள்ள தடையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் தொலைபேசி கொண்டுவருவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தடையானது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானின் தேர்தல் கொள்கைகளில் ஒன்றாகும்.

இருப்பினும் இத் தடையை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனென்றால் வகுப்புக்கள் முடிந்து வெளியில் செல்லும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் தொடர்பில் இருக்க முடியாது என கூறியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பிரான்ஸில் 80 சதவீத பதின்ம பருவத்தினர் ஸ்மாட் போன்களை வைத்துள்ளனர். தற்போது ஸ்மாட் போன் பயன்படுத்தும் ஆரம்பப்பள்ளி மாணவர்களது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.